சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 16
2 அவர்கள் வாழ்நாள் நீடித்திருக்கும் என்று நம்பாதே. அவர்கள் வேலைகளுக்கு எதிர்பார்த்திராதே.
3 தீநெறியாளரான ஆயிரம் பிள்ளைகளை விடத் தெய்வ பயமுள்ள ஒரு மகன் மேலானவன்.
4 தீநெறியாளரான மக்களைப் பெறுவதை விட மக்களில்லாமல் சாவது நல்லது.
5 ஓர் அறிவாளியால் ஒரு நாடே செழிக்கும். அக்கிரமிகள் நாடோ காடாகி விடும்.
6 இவை போன்ற பல காரியங்களை என் கண்ணால் பார்த்தேன். இவைகளினும் பெரியவைகளைக் காதால் கேட்டேன்.
7 பாவிகள் சபையில் நெருப்பு கொழுந்து விட்டு எரியும். விசுவாசமற்ற மனிதரிடம் கோபம் பொங்கும்.
8 முற்காலத்தில் அரக்கர் தங்கள் சொந்த பலத்தை நம்பினபடியால் அழிக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மன்றாடவில்லை.
9 லோத் பயணம் செய்த இடங்களை ஆண்டவர் காப்பாற்றவில்லை. அவர்கள் வார்த்தையின் அகந்தைக்காக அவர்களை அவர் வெறுத்தார்.
10 அவர்கள்மீது அவர் இரக்கம் வைக்கவில்லை. தங்கள் அக்கிரமங்களைப்பற்றிப் பெருமை பாராட்டின மக்கள் அனைவரையும் அவர் அழித்தார்.
11 அவ்வாறே கல் நெஞ்சம் படைத்தவர்களாய் ஒருமித்திருந்த ஆறு லட்சம் பேர்களையும் அழித்தொழித்தார். இப்படியிருக்க, ஒருவன் மட்டும் கீழ்ப்படியாதிருந்தும் தண்டனைக்குத் தப்பிக் கொண்டால் ஆச்சரியத்திற்கு இடமாகும்.
12 இரக்கமும் கோபமும் அவரிடம் இருக்கின்றன. அவர் பொறுப்பதில் வல்லவரானால், கோபத்தைக் காட்டுவதிலும் அவ்வாறே.
13 அவர் இரக்கத்திற்கு ஏற்பவே அவர் கண்டிப்பும். மனிதனை அவன் செயல்களுக்குத் தக்கவண்ணம் தீர்மானிக்கின்றது.
14 பாவி தன் தீநெறியில் தப்பிக்கொள்ள மாட்டான். இரக்கம் காண்பிக்கிறவனுடைய பொறுமை வெகுமதி அடையத் தாமதியாது.
15 இரக்கத்தின் செயல்கள் அனைத்தும் ஒவ்வொருவனையும் அவனவனுடைய செயல்களின் பேறு பலனுக்குத் தக்கவண்ணமும், அவன் தன் வாழ்க்கைப் பயணத்தில் காண்பிக்கும் அறிவுடைமைக்குத் தக்கவண்ணமும் அவனை வரிசை முறையில் நிறுத்தும்.
16 நான் தெய்வத்தின் கண்ணில் அகப்படமாட்டேன்@ மேலுலகத்தில் என்னை நினைக்கிறவன் யார் என்றும்,
17 இவ்வளவு மக்கட்திரளில் ஒருவரும் என்னை அறியப்போவதில்லை@ ஏனென்றால், எண்ணிறந்த படைப்புகளில் என் ஆன்மா என்ன என்றும் சொல்லாதே.
18 இதோ பார்: வானமும் வான மண்டலங்களும், பாதாளமும் மண்ணுலகம் முழுவதும், அவைகளிலுள்ள யாவும் அவர் முன்னிலையில் நடுங்குகின்றன.
19 மலைகளும் குன்றுகளும் பூமியின் அடித்தளங்களும் கடவுள் தங்களைக் கண்ணோக்கும் போது அச்சத்தினால் அதிர்கின்றன.
20 இவைகளிலெல்லாம் இதயம் அறிவற்றதாய் இருக்கின்றது. ஆனால், எல்லா இதயங்களும் அவரால் கண்டு பிடிக்கப்படுகின்றன.
21 அவருடைய வழிகளையும், மனிதனுடைய கண் பாராத பெரும் காற்றையும் கண்டுபிடிக்கிறவன் யார்?
22 ஏனென்றால், அவருடைய செயல்களில் பல மறைபொருளாய் இருக்கின்றன. அவருடைய நீதியின் செயல்களை எவன் எடுத்துரைப்பான்? அவைகளைத் தாங்கக்கூடியவன் யார்? நன்னெறி சிலரை விட்டு வெகுதூரத்தில் இருக்கின்றது. அனைவருடைய தீர்ப்பும் முடிவில் நடக்கும்.
23 தன்மனத்தில் அற்பத்தனமுள்ளவன் வீணானவைகளை நினைக்கிறான். விவேகமற்றவனும் ஒழுங்கற்றவனுமான மனிதன் மூடத்தனமானவைகளை நினைக்கிறான்.
24 மகனே, நான் சொல்வதைக் கேள். அறிவின் நெறியைக் கற்றுக்கொள்.
25 உன் மனத்தில் என் வார்த்தைகள் மீது கவனம் வை. ஒழுங்கோடே நன்னெறியைப் போதிப்பேன்@ ஞானத்தை ஆராய்ந்து உரைப்பேன். உன் மனத்தில் என் வார்த்தைகள் மீது கவனம் வை. கடவுள் தொடக்கம் முதல் தம்முடைய செயல்களில் விளங்கச் செய்த அதிசயங்களை அறிவுத் தெளிவோடு சொல்கிறேன்@ அவர்தம் இயல்பை உண்மையோடு உரைக்கிறேன்.
26 கடவுள் தம்முடைய திட்டத்தின்படி தொடக்கத்தில் படைப்புகளைப் படைத்தவுடனே, அவைகளின் வகைகளைப் பிரித்து வேறுபடுத்தி, ஒவ்வொரு இனத்திலும் தலைமையானவைகளை ஏற்படுத்தினார்@
27 அவைகளை என்றும் அணி செய்தார். அவைகள் பசியினால் வருந்தினதுமில்லை@ துன்புற்றதுமில்லை@ வேலைகளை நிறுத்தினதுமில்லை.
28 ஒருபோதும் ஒரு படைப்பு மற்றொன்றைத் தொல்லைப் படுத்தினதுமில்லை.
29 ஆண்டவருடைய வார்த்தையின் மீது அவிசுவாசியாய் இராதே.
30 அதன் பிறகு கடவுள் நிலத்தை நோக்கினார்@ தம்முடைய வரங்களால் அதை நிரப்பினார்.
31 எல்லாவித உயிரினங்களும் நிலத்தின் மேல் உண்டாயின. அவை நிலத்துக்கே திரும்பவும் போகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், ஏற்பாடு, பழைய, கடவுள், சீராக், அவருடைய, ஏனென்றால், தங்கள், மீது, ஆகமம், என்றும், தம்முடைய, யார், இருக்கின்றது, நினைக்கிறான், கவனம், வார்த்தைகள், மனத்தில், என்னை, செயல்களில், அவ்வாறே, தெய்வ, தீநெறியாளரான, கொள்ளாதே, ஆன்மிகம், திருவிவிலியம், விட்டு, செய்த, அவன், தக்கவண்ணமும், இருக்கின்றன, இரக்கம், வார்த்தையின், நான்