சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 14
2 மனவருத்தமில்லாதவனும், தன் நம்பிக்கையைக் கைவிடாதவனும் பேறு பெற்றவர்கள்.
3 பேராசையும் கஞ்சத்தனமும் கொண்டுள்ள மனிதனுக்குச் செல்வம் பயனற்றது. பொறாமைக்காரனுக்குப் பொன் எதற்கு?
4 பேராசையுடன் செல்வங்களை அநியாயமாய்ச் சேகரிக்கிறவன் பிறருக்குச் சேர்த்து வைக்கிறான். அவனுடைய செல்வங்களால் மற்றொருவன் இன்ப சுகங்களில் மகிழ்ந்திருப்பான்.
5 தனக்குத் தானே கெட்டவனாய் இருப்பவன் எவனுக்கு நல்லவனாவான்? (எவனுக்குமில்லை) மேலும் தான் சேர்த்து வைத்த செல்வங்களால் அவன் நிறைவு அடையான்.
6 தன்னைத் தானே வஞ்சிக்கிறவனை விடக் கெட்டுப் போனவன் ஒருவனும் இல்லை. இதுவே அவன் கெட்ட குணத்தின் இலாபம்.
7 அவன் எந்த ஒரு நன்மையைச் செய்தாலும் அதை நினையாமலும் அறியாமலும் செய்வான். இறுதியில் அவன் மனத்திலுள்ள கபடு வெளிப்படுத்தப்படும்.
8 பொறாமையால் பீடிக்கப்பட்டவனும், பிறருடைய (மன்றாட்டை) அசட்டை செய்து தன் முகத்தைத் திருப்புகிறவனும் பொல்லாதவர்கள்.
9 தன் கெட்ட குணத்தில் பேராசையுள்ளவனுடைய கண் ஆவல் அடங்குவதில்லை. தன் உயிரை உலர்த்தி மாய்த்துக் கொள்கிற வரையிலும் அவனுக்கு நிறைவு ஏற்படப் போவதில்லை.
10 கஞ்சனின் கண் தீமைகளையே நாடும். அவன் மற்றவர்களுக்கும் உணவு கொடான்@ தானும் பசியால் வருந்துவான்.
11 மகனே, உன்னிடம் ஏதேனும் இருந்தால், உனக்கும் உதவிக்கொள்@ கடவுளுக்கும் தகுதியான காணிக்கைகளைக் கொடு.
12 மரணம் தாமதிக்காதென்றும், கல்லறைக்குப் போவாயென்று உனக்குத் தீர்ப்புச் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் நினைத்துக்கொள். ஏனென்றால், மனிதன் சாகவே சாவான் என்பது இவ்வுலக நியதி.
13 சாகிறதற்கு முன்பே உன் நண்பனுக்கு உதவி செய்@ உன் வலிமைக்குத் தக்க கை நீட்டி எளியவனுக்குக் கொடு.
14 செல்வாக்கு நாளில் குறை செய்துகொள்ளாதே@ செய்யக் கூடுமான நன்மையையெல்லாம் தவறாமல் செய்.
15 ஏனென்றால், நீ உழைத்துச் சம்பாதித்த பொருட்களை மற்றவர்களுக்கு நீ விடப்போகிறதில்லையா? நீ விட்டு விடுவாய்@ மற்றவர்கள் அவற்றைப் பங்கிட்டு அனுபவிக்கப் போகிறார்கள் அல்லவா?
16 கொடு, பெற்றுக்கொள், உன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கு.
17 உன் மரணத்திற்கு முன்பே பிச்சை இடு. ஏனென்றால், கல்லறையில் உணவு தேட வேண்டிய தேவை இல்லை.
18 எல்லா உயிரினங்களும் செடியைப் போலவும், பச்சை மரத்தில் தழைக்கும் இலையைப் போலவும் வாடிப் போகின்றன.
19 சில தளிர்க்கவே, மற்றும் சில வளர்ந்து விழுந்துபோம். மனிதரிலும் சிலர் இறக்க, வேறு சிலர் பிறப்பார்கள்.
20 அழிவுள்ள எல்லா வேலையும் இறுதியில் அழிந்து போம். அதைச் செய்கிறவனும் அதைப்போல் அழிவான்.
21 அப்போது நியாயமான செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்@ அதைச் செய்கிறவனும் அதைப்பற்றி மகிமைப்படுத்தப்படுவான்.
22 ஞானத்தில் நிலை கொள்கிறவனும், தன் நீதியைத் தியானிப்பவனும், கடவுளுடைய பராமரிப்பைத் தன் மனத்தில் சிந்திப்பவனும் பேறு பெற்றவன்.
23 தன் நடத்தைகளைத் தன் இதயத்தில் நினைத்துப் பார்த்து, தன் இரகசியங்களை நன்றாய் அறிந்து, ஆராய்கிறவன் போல ஞானத்தின் வழி நடந்து, அதன் வழிகளில் நிலை கொள்கிறவனும்,
24 அதன் சன்னல் வழி பார்த்து, கதவுகளின் ஓரமாய் நின்று கேட்கிறவனும்,
25 அதன் வீட்டின் அருகிலேயே இளைப்பாறி, அதன் சுவர்களில் முளையடித்து, அதன் பக்கத்தில் சிறு அறை கட்டுகிறவனும் பேறு பெற்றவன். ஏனென்றால் அந்த அறையில் நன்மைகள் நித்தியத்திற்கும் தங்கியிருக்குமாதலால்,
26 அதன் நிழலின் கீழ்த் தன் மக்களை நிறுத்துவான்@ அதன் கிளைகளின் கீழ்த் தங்கியிருப்பான்@
27 வெப்பத்தினின்று அதன் நிழலால் காப்பாற்றப்படுவான்@ அதன் மகிமையில் இளைப்பாறுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, பேறு, அவன், ஏற்பாடு, பழைய, ஏனென்றால், பெற்றவன், கொடு, சீராக், ஆகமம், போலவும், எல்லா, முன்பே, சிலர், நிலை, கீழ்த், பார்த்து, கொள்கிறவனும், செய்கிறவனும், அதைச், இல்லை, சேர்த்து, மனிதன், ஆன்மிகம், திருவிவிலியம், செல்வங்களால், தானே, இறுதியில், கெட்ட, நிறைவு, உணவு