சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 17
2 திரும்பவும் அவனை மண்ணாகவே மாற்றுவார்@ அவனுக்குக் தக்க வலிமையைக் கொடுத்தார்.
3 நாட்களின் தொகையையும் காலத்தையும் அவனுக்குக் குறித்தார்@ நிலத்தில் உள்ளவைகளின் மீது அவனுக்கு அதிகாரம் கொடுத்தார்.
4 எல்லா உயிரினங்களும் அவனுக்கு அஞ்சும்படி செய்தார். அவனும் மிருகங்கள் மேலும் பறவைகள் மேலும் அதிகாரம் செலுத்தினான்.
5 அவர் அவனிடத்திலிருந்து அவனைப் போலவே அவனுக்கு ஒரு துணைவியை உண்டாக்கினார்@ அறிவையும் நாவையும் கண்களையும் காதுகளையும், நினைப்பதற்கு மனத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்@ அறிவின் ஒளியால் அவர்களை நிரப்பினார்.
6 ஞான அறிவையும் அவர்களுக்குத் தந்தார்@ அவர்கள் இதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்@ நன்மையையும் தீமையையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
7 தம் செய்கைகளின் மாட்சியை அவர்களுக்குக் காண்பிக்க அவர்கள் இதயங்களின் மேல் தமது கண் வைத்தார்.
8 தம் புனித பெயரை அவர்கள் கொண்டாடவும், அவர்கள் தம் செய்கைகளின் மாட்சியை வெளிப்படுத்துவதனால் தம் அரும் பெரும் செயல்களில் மகிமைப் படுத்தப்படவும் திருவுளம் கொண்டார்.
9 அவர் அவர்களுக்கு நன்னெறியை ஏற்படுத்தி வாழ்நாளின் ஒழுங்குக்கு அவர்களை உரிமையாளராக்கினார்.
10 அவர்களோடு நித்திய ஒப்பந்தம் செய்துகொண்டார்@ தமது நீதியையும் தீர்மானங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
11 அவருடைய பெருமையின் மாட்சியை அவர்கள் கண்கள் கண்டன. அவர் குரலின் மேன்மையை அவர்கள் செவிகள் கேட்டன. மேலும் அவர்: எல்லா அக்கிரமத்திலிருந்தும் விலகுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னார்.
12 அவர்கள் ஒவ்வொருவருக்கும் அயலாரைப் பற்றிய கட்டளைகளை ஏற்படுத்தினார்.
13 அவர்கள் நடத்தைகள் எப்போதும் அவர் முன்பாக இருக்கின்றன@ அவருடைய கண்களுக்கு அவை மறைந்தவை அல்ல.
14 அவர் ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவரை ஏற்படுத்தினார்.
15 கடவுளுடைய மக்களோ இஸ்ராயேல் என்பது வெளிப்படுத்தப்பட்டது.
16 அவர்களுடைய செயல்களெல்லாம் கதிரவனைப் போல் அவருக்கு முன் இருக்கின்றன. இடைவிடாது அவருடைய கண்கள் அவர்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
17 அவர்களுடைய அக்கிரமத்தினால் கட்டளைகள் மறைபடுவதில்லை@ அவர்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுக்கு முன்பாக இருக்கின்றன.
18 மனிதன் இடும் பிச்சை அவருக்கு முன்பாக ஒரு முத்திரையைப் போல் இருக்கின்றது. அவர் தம்முடைய கண்மணி போல் அவனுடைய நன் மனத்தைக் காப்பாற்றுவார்.
19 பிறகு எழுந்து, அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்@ தீயோரை மண்ணுலகின் பாதாளத்தில் புதைப்பார்.
20 மனவருத்தப்படுகிறவர்களை மனந்திரும்பச் செய்வார்@ பலவீனரைத் தேற்றி நிலை நிறுத்துவார்@ உண்மையை அவர்கள் உடைமையாக நியமிப்பார்.
21 ஆண்டவரிடமாய்த் திரும்பி உன் பாவங்களை விட்டு விடு.
22 ஆண்டவர் முன் மன்றாடி உன் குற்றங்களைக் குறைத்து விடு.
23 ஆண்டவர்பால் திரும்பி உன் அநீதத்தினின்று விலகு. அக்கிரமத்தை வெறுத்துப் பகைப்பாயாக.
24 கடவுளுடைய நீதிச் செயல்களையும் தீர்மானங்களையும் அறிந்து, அவர் உனக்கு நியமித்த நிலையிலும், உன்னத கடவுளை நோக்கி வேண்டுவதிலும் நிலைத்திரு.
25 உயிரோடிருந்து கடவுளுக்கு வணக்கம் புரிகிறவர்களோடு புனித உலகின் பேற்றைப் பெறச் செல்.
26 அக்கிரமிகளுடைய பொய்மையில் நில்லாதே. மரணத்திற்கு முன்பே கடவுளை வாழ்த்து. இறந்தவனுடைய வாழ்த்து ஒன்றுமில்லாமை போல் ஒழிந்து போகின்றது. உயிருள்ள போது கடவுளை வணங்குவாய்.
27 உயிரும் உடல் நலமும் இருக்கும் போதே அவரைப் புகழ்ந்தேத்து. அவருடைய இரக்கத்தைக் கொண்டாடுவாய்.
28 தம்மிடத்தில் திரும்புகிறவர்கள் மீது ஆண்டவருடைய இரக்கமும் அவருடைய மன்னிப்பும் எவ்வளவோ மாட்சிமையுள்ளனவாய் இருக்கின்றன.
29 மேலும், அனைத்தும் மனிதரில் இருப்பது கூடாத காரியம். ஏனென்றால், மனிதனாய்ப் பிறந்தவன் அழியாதவன் அல்லன். வீண் பெருமையுள்ள தீச் செயல்களை அவன் விரும்புகின்றான்.
30 கதிரவனைவிட ஒளியுள்ளது எது? அதுவும் குறைவுபடுகிறது. மாமிசமும் இரத்தமும் நினைப்பதை விடக் கெடுதியானது எது? ஆனால், அது கண்டிக்கப்படும்.
31 வானத்தின் உன்னதத்தைக் கடவுள் காண்கிறார். மனிதர் அனைவரும் தூசியும் சாம்பலுமாய் இருக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், அவருடைய, ஏற்பாடு, அவர்களுடைய, போல், மேலும், அவர்களுக்குக், பழைய, அவனுக்கு, இருக்கின்றன, புனித, ஆகமம், சீராக், அதிகாரம், கடவுளை, தமது, மாட்சியை, முன்பாக, ஏற்படுத்தினார், கடவுளுடைய, முன், விடு, வாழ்த்து, திரும்பி, கடவுளுக்கு, கண்கள், அவருக்கு, செய்கைகளின், அவனுக்குக், கொடுத்தார், அவனைப், உண்டாக்கினார்@, கடவுள், மீது, எல்லா, காண்பித்தார், தீர்மானங்களையும், அவர்களை, அறிவையும், ஆன்மிகம், திருவிவிலியம்