சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 11
2 எந்த மனிதனையும் அவன் அழகின் பொருட்டுப் புகழாதே. ஒருவனையும் அவன் வடிவைப் பற்றி இகழாதே.
3 பறவைகளில் தேனீ சிறியது. ஆனால், அதன் உழைப்பின் பலன் இனிப்பில் முதன்மையானது.
4 உன் உடைமுறையைப் பற்றி பெருமை கொள்ளாதே@ நீ மரியாதையுடன் நடத்தப்படும் போது மகிமை கொள்ளாதே. ஏனென்றால், உன்னத கடவுளின் செயல்கள் மட்டுமே வியப்புக்குரியவைகளும் மகிமை பொருந்தியவைகளும் மறைக்கப்பட்டவைகளும் அறிவுக்கெட்டாதவைகளுமாய் இருக்கின்றன.
5 கொடுங்கோலர் பலர் அரியணை ஏறினர். (ஆனால், அவர்களுக்குப் பதிலாய்) எவரும் நினையாத ஒருவன் முடி அணிந்தான்.
6 அதிகாரம் உடைய தலைவர்களில் பலர் கொடூரமாய்ச் சிறைப்பட்டார்கள்@ ஆன்றோர் பலர் மற்றவர்கள் கைகளில் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.
7 எவனையும் தண்டிப்பதற்கு முன் அவனை விசாரி@ விசாரித்த பிறகு நீதியாய்த் தண்டனை விதி.
8 கேட்பதற்கு முன்பே மறுமொழி சொல்லாதே. எவனையும் அவன் பேச்சு நடுவில் தடை செய்யாதே.
9 உன்னைச் சாராத காரியத்தைப் பற்றி வாதாடாதே. கெட்டவர்களுடன் நியாயம் தீர்க்க முற்படாதே.
10 மகனே பற்பல காரியங்களைச் செய்ய முயலாதே@ அப்படிச் செய்தால் குற்றத்திற்குத் தப்பிக் கொள்ள மாட்டாய். நீ பற்பல காரியங்களில் புகுந்தால் அவை உனக்கு வெற்றியைத் தரா@ இவைகளை விட்டு விட்டால் உனக்கு நட்டம் வராமல் இராது.
11 ஒரு மனிதன் வேலை செய்கிறான்@ துரிதப்படுகிறான்@ வெகு துன்பப்படுகிறான். ஆனால், அவ்வளவுக்கு அவன் செல்வனாக மாட்டான்.
12 மற்றொருவன் பற்பல குறைவுகளால் வருத்தப்பட்டு, உதவியற்றவனாயும் தைரியமில்லாதவனாயும் பரம ஏழையாயும் இருக்கிறான்.
13 கடவுளுடைய கண்கள் தயவாய் அவனை நோக்கின@ அவன் தாழ்மையினின்று அவனைத் தூக்கி, அவனை உயர்த்தின. பலர் அவனைப் பற்றி ஆச்சரியம் அடைந்து கடவுளைப் போற்றினார்கள்.
14 நன்மையும் தீமையும், வாழ்வும் சாவும், வறுமையும் செல்வமும் கடவுளிடமிருந்து உண்டாகின்றன.
15 ஞானமும் நற்போதகமும், கட்டளைகளின் அறிவும் கடவுளிடமிருந்து வருகின்றன. அன்பும் நற்செயல்களும் அவரிடமிருந்தே உண்டாகின்றன.
16 தவறும் இருளும் பாவிகளுக்கு ஏற்பட்டன@ ஏனென்றால், பாவத்தில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் முதுமையிலும் பாவத்திலேயே நிலைகொள்வார்கள்.
17 கடவுளுடைய அருள் நீதிமான்கள் மேல் நிலைத்திருக்கின்றது. அவருடைய தயவு அதைப் பெருகச் செய்கிறதனால், நீதிமான் நித்திய பேற்றைப் பெறுவான்.
18 அளவோடு செலவிடுவதனால் செல்வனாகிறவன் உண்டு. அதனால் வரும் பயன் என்னவென்றால்:
19 நான் இளைப்பாற்றியைக் கண்டடைந்தேன்@ என் சம்பாத்தியத்தைக் கொண்டு நான் மட்டும் சாப்பிடுவேன் என்பான்.
20 ஆனால், காலம் கடந்துபோம் என்றும், மரணம் கிட்டிவரும் என்றும், மற்றவர்களிடம் எல்லாவற்றையும் விட்டுச் சாவேன் என்றும் நினையான்.
21 உன் மனவுறுதியில் நிலைத்திரு. அதைப் பற்றியே உரையாடு@ அதைப் பற்றியே உன் உள்ளத்தில் யோசி. உன் முதுமை வரையிலும் உனக்குக் கட்டளையிடப் பட்டவைகளைக் கடைப்பிடி.
