சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 18
2 அவருடைய படைப்புகளை வருணிக்க வல்லவன் யார்?
3 அவருடைய மகத்துவங்களைக் கண்டுபிடிப்பவன் யார்?
4 அவருடைய மகிமையின் மாட்சிமையைச் சொல்லிக் காண்பிப்பவன் யார்? அவருடைய இரக்கத்தை விவரித்துச் சொல்லுகிறவன் யார்?
5 குறைக்கவும் கூட்டவும் முடியாத கடவுளுடைய மகத்துவங்களைக் கண்டுபிடிப்பவர் ஒருவரும் இல்லை.
6 மனிதன் எல்லாவற்றையும் தான் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கும் போது தான் கண்டுபிடிக்கத் தொடங்குகிறான். அவன் தீர்மானம் செய்த பின் சந்தேகத்தினால் வருந்துவான்.
7 மனிதன் யார்? அவனால் உண்டாகும் இலாபம் என்ன? அல்லது, அவனால் உண்டாகும் நன்மை தான் என்ன? அல்லது தீமைதான் என்ன?
8 மனிதருடைய வாழ்நாட்களின் கணக்கு, மிஞ்சினால் நூறு ஆண்டுகளே. நித்தியத்துக்கு முன்பாக இவை கடலின் சிறு துளி போலவும், மணலின் ஒரு மணி அணுப் போலவும் சொற்பமானவைகளாய் இருக்கின்றன.
9 ஆதலால், கடவுள் அவர்கள் மீது பொறுமையாய் இருக்கிறார்@ அவர்கள் மேல் தம் இரக்கத்தைப் பொழிகிறார்.
10 அவர்களது வீண் அகந்தையைக் கெடுதியானதென்று காண்கிறார்@ அவர்களுடைய குறிக்கோளும் கெட்டது என்று அறிந்திருக்கிறார்.
11 ஆதலால், அவர்களிடத்தில் தம்முடைய மன்னிப்பை நிறைவாக்கினார்@ அவர்களுக்கு நீதியின் வழியைக் காண்பித்தார்.
12 மனிதன் தன் அயலானுக்கு இரக்கம் காண்பிக்கிறான்@ கடவுளுடைய இரக்கமோ எல்லாப் படைப்புகள் மேலும் உண்டு.
13 இடையன் தன் மந்தையை நடத்துவது போல, இரக்கமுள்ள கடவுள் மனிதருக்குப் போதிக்கிறார்@ அவர்களைத் தண்டிக்கிறார்.
14 தமது இரக்கத்தின் நெறியைக் கடைப்பிடிப்பவன் மேலும், தம்முடைய தீர்மானங்களுக்கு உட்படுகிறவன் மேலும் அவர் இறங்குகிறார்.
15 மகனே, நன்மை செய்யும்போது முறையிடாதே. பிச்சை இடும் போது கெடுதியான வார்த்தைக்கு இடம் கொடாதே.
16 பனி வெப்பத்தைக் குளிர்ச்சியாக்குவதில்லையோ? அதுபோலவே நல்ல வார்த்தை பிச்சையை விட மேலானது.
17 இட்ட பிச்சையை விட நல்ல வார்த்தை உண்மையாகவே உயர்ந்ததன்றோ? ஆனால், அவ்விரண்டும் நீதிமானிடமே உண்டு.
18 மூடன் கடும் சொல் சொல்லுவான். தீநெறியான் இட்ட பிச்சை கண்களை உலரச் செய்கின்றது.
19 தீர்ப்பிடு முன் முதலில் நீதியைக் கற்றுக் கொள். பேசுவதற்கு முன் அறிந்து கொள்.
20 நோய்க்கு முன் மருந்து சாப்பிட்டுக் கொள். தீர்மானத்திற்கு முன் உன்னையே ஆராய்ந்து பார்@ கடவுள் முன்னிலையில் இரக்கத்தைக் காண்பாய்.
21 நோய் வருமுன்பே உன்னைத் தாழ்த்தி நட. நோயின் போது உன் நன்னெறியைக் காண்பி.
22 இடைவிடாமல் செபிப்பதை விட்டுவிடாதே. மரணம் வரையிலும் நீதியைத் தேடுவதில் தயங்காதே. ஏனென்றால், கடவுளுடைய வெகுமதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
23 செபிப்பதற்கு முன் உன் ஆன்மாவைத் தயார் செய்@ கடவுளைச் சோதிக்கும் மனிதனைப் போல் இராதே.
24 இறுதி நாளில் அவர் கொள்ளும் கோபத்தையும், அவர் தம் முகத்தைத் திருப்பி நீதியளிக்கும் காலத்தையும் நினைத்துக் கொள்.
25 இன்பம் துய்க்கும் போது நீ பட்டிருந்த துன்பத்தை மறவாதே. வறுமையால் வருந்தும் போது, நீ சுவைத்த இன்பத்தை மறவாதே.
26 ஏனென்றால், காலை முதல் மாலை வரையிலும் காலம் மாறிவரும்@ இவைகளெல்லாம் கடவுள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.
27 ஞானி எல்லாவற்றிலும் பயந்து நடப்பான். பாவச் சமயமான நாட்களில் சோம்பலை அகற்றுவான்.
28 புத்திக் கூர்மையுள்ளவன் ஞானத்தைக் கண்டுகொள்கிறான்@ அதைக் கண்டவனுக்குப் புகழ்ச்சி செலுத்துகிறான்.
29 அறிவாளிகளுடைய ஞானம் அவர்கள் வார்த்தையில் வெளிப்படுத்தப்படும். அவர்கள் உண்மையையும் நீதியையும் கண்டுபிடித்து, நீதி மொழிகளையும் நியாயங்களையும் சரமாரியாய்ப் பொழிகிறார்கள்.
30 ஆசையுணர்வுகளுக்கு இடம் கொடாதே. அவைகளை உன் மனத்தினின்று. அகற்றி விடு.
31 உன் ஆன்மாவில் உன் ஆசையுணர்வுகளுக்கு இடம் கொடுப்பாயானால், அவை உன்னைப் பற்றி உன் பகைவர் மகிழ்வடையும்படி செய்யும்.
32 அற்பமான கலகக் கூட்டங்களில் முதலாய் விருப்பம் கொள்ளாதே@ ஏனென்றால், அவைகளில் குற்றம் தடையில்லாமல் இருக்கும்.
33 உனக்கு உன் பையில் ஒன்றுமில்லாத போது, விருந்துச் செலவுக்காகக் கடன் வாங்கி வறியவனாகாதே@ ஏனென்றால், உன் உயிருக்கே நீ பகையாளி ஆவாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, போது, யார், ஏற்பாடு, முன், கடவுள், அவருடைய, ஏனென்றால், பழைய, கொள், என்ன, அவர், இடம், மேலும், சீராக், மனிதன், தான், கடவுளுடைய, ஆகமம், கொடாதே, ஆசையுணர்வுகளுக்கு, நல்ல, மறவாதே, பிச்சையை, பிச்சை, இட்ட, முன்னிலையில், வரையிலும், வார்த்தை, அல்லது, எல்லாவற்றையும், மகத்துவங்களைக், என்றும், ஆன்மிகம், திருவிவிலியம், கண்டுபிடித்து, அவனால், ஆதலால், தம்முடைய, போலவும், நன்மை, உண்டாகும், உண்டு