சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 57
2 மாறாக நீங்கள் மனமாரக் கேடு செய்கிறீர்கள்: பூவுலகில் அநீதி புரிவதே உங்கள் வேலையாயுள்ளது.
3 தீயவர்கள் தாயின் வயிற்றிலிருந்தே நெறி தவறிச் செல்கின்றனர்: பொய்யர்கள் பிறப்பிலிருந்தே வழிதவறிச் செல்கின்றனர்.
4 பாம்பின் நஞ்சு போன்றது அவர்களிடத்திலுள்ள நஞ்சு: தன் காதை அடைத்துக் கொள்ளும் செவிட்டு விரியன் பாம்பின் நஞ்சை போன்றது அவர்கள் உள்ளத்திலுள்ள நஞ்சு.
5 பாம்பாட்டியின் குரலை அது கேட்க விரும்புவதில்லை: திறமையுடன் அவன் மகுடி ஊதினாலும் அதன் செவியில் விழுவதில்லை.
6 கடவுளே, அவர்கள் வாயிலுள்ள பற்களை உடைத்தெறியும்: ஆண்டவரே, அந்தச் சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை நொறுக்கி விடும்.
7 ஓடி மறைந்து விடும் தண்ணீர் போல அவர்கள் சிதறிப் போவார்களாக: தங்கள் அம்புகளை அவர்கள் தொடுக்கும் போது அவை கூர்மையற்றுப் போகட்டும்.
8 கரைந்து ஓடுகிற நத்தையைப் போல் அவர்கள் உருகிப் போவார்களாக: தாயின் வயிற்றிலேயே பிறக்காமல் சிதைந்தழியும் கருவைப் போல ஒழிவார்களாக.
9 அடுப்பில் போட்டு எரிவதற்கு முன்பே, பச்சையாயிருக்கும் போதே, சுழற்காற்றினால், அடிபட்டுப் போகும் முட்புதர் போல் ஆவார்களாக.
10 இப்படி நீர் பழிவாங்குவதைக் காணும் போது, நீதிமான் அகமகிழ்வான் தீயவரின் இரத்தத்தில் தன் பாதங்களைக் கழுவுவான்.
11 அப்போது மனிதர்கள்: "உண்மையிலேயே நீதிமானுக்குக் கைம்மாறு உண்டு. மெய்யாகவே பூவுலகில் நீதி வழங்கும் கடவுள் இருக்கிறார்" என்று சொல்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, நஞ்சு, சங்கீதங்கள், நீங்கள், பற்களை, போல், போது, விடும், போவார்களாக, போன்றது, செல்கின்றனர், திருவிவிலியம், ஆன்மிகம், பூவுலகில், தாயின், பாம்பின்