சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 18
2 பகல்தோறும் பகல் அதைத் தெரிவிக்கிறது: இரவு தோறும் இரவு அதை அறிவிக்கிறது.
3 அவற்றிற்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 எனினும், அவற்றின் குரல் உலகெலாம் கேட்கிறது: அவை விடுக்கும் செய்தி உலகின் எல்லை வரை எட்டுகிறது@
5 அங்கே கடவுள் கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்@ மணவறையினின்று புறப்படும் மணமகன் போல அவன் எழுகின்றான்: பந்தய வீரனைப்போல அக்களிப்போடு குறித்த வழியில் விரைகின்றான்.
6 வானத்தின் ஒரு முனையில் எழுந்து மறுமுனை மட்டும் அவன் செல்லுகிறான்: அவனது அனல் படாதது ஒன்றுமில்லை.
7 ஆண்டவரது திருச்சட்டம் சால்புடையது@ ஆன்மாவுக்குப் புத்துயிர் ஊட்டுவது: ஆண்டவருடைய கட்டளை உறுதியானது, எளியோருக்கு அறிவூட்டுவது.
8 ஆண்டவருடைய கட்டளைகள் நேரியவை@ உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுபவை: ஆண்டவரது கற்பனை தூய்மையானது@ கண்களுக்கு ஒளியூட்டுவது.
9 ஆண்டவர்மீதுள்ள அச்சம் புனிதமானது@ என்றென்றும் நிலைத்திருப்பது: ஆண்டவருடைய தீர்ப்புகள் உண்மையானவை@ அவை எல்லாம் நீதியானவை.
10 பொன்னினும் மணியினும் பெரிதும் விரும்பத் தக்கவை: தேனினும் தேனடையினும் இனிமையானவை.
11 உம் ஊழியனும் அவற்றால் பயிற்சி பெறுகிறான்: அவற்றைக் கடைப்பிடிப்பதில் மிக விழிப்பாயிருக்கிறான்.
12 குற்றங்குறைகளை யார் கண்டுணர்வர்? எனவே, மறைவாயுள்ள என் குற்றங்களை நீக்கி என்னைப் புனிதப்படுத்தும்.
13 தற்பெருமையினின்று உம் ஊழியனைக் காத்தருளும்@ அது என்னை அடிமைப்படுத்தாதிருப்பதாக: அப்போது நான் குற்றமற்றவனாகி, பெரும் பாவங்களினின்று விடுபட்டுத் தூயவனாவேன்.
14 எனக்கு அடைக்கலமும் என் மீட்பருமான ஆண்டவரே, உம் முன்னிலையில் என் வாய் மொழியும், என் இதயச் சிந்தனையும் உமக்கு உகந்தனவாகட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், ஆண்டவருடைய, அவன், குரல், ஆண்டவரது, இரவு, திருவிவிலியம், ஆன்மிகம், அவற்றின்