22 பாவிகளுடைய செயல்களில் நிலையாதே. கடவுள் மீது உன் நம்பிக்கையை வைத்து, மனவுறுதியில் நிலைத்திரு.
23 ஏனென்றால், வறியவனை ஒரே நிமிடத்தில் செல்வனாக்குவது கடவுளுக்கு எளிதான காரியமாம்.
24 கடவுள் நீதிமானை ஆசீர்வதித்து, அவனுக்குக் கூடிய விரையில் வெகுமதி அளிப்பார். வெகு விரைவில் அவன் பலனடைவான்.
25 எனக்கு என்ன தேவை? எனக்கு என்ன நன்மைகள் உண்டாகும் என்று சொல்லாதே.
26 எனக்கு இருப்பதே போதுமானது@ இனிமேல் நான் அஞ்சத் தக்கது என்ன என்று சொல்லாதே.
27 உன்னுடைய செல்வாக்கான நாட்களில் நீ வருத்தப்பட்ட நாட்களை மறந்து விடாதே@ உனக்குத் துன்பம் வரும் நாட்களிலும் செல்வாக்கான நாட்களை நினையாமல் இராதே.
28 ஏனென்றால், ஒவ்வொருவனுக்கும் அவன் தன் செய்கைகளுக்குத் தகுந்த வண்ணம் அவன் மரண நாளில் அவனுக்கு வெகுமதி அளிப்பது கடவுளுக்கு எளிதான காரியமாம்.
29 இக்காலத்துத் துன்பம் பழைய, பெரிய, இன்ப அனுபவத்தை மறக்கச் செய்கின்றது. மனிதனுடைய மரண வேளையில் அவன் செயல்கள் யாவும் வெளிப்படுத்தப்படும்.
30 ஒருவன் சாவதற்குமுன் அவனைப் புகழாதே@ ஏனென்றால், தன் பிள்ளைகளால் அவன் அறியப்படுகிறான்.
31 எல்லாரையுமே உன் வீட்டிற்குள் அழைத்துப் போகாதே@ ஏனென்றால், கபடனுக்குப் பல தந்திர உபாயங்கள் உண்டு.
32 மிதமிஞ்சிச் சாப்பிட்டவர்களுடைய நெஞ்சினின்று வரும் கெட்ட நாற்றம் போலவும், கவுதாரியை இழுத்துக் கொள்ளும் கண்ணியைப் போலவும், மான்குட்டியை அகப்படுத்திக் கொள்ளும் வலையைப் போலவும் அகந்தை கொண்டவர்களுடைய இதயமும் இருக்கின்றது. தன் அயலானுடைய கேட்டைக் கண்டு ஆராய்கிறவனும் அப்படியே ஆகிறான்.
33 ஏனென்றால், அவன் நன்மையைத் தீமையாக மாற்றிப் பிறரைக் கெடுக்க வழி தேடுகிறான். சிறந்த செயல்களிலும் குறை காண்கிறான்.
34 ஒரு நெருப்புப் பொறியினின்று பெரும் நெருப்பு உண்டாகும். ஒரு தீநெறியாளனால் இரத்தப்பழி அதிகரிக்கும். பாவியான மனிதன் இரத்தம் சிந்த வைக்கிறதற்கு வழி தேடுகிறான்.
35 கெட்ட குணமுள்ள மனிதனிடம் எச்சரிக்கையாய் இரு. ஏனென்றால், சில வேளை உன் மீது காலமெல்லாம் தொடரும் பொய்யான புறணிகளைச் சுமத்துவான்.
36 அன்னியனுக்கு நீ இடம் கொடுத்தாலோ, அவன் கலகத்தில் உன்னை விழத்தாட்டி, உன் உறவினனுக்கும் உன்னை அன்னியனாக்குவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், அவனை, ஏற்பாடு, பழைய, பலர், பற்றி, அதைப், பற்பல, எனக்கு, என்ன, சீராக், சொல்லாதே, நான், வரும், ஆகமம், போலவும், என்றும், எளிதான, கடவுளுக்கு, கடவுள், மீது, காரியமாம், செல்வாக்கான, கொள்ளும், தேடுகிறான், உன்னை, கெட்ட, துன்பம், உண்டாகும், பற்றியே, நாட்களை, வெகுமதி, உண்டாகின்றன, மகிமை, செயல்கள், ஒருவன், நடுவில், அதிகாரம், திருவிவிலியம், ஆன்மிகம், எவனையும், உனக்கு, கடவுளிடமிருந்து, உண்டு, மனவுறுதியில், அவனைப், கடவுளுடைய, மனிதன், வெகு, நிலைத்திரு