சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 19
2 மதுவும் பெண்களும் ஞானிகளை வழுவச் செய்கின்றனர்@ அறிவாளிகளை அவமானப்படுத்துகின்றனர்.
3 வேசிகளோடு சேர்கிறவன் தீ நெறியாளன் ஆவான். அழுகலும் புழுக்களும் அவனைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்ளும். அவன் பெரிய எடுத்துக்காட்டாக விளங்குவான். அவன் ஆன்மா கணக்கினின்று எடுக்கப்படும்.
4 உடனே நம்புகிறவன் மனத்தில் கவனக்குறைவுள்ளவன்@ அதனால் அவன் மதிப்பிற்குக் குறைவு ஏற்படும். அவன் தன் ஆன்மாவிற்கே தீங்கு செய்பவன் போலும் எண்ணப்படுவான்.
5 அக்கிரமத்தில் மகிழ்ச்சி கொள்கிறவன் நிந்திக்கப்படுவான். கண்டிப்பை வெறுக்கிறவனின் வாழ்நாள் குறைவுபடும். வீண்பேச்சுகளைப் பகைக்கிறவன் கெடுதியை நீக்குகின்றான்.
6 தன் ஆன்மாவிற்குத் துரோகமாய்ப் பாவம் செய்கிறவன் மனவருத்தமடைவான். தீயகுணத்தில் விருப்பம் கொள்கிறவன் நிந்திக்கப்படுவான்.
7 கெடுதியும் கடுமையுமுள்ள வார்த்தையை மறுபடியும் சொல்லாதே@ அதனால் உனக்குக் குறையொன்றும் வராது.
8 நண்பனுக்கும் பகைவனுக்கும் உன் மனத்திலிருப்பதை வெளியிடாதே. நீ குற்றம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்தாதே.
9 ஏனென்றால், அவர்கள் நீ சொல்வதைக் கேட்டு, நீ செய்வதைப் பரிசோதித்து, உன் குற்றத்தை மன்னிப்பது போலக் காட்டி உன்னைப் பகைப்பார்கள்@ இவ்வாறே உன் காரியத்தில் எப்போதும் நடந்து வருவார்கள்.
10 மற்றவனுக்கு விரோதமாய்க் கேள்விப்பட்டதை உன் உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொள். அப்படிச் செய்வதனால் உனக்குக் கெடுதி நேரிடாதென்று நம்பு.
11 பிள்ளை பெறுகிற பெண் அடிக்கடி மூச்சு விடுவது போல, அறிவிலி ஒரு வார்த்தையினின்று வேறுபல வார்த்தைகளைப் பிறப்பிக்கிறான்.
12 மூடனின் இதயத்தில் வார்த்தை சதையுள்ள தொடையில் பதிக்கப்பட்ட அம்பைப் போன்றது.
13 உன் நண்பனுக்கு அறிவுரை கூறு@ ஏனென்றால் அவன் சில வேளை கண்டுபிடியாமல், நான் குற்றம் செய்ததில்லை என்பான். அவன் செய்திருந்தால், திரும்பவும் செய்யாதபடி கண்டனை செய்.
14 மற்றவனுக்கும் அறிவுரை கூறு. அவன் சில வேளை கொடும் சொல் சொல்லியிருக்க மாட்டான்@ சொல்லியிருந்தால், மறுபடியும் சொல்லாதபடிக்கு அறிவுரை கூறு.
15 நண்பனுக்கு அறிவுரை கூறு. ஏனென்றால் குறை அடிக்கடி நேரும்.
16 சொல்வதெல்லாம் நம்பாதே. நாவினால் தவறிப் போகாதவன் இதயத்திலும் தவறுவதில்லை.
17 தன் நாவினால் தவறிப் போகாதவன் யார்? அயலானை அச்சுறுத்துவதற்கு முன் அவனுக்கு அறிவுரை கூறு.
18 உன்னத கடவுளுக்கு நீ பயப்படுவாயாக@ ஏனென்றால், எல்லா ஞானமும் தெய்வ பயத்தில் அடங்கியிருக்கிறது. அதுவே கடவுளுக்குப் பயந்து நடக்கக் கற்பிக்கின்றது. ஞானத்தின் முழுமையில் தான் கட்டளையும் ஒழுங்கும் அடங்கியுள்ளன.
19 அக்கிரமத்தின் நெறி ஞானமன்று. பாவிகளின் நடத்தை விவேகமன்று.
20 அருவருக்கப்படத் தக்கதும், ஞானத்தில் குறைந்து போகும் மூடத்தன்மையுள்ளதுமான அக்கிரமம் உண்டு.
21 தெய்வ பயம் இருந்து ஞானம் குறைந்து போய் அறிவு மட்டமாய் இருக்கும் மனிதன், அறிவு மிஞ்சிப் போய் உன்னத கடவுளின் கட்டளைகளை மீறுகிறவனை விட மேலானவன்.
22 தப்பாது நிறைவேறும் நுண்ணுணர்வு அக்கிரமமானது.
23 உண்மையைத் தெரிவிக்கத் தெளிவான வார்த்தை சொல்லுகிறவனும் உண்டு@ உள்ளம் கபடு நிறைந்திருக்கக் கபடான எண்ணத்தோடு தன்னைத் தாழ்த்துகிறவனும் உண்டு.
24 மிதமிஞ்சின தாழ்ச்சியில் தன்னை அதிகமாய்க் கீழ்ப்படுத்துகிறவனும் உண்டு@ தன் தலையைத் தாழ்த்தி, அறியாத காரியங்களைப் பாராதவன் போல நடிப்பவனும் உண்டு.
25 ஆனால், அவன் தன் பலக் குறைவினால் தீமை செய்யத் தவறினாலும், தீமை செய்யச் சமயம் காண்பானேயாகில் அவன் தீமை செய்வான்.
26 மனிதன் அவன் தன் பார்வையைக் கொண்டு அறியப்படுகிறான். அறிவாளி அவன் தன் முகத் தோற்றத்தைக் கொண்டு அறியப்படுகிறான்.
27 ஒருவன் அணிந்திருக்கும் உடையும், அவன் சிரிப்பும், அவன் நடையும் அவன் எத்தகையவன் என்று தெரியப்படுத்துகின்றன.
28 அகந்தை படைத்தவனுடைய கோபத்தினால் உண்டாகும் கண்டிப்பு பொய்யானது@ நீதியானதென்று தெளிவுபடாத தீர்மானமாயிருக்கின்றது. மௌனமாய் ஒருவன் இருப்பின், அவனே விவேகி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, அறிவுரை, ஏனென்றால், பழைய, கூறு, சீராக், உண்டு, தீமை, ஆகமம், போகாதவன், குறைந்து, தெய்வ, உன்னத, மனிதன், அறியப்படுகிறான், ஒருவன், கொண்டு, உண்டு@, அறிவு, தவறிப், போய், நண்பனுக்கு, கொள்கிறவன், நிந்திக்கப்படுவான், அதனால், செய்கிறவன், திருவிவிலியம், ஆன்மிகம், மறுபடியும், உனக்குக், வார்த்தை, வேளை, அடிக்கடி, செய்திருந்தால், குற்றம், நாவினால்