சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 12
2 நீதிமானுக்கு நன்மைசெய்@ அதனால் பெரும் நன்மை அடைவாய்@ அவனால் பெறாவிடினும் நிச்சயம் ஆண்டவராலேனும் உனக்குக் கிடைக்கும்.
3 எப்போதும் கெடுதியை நாடுகிறவனும், பிச்சை இடாதவனும் நல்ல நிலையில் இருக்கப் போகிறதில்லை@ ஏனென்றால், உன்னத கடவுள் பாவிகளைப் பகைக்கிறார்@ மன வருத்தப் படுகிறவர்கள் மேல் இரக்கமாய் இருக்கிறார்.
4 இரக்கமுள்ளவனுக்குக் கொடு@ பாவியை ஏற்றுக்கொள்ளாதே. ஏனென்றால், ஆண்டவர் அக்கிரமிகளுக்கும் பாவிகளுக்கும் தகுந்த தண்டனை கொடுப்பார்@ அவர்களுக்காகப் பழிவாங்கும் நாள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்.
5 நல்லவனுக்குக் கொடு@ பாவியை ஏற்றுக்கொள்ளாதே.
6 தாழ்ச்சியுள்ளவனுக்குப் பிச்சை இடு@ தீயவனுக்கு ஒன்றும் கொடாதே@ அவன் உன்னினும் வலியவனாகாதபடிக்கு, அவனுக்கு உணவு கொடுக்கப்படுவதைத் தடுத்து விடு.
7 நீ அவனுக்குச் செய்யும் எல்லாவற்றிலும் இருவிதத் தீமைகளைக் காண்பாய். ஏனென்றால், உன்னத கடவுள் பாவிகளைப் பகைக்கிறார்@ அக்கிரமிகளைத் தண்டிக்கிறார்.
8 நீ செல்வாக்குடன் இருக்கும் போது உண்மையான நண்பன் யாரென்று அறிய முடியாது. துன்பத்தில் உண்மையான பகைவன் யாரென்று அறியப்படும்.
9 மனிதன் செல்வாக்குடன் இருக்கும் போது அவன் பகைவர்கள் வருத்தமாயிருக்கிறார்கள்@ அவன் துன்பத்தில் நண்பன் அறியப்படுகிறான்.
10 உன் பகைவனை நீ ஒரு போதும் நம்பாதே. ஏனென்றால், பித்தளையில் களிம்பு ஏறுமாப் போல் அவன் கெட்ட குணமும் களிம்பேறிப் போகும்.
11 தன்னைத் தாழ்த்தி அவன் குனிந்து நடந்த போதிலும், உன் மனத்தை எச்சரிக்கைப்படுத்தி, அவனிடம் சிக்கிக்கொள்ளாதபடி விழித்திரு.
12 அவனை உன்னோடு சேர்த்துக் கொள்ளாதே@ அவன் வலப்பக்கத்திலும் உட்காராதே. ஏனென்றால், ஒருவேளை அவன் உனக்கு விரோதமாய் உன் பக்கமாய்த் திரும்பி உன் இருக்கையில் அமர்வான். (அப்படிச் செய்தால்) கடைசியில் நான் சொன்னதை நீ நினைந்து வருந்தி, அது உண்மையென்று கண்டுபிடிப்பாய்.
13 பாம்பால் கடிபட்ட பாம்பாட்டி மீதும், மிருகங்களிடம் போகும் எவன் மீதும் இரக்கம் கொள்பவன் யார்? இது போலவே, அக்கிரமியோடு கூடுகிறவனும் அவன் பாவங்களாலேயே சூழப்படுவான்.
14 அவன் சிறிது நேரம் உன்னோடு தங்குவான்@ அவனை நீ கவனியாமல் போனால் பொறுக்க மாட்டான்.
15 பகைவன் தன் சொற்களில் இனிப்பானவன்@ தன் உள்ளத்திலோ உன்னைக் குழியில் தள்ள வழி தேடுவான்.
16 பகைவன் உன் துன்ப காலத்தில் தன் கண்களில் கண்ணீர் உகுக்கிறான். சமயம் வாய்க்கும் போது நீ இரத்தம் சிந்தக் கண்டு நிறைவு கொள்வதை ஆசையுடன் தேடுவான்.
17 உனக்குத் துன்பங்கள் வரும் போது அவனே முதன் முதல் உன்னிடம் ஓடி வருவான்.
18 பகைவன் தன் கண்களில் கண்ணீர் உகுக்கிறான். உனக்கு உதவி செய்பவன் போல் உன் காலடிகளைத் தட்டி விடுகிறான்.
19 அப்பால், தன் தலையை அசைப்பான்@ கைதட்டுவான்@ பற்பல பொய், புறணிகள் சொல்லித் தன் முகத்தை மாற்றுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், ஏற்பாடு, பழைய, பகைவன், போது, சீராக், ஆகமம், போல், யாரென்று, போகும், துன்பத்தில், உனக்கு, கண்களில், கண்ணீர், உகுக்கிறான், தேடுவான், மீதும், உன்னோடு, நண்பன், அவனை, செல்வாக்குடன், பிச்சை, உன்னத, பெரும், நன்மை, திருவிவிலியம், ஆன்மிகம், கடவுள், பாவிகளைப், ஏற்றுக்கொள்ளாதே, இருக்கும், பாவியை, கொடு@, பகைக்கிறார்@, உண்மையான