சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 17
2 ஆண்டவரே, நீரே என் கற்பாறை, என் அரண், என் மீட்பர்: என் இறைவனாக உள்ளவரே, நான் அடைக்கலம் புகுவதற்கு ஏற்ற கோட்டையாக உள்ளவரே, என் கேடயமும் எனக்கு மீட்பளிக்கும் வலிமையும் என் அடைக்கலமுமாக உள்ளவரே!
3 புகுழ்ச்சிக்குரிய ஆண்டவரை நான் கூவி அழைப்பேன்: என் எதிரிகளினின்று மீட்படைவேன்.
4 சாகடிக்கக் கூடிய பெருவெள்ளம் என்னைச் சூழ்ந்துகொண்டது: ஆபத்துக்குரிய வெள்ளம் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது.
5 கீழுலகின் தளைகள் என்னைப் பிணைத்துக் கொண்டன: சாவில் கண்ணிகளுள் நான் விழப்போனேன்.
6 துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்@ என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்@ என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.
7 அப்போது பூமி அசைந்தது, அதிர்ந்தது, மலைகளின் அடித்தளம் கிடுகிடுத்தது: ஏனெனில் அவர் கோபம் மூண்டெழுந்தது.
8 அவர் நாசியினின்று கோபப்புகை கிளம்பியது, எரித்து விடும் நெருப்பு அவர் வாயினின்று எழும்பியது: எரிதலும் அவரிடமிருந்து புறப்பட்டது.
9 வானங்களைத் தாழ்த்திக் கொண்டு அவர் இறங்கி வந்தார்: அவர் பாதங்களுக்கடியில் கார்முகில் கவிந்தது.
10 கெரூபிம்களின்மேல் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
11 இருளைத் தமக்குப் போர்வையாக அணிந்தார்: நீரைத் தாங்கிய இருண்ட மேகங்கள் அவருக்குக் கூடாரம் போலாயிற்று.
12 தம்முன் விளங்கிய ஒளிப்பிழம்பால் எரிதழல்கள் சுடரிட்டன: கல்மழையும் பொழிந்தது.
13 வானத்தினின்று ஆண்டவர் இடி முழங்கச் செய்தார்: உன்னதமானவர் தம் குரலைக் கேட்கச் செய்தார்.
14 அம்புகளை ஏவி அவர்களைச் சிதறடித்தார்: இடிமின்னல் பல விடுத்து அவர்களை கலங்கடித்தார்.
15 ஆண்டவர் விடுத்த கடுஞ்சொல்லால், அவருடைய கோபப் புயலின் வேகத்தால், கடலின் நீரோட்டங்கள் வெளிப்பட்டன: பூவுலகில் அடித்தளங்கள் வெளியாயின.
16 வானினின்று தம் கையை நீட்டி என்னைப் பிடித்துக்கொண்டார்: பெருவெள்ளத்தினின்று என்னைத் தூக்கிவிட்டார்.
17 வலிமைமிக்க என் எதிரினின்று என்னை விடுவித்தார்: என்னைவிட வலிமைமிக்க பகைவர்களிடமிருந்து என்னைக் காத்தார்.
18 என் துன்ப நாளில் அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்: ஆனால் ஆண்டவர் எனக்கு அடைக்கலமானார்.
19 நெருக்கடி இல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்: என்மீது அன்பு கூர்ந்ததால் என்னைக் காத்தார்.
20 என்னுடைய நீதி நேர்மைக்கு ஏற்ப எனக்குப் பலனளித்தார்: என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால் எனக்குக் கைம்மாறு செய்தார்.
21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய வழியில் நடந்தேன்: பாவம் செய்து என் இறைவனை விட்டு அகலவில்லை.
22 அவருடைய கற்பனைகளையெல்லாம் என் கண்முன் கொண்டிருந்தேன்: அவருடைய கட்டளைகளின் வழியை விட்டு நான் அகலவில்லை.
23 அவர் முன்னிலையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்: தவறு செய்யாமல் என்னைக் காத்துக்கொண்டேன்.
24 என்னுடைய நீதி நேர்மைக்கேற்ப எனக்குப் பலன் அளித்தார்: அவர் முன்பாக என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால், எனக்குக் கைம்மாறு செய்தார்.
25 நேர்மையுள்ளவனிடம் நீர் நேர்மையுள்ளவராய் விளங்குகிறீர்: குற்றமற்றவனிடம் நீர் குற்றமற்றவராய் விளங்குகிறீர்.
26 தூய்மையுள்ளவனிடம் நீர் தூய்மையுள்ளவராய் விளங்குகிறீர்: கபடுள்ளவனிடம் நீர் விவேகமுள்ளவராய் நடந்துகொள்கிறீர்.
27 ஏனெனில், சிறுமையுற்ற மக்களுக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: தற்பெருமை கொண்டோரின் பார்வையை நீர் ஒடுக்குகின்றீர்.
28 ஆண்டவரே, நீர் என் விளக்கு சுடர்விட்டு எரியச் செய்கிறீர்: என் இறைவா, நீர் என் இருட்டை வெளிச்சமாக்குகின்றீர்.
29 உம் துணையால் நான் எதிரிகளின் படைகளைத் தாக்குவேன்: என் இறைவனின் துணையால் மதிலையும் தாண்டுவேன்.
30 கடவுள் காட்டும் வழி குற்றமற்றது, ஆண்டவருடைய வாக்குறுதி புடமிடப்பட்டது: அவரிடம் அடைக்கலம் புகுவோரனைவருக்கும் அவரே கேடயம்.
31 ஆண்டவரைத் தவிர வேறு தேவன் யார்? நம் இறைவனைத் தவிர வேறு அடைக்கலம் தரும் பாறை யார் ?
32 வலிமையைக் கச்சையாக எனக்கு அளித்தவர் அவரே: நான் செல்லும் வழியை இடையூறு அற்றதாக ஆக்கியவர் அவரே.
33 மான்களைப் போல என்னை விரைவாக ஓடச் செய்தவர் அவரே: உயர்ந்த இடத்தில் என்னை நிறுத்தியவர் அவரே.
34 என் கைகளைப் போருக்குப் பழக்கியவர் அவரே: வெண்கல வில்லை வளைப்பதற்கு என் புயத்துக்கு உறுதியளித்தவர் அவரே.
35 பாதுகாப்புத் தரும் உம் கேடத்தை நீர் எனக்கு அளித்தீர்: உமது வலக்கரம் என்னை ஆதரித்தது@ நீர் என்னிடம் காட்டிய பரிவு நான் மாண்புறச் செய்தது.
36 நான் செல்லும் வழியை நீர் விசாலமாக்கினீர்: என் கால்களும் தளர்வுறவில்லை.
37 என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து பிடித்தேன்: அவர்களைத் தொலைக்கும்வரையில் நான் திரும்பிப் போகவில்லை.
38 அவர்களை நான் வதைத் தொழித்தேன், அவர்கள் எழுந்திருக்கவும் முடியவில்லை: என் காலடிகளில் அவர்கள் மிதிபடலாயினர்.
39 போரிடும் வல்லமையை எனக்குக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
40 என் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தீர்: என்னைப் பகைத்தவர்களைச் சிதறடித்தீர்.
41 அவர்கள் கூவியழைத்தனர்@ ஆனால் அவர்களைக் காக்க ஒருவருமில்லை: ஆண்டவரை நோக்கி அவர்கள் கூவினர்@ அவரே அதற்குச் செவிகொடுக்கவில்லை.
42 எனவே, காற்றில் பறக்கும் தூசிபோல அவர்களைத் தவிடுபொடியாக்கினேன்: தெருவில் கிடக்கும் புழுதி போல அவர்களை மிதித்து ஒடுக்கினேன்.
43 மக்களின் சச்சரவுகளினின