சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 அது மகிமையுள்ள அன்னையைப் போல அவன்முன் செல்லும்@ கன்னிமை கெடாத பெண்ணைப் போல் அவனை ஏற்றுக்கொள்ளும்@
3 உணவாக வாழ்வையும் அறிவையும் அவனுக்குத் தரும்@ பானமாக ஞானத்தை அவனுக்கு அளிக்கும். அவன் அதன் மீது ஊன்றி நடப்பதனால் கலக்கமடைய மாட்டான்@
4 அதன் மீது பற்று வைத்ததனால் வெட்கம் கொள்ளமாட்டான்@ அதனால் மற்றவர்களுக்கு முன்பாக மேன்மைப் படுத்தப்படுவான்.
5 அவன் சபை நடுவில் பேச ஆண்டவர் அவனுக்கு நாவன்மை அளிப்பார். விவேகமும் அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவனுக்குத் தந்தருளுவார். இந்த அறிவாற்றல், உடுத்தும் அலங்கார ஆடை போல் அவனிடம் ஒளிரும்@
6 மகிழ்ச்சியையும் அக்களிப்பையும் அவனிடம் சேர்ப்பிக்கும்@ நித்திய பெயருக்கு அவனை உரிமையாளியாக்கும்.
7 அறிவில்லா மனிதர் அதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள். அறிவுடையோரோ அதை அடைய விரும்புவார்கள். மூடர் அதைக் காணார். ஏனென்றால், அகந்தைக்கும் கபடுக்கும் வெகுதூரத்தில் அது இருக்கின்றது.
8 பொய்யர் அதை நினைக்க மாட்டார்கள். உண்மையுரைப்போரோ அதைக் துணையாகக் கொண்டமையால் கடவுள் திருமுன் வரும் வரைக்கும் மகிழ்வு அடைவார்கள்.
9 பாவியினுடைய வாயில் கடவுளுடைய புகழ்ச்சி சிறந்ததன்று.
10 ஏனென்றால், கடவுளிடத்தினின்று ஞானம் தோன்றினது@ கடவுளுடைய புகழ்ச்சியே ஞானத்தோடு கூட நிற்கின்றது@ நம்பத் தகுந்தவனுடைய வாயில் அது மிகுந்திருக்கின்றது@ ஆண்டவர் அவனுக்கு அதைக் கொடுப்பார்.
11 ஞானம் என்னிடம் இல்லாததற்குக் கடவுளே காரணம் என்று சொல்லாதே. ஏனென்றால், அவர் பகைப்பதை நீ செய்யாதிரு.
12 அவரே நான் கெட்டுப் போவதற்குக் காரணம் என்று சொல்லாதே. ஏனென்றால், அக்கிரமிகள் அவருக்குத் தேவையில்லை.
13 அநியாயம் அனைத்தையும் ஆண்டவர் பகைக்கிறார். அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கும் அது விருப்பமாய் இராது.
14 கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்து, அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்.
15 ஆனால், தம் கட்டளைகளையும் சட்டங்களையும் கொடுத்தார்.
16 கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் அவருக்கு நித்தியத்திற்கும் விருப்பமாய் நடக்கவும் உனக்கு மனமுண்டானால் அவைகள் உன்னைக் காப்பாற்றும்.
17 அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு.
18 மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான்.
19 ஏனென்றால், கடவுளுடைய ஞானம் மகத்தானது. அதிகாரத்தில் வல்லமை உள்ளது. அவர் இடைவிடாமல் அனைவரையும் கண்டறிகிறார்.
20 ஆண்டவருடைய கண்கள் அவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மீது இருக்கின்றன. மனிதனுடைய எல்லாச் செயல்களையும் அவர் அறிகிறார்.
21 அக்கிரமமாய் நடக்க அவர் எவனுக்கும் கற்பித்ததில்லை@ பாவம் செய்யும்படி எவருக்கும் உத்தரவு கொடுத்ததில்லை.
22 ஏனென்றால், பிரமாணிக்கமற்றவர்களும் பயனற்றவர்களுமான பிள்ளைகளின் கூட்டத்தை அவர் விரும்புவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், அவர், அதைக், ஏற்பாடு, பழைய, அவன், மீது, முன்பாக, கடவுளுடைய, ஞானம், சீராக், ஆண்டவர், ஆகமம், அவனுக்கு, சொல்லாதே, காரணம், விருப்பமாய், அவருக்கு, கொடுத்தார், நடக்க, திருவிவிலியம், ஆன்மிகம், அவனை, அவனுக்குத், அவனிடம், மாட்டார்கள், கடவுள், போல், வாயில்