சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 58
2 தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: இரத்த வெறியர்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.
3 இதோ! அவர்கள் என் உயிருக்கு உலை வைக்கிறார்கள்@ வலியோர் எனக்கெதிராய்ச் சதி செய்கிறார்கள்@ ஆண்டவரே, என்னிடம் தீவினையோ, பாவமோ இல்லை.
4 என்னிடம் குற்றமில்லாதிருந்தும் என்னை எதிர்க்க விரைகின்றனர், என்னைத் தாக்குகின்றனர்: விழித்தெழும், எனக்குத் துணைசெய்யும், என் நிலையைப் பாரும்.
5 ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.
6 மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்@ நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
7 இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: ~யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?~ என்கின்றனர்.
8 ஆனால், ஆண்டவரே, நீர் அவைகளைப் பார்த்து நகைக்கிறீர்: புற இனத்தார் அனைவரையும் ஏளனம் செய்கின்றீர்.
9 எனக்கு வலிமையானவரே, உம்மையே நோக்கியுள்ளேன்: ஏனெனில் இறைவா, நீர் என் பாதுகாப்பு அரண்.
10 என் இறைவனே, என்மீது இரங்குபவர்: என் எதிரிகள்மீது வெற்றிகொண்டு மகிழ எனக்கு அருள்வாராக.
11 என் மக்களுக்கு அவர்கள் இடறலாகாதபடி இறைவனே, அவர்களைக் கொன்றுவிடும்@ உமது வலிமையால் அவர்களைக் கலங்கடித்து விடும்: எங்கள் கேடயமாகிய ஆண்டவரே, அவர்களைத் தாழ்த்திவிடும்.
12 பாவமே அவர்கள் பேசும் சொற்கள், பாவமே அவர்கள் நாவினின்றெழும் பேச்சு: தங்கள் தற்பெருமையிலும் பேசும் சாபனைகளிலும் பொய் வார்த்தைகளிலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்களாக.
13 சினங்கொண்டு அவர்களை அழித்து விடும்@ இனி அவர்கள் இராதபடி ஒழித்து விடும்: யாக்கோபின் இனத்தாரிடையிலும் பூவுலகெங்கும் ஆள்பவர் கடவுளே என்று அனைவரும் அறிவார்களாக.
14 மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்: நாய்களைப் போல் உறுமுகின்றனர், ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
15 இரையைத் தேடி அலைகின்றனர்: உணவு கிடைக்காவிட்டால் ஊளையிடுகின்றனர்.
16 நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.
17 எனக்கு வலிமையானவரே, உமக்குப் புகழ் பாடுவேன்: ஏனெனில் இறைவனே, நீரே எனக்குப் பாதுகாப்பு அரண்@ என் இறைவனே, என் மீது இரங்குபவர் நீரே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, எனக்கு, ஏற்பாடு, ஆண்டவரே, ஏனெனில், இறைவனே, பழைய, நீரே, உமது, சங்கீதங்கள், திரிகின்றனர், சுற்றித், பேச்சு, வலிமையானவரே, நீர், பாதுகாப்பு, அவர்களைக், பேசும், பாடுவேன், பாவமே, விடும், ஊரைச், இரங்குபவர், திரும்பி, எனக்குப், என்னிடம், என்னை, இறைவா, திருவிவிலியம், ஆன்மிகம், விழித்தெழும், இனத்தார், நாய்களைப், போல், நேரத்தில், மாலை, அனைவரையும், ஊளையிடுகின்றனர்