சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 13
2 தன்னை விடப் பெரியவனோடு உறவாடுகிறவன் தன் மேல் பாரத்தைச் சுமத்திக் கொள்கிறான். உன்னைச் காட்டிலும் அதிகச் செல்வமுள்ளவனோடு உறவு கொள்ளாதே.
3 மண் பானைக்கு இரும்புப் பானையோடு தொடர்பு என்ன? ஒன்றோடொன்று மோதும் போது (மண்பானை) உடைந்து போகும்.
4 செல்வமுள்ளவன் அநியாயம் செய்து பிறகு துடிதுடிக்கிறான். அநியாயம் செய்யப்பட்ட எளியவனோ மௌனமாய் இருக்கிறான்.
5 அவனுக்குப் பரிசு கொடுத்தால் உன்னை ஏற்றுக்கொள்வான்@ உன்னிடத்தில் ஒன்றுமில்லாமல் போனால் உன்னை விட்டு விடுவான்.
6 உன்னிடம் செல்வமிருந்தால் உன்னுடன் சேர்ந்து பந்தியில் அமர்ந்து உனக்கு அதிகச் செலவை உண்டாக்குவான்@ அதனால் உன்னைப் பற்றி அவன் வருந்தமாட்டான்.
7 அவனுக்குத் தேவையாய் இருப்பாயேயாகில் உன்னை வசப்படுத்திக் கொள்வான்@ நயந்து, உனக்கு நம்பிக்கை வருவித்து, நல்ல வார்த்தைகள் சொல்லி, உனக்கு வேண்டியது என்ன என்று கேட்பான்.
8 தன் விருந்துகளால் உன்னை மயக்கி, உன்னை முழுமையும் போக்கடிக்கிற வரையில் இரண்டு மூன்று முறை அவ்வாறே செய்வான்@ கடைசியில் உன்னை நகைத்து, உன்னிடம் ஒன்றுமில்லை என்று கண்டு உன்னை விட்டுவிடுவான்@ உன்னைப் பார்த்துத் தன் தலையை அசைப்பான்.
9 கடவுளுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்து@ அவர் உதவிக்குக் காத்திரு.
10 வஞ்சகத்தால் மோசம் போய், மூடத்தனத்தால் நீ தாழ்த்தப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
11 தாழ்த்தப்பட்டதனால் மூடத்தன்மைக்கு உள்ளாகாதபடிக்கு உன் ஞானத்தில் உன்னைத் தாழ்த்தாதே.
12 உன்னிலும் பெரியவன் ஒருவன் உன்னை அழைப்பானேயானால், நீ தூரமாய்ப் போ. ஏனென்றால், அப்படிச் செய்வதனால் அவன் உன்னை மீண்டும் அழைப்பான்.
13 அவனுக்கு வெறுப்புண்டாகாதபடி அடிக்கடி போகாதே@ அவன் உன்னை மறந்து விடாதபடிக்குத் தூரமாயும் போகாதே.
14 அவனுக்கு நிகரானவன் போன்று நீடித்த உரையாடல் மேற்கொள்ளாதே@ அவனுடைய நீண்ட பேச்சுகளையும் நம்பாதே. ஏனென்றால் அவன் பல பேச்சுகளால் உன்னைத் தந்திரமாய் ஏமாற்றி, சிரித்துக் கொண்டு உன் இரகசியங்களை அறிய முயல்வான்.
15 தான் இரக்கமற்ற இதயமுடையவனாய் இருப்பதனால், உன் வார்த்தைகளை வெளிப்படுத்துவான்@ உன்னைக் கெடுப்பதற்கோ, சிறையில் அடைப்பதற்கோ பின்னடையமாட்டான்.
16 நீ எச்சரிக்கையாய் இரு@ அவன் சொல்வதைக் கவனமாய்க் கேள். இல்லாவிடில் நீ ஆபத்தில் சிக்கிக் கொண்டு நடப்பாய்.
17 அவைகளெல்லாம் கனவில் கேட்பது போல் எண்ணு@ அப்போது விழித்திருப்பவன் போல் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய்.
18 உன் வாழ்நாள் முழுமையும் கடவுளை நேசி@ உன் மீட்பிற்காக அவரை மன்றாடு.
19 எல்லா உயிரினங்களும் தம்மைப் போன்றவற்றை நேசிக்கின்றன. அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் தன் அயலானை நேசிக்கிறான்.
20 ஒவ்வொரு பிராணியும் தனக்கு ஒத்ததோடு சேர்க்கப்படுகின்றது@ ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒத்தவனோடு இணைக்கப்படுகிறான்.
21 நரி ஒருவேளை ஆட்டோடு கூடுமானால் பாவியும் நீதிமானோடு கூடலாம்.
22 புண்ணியவானான மனிதனுக்கு நாயோடு தொடர்பு என்ன? செல்வனுக்கு எளியவனோடு என்ன ஒப்புரவு?
23 காட்டுக் கழுதை சிங்கத்திற்கு இரையாகிறது போல் எளியவர்கள் செல்வமுடையோருக்கு இரையாகிறார்கள்.
24 அகந்தை கொண்டவர்கள் தாழ்ச்சியை வெறுப்பது போல செல்வமுடையோன் எளியவனை வெறுக்கிறான்.
25 செல்வமுடையோன் கலக்கமுற்ற காலத்தில் தன் நண்பரால் தேற்றப்படுகிறான். எளியவனோ விழுந்த போது நண்பரால் புறக்கணிக்கப்படுவான்.
26 மோசம் செய்யப்பட்ட செல்வனுக்கு உதவுகிறவர்கள் பலர்@ அகந்தையாய்ப் பேசினாலும் அவன் சொற்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
27 எளியவன் மோசம் செய்யப்பட்டாலோ அதிகமாய்க் குற்றம் சாட்டப்படுவான். அறிவுச் செறிவோடு பேசினாலும் அவனுக்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது.
28 செல்வமுள்ளவன் பேசினால் எல்லாரும் மௌனமாய் இருப்பார்கள்@ அவன் வார்த்தைகளை மேகங்கள் வரையிலும் உயர்த்துவார்கள்.
29 எளியவன் பேசினாலோ: இவன் யார் என்பார்கள்@ அவன் தவறினாலோ அவனை விழத்தாட்டுவார்கள்.
30 மனச்சாட்சியில் குற்றமில்லாதவனுக்குச் செல்வம் நலம் தரும். வறுமையோ அக்கிரமிக்கு மிகவும் கெடுதிக்கு உரியதாய் இருக்கும்.
31 நன்மையிலேனும் தீமையிலேனும் மனிதனுடைய இதயம் அவன் முகத்தை மாற்றுகின்றது.
32 நல்லவன் இதயத்தின் அடையாளத்தையும், அவன் மலர்ந்த முகத்தையும் காண்பது அரிதும் கடினமுமானது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, உன்னை, அவன், ஏற்பாடு, பழைய, என்ன, மோசம், போல், அவனுக்கு, உனக்கு, ஒவ்வொரு, சீராக், எச்சரிக்கையாய், ஆகமம், உன்னைத், ஏனென்றால், மனிதனும், நண்பரால், பேசினாலும், எளியவன், செல்வமுடையோன், செல்வனுக்கு, வார்த்தைகளை, தனக்கு, கொண்டு, உன்னைப், தொடர்பு, போது, அதிகச், உறவாடுகிறவன், திருவிவிலியம், ஆன்மிகம், செல்வமுள்ளவன், அநியாயம், உன்னிடம், முழுமையும், மௌனமாய், எளியவனோ, செய்யப்பட்ட, அவ்வாறே