சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 56
2 உன்னதரான இறைவனை நோக்கிக் கூவுகிறேன்: எனக்கு நன்மை புரியும் இறைவனை நாடுகிறேன்.
3 வானினின்று எனக்கு உதவி புரிந்து மீட்பளிப்பாராக@ என்னைத் துன்புறுத்துவோரைக் கேட்டுக்கு ஆளாக்குவாராக: தமது அருளும் சொல்லுறுதியும் எனக்குத் துணைபுரியச் செய்வாராக.
4 மனுமக்களை ஆத்திரத்துடன் விழுங்கும் சிங்கங்களின் நடுவில் நான் கிடக்கிறேன்: ஈட்டியும் அம்பும் போல் உள்ளன அவைகளுடைய பற்கள்@ கூரிய வாள் போன்றது அவைகளுடைய நாவு
5 இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.
6 நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்: என் உள்ளம் பெரிதும் தவிக்கலாயிற்று. நான் போகும் வழியில் எனக்குக் குழியை வெட்டியுள்ளனர்: அதில் அவர்களே விழுவார்களாக.
7 உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இன்னிசை பாடுவேன்: புகழ் இசைப்பேன்.
8 என் நெஞ்சே விழித்தெழு@ வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: பொழுது விடியச் செய்வேன்.
9 ஆண்டவரே, உம்மை மக்களிடையே புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.
10 ஏனெனில், உயர்ந்துள்ளது வானமட்டும் உமதிரக்கம்: மேகங்கள் மட்டும் உயர்ந்துள்ளது உமது சொல்லுறுதி.
11 இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, நான், பழைய, சங்கீதங்கள், உள்ளம், உமது, புவியனைத்தும், மாட்சிமை, வழியில், விளங்குவதாக, உறுதி, உயர்ந்துள்ளது, புகழ், பாடுவேன், கொண்டுள்ளது, எனக்குக், மேலாக, அடைக்கலம், இறைவனை, இறைவா, ஆன்மிகம், திருவிவிலியம், எனக்கு, அவைகளுடைய, உன்னதராய், வானங்களுக்கு, நீர், இறைவனே, விளங்கியருளும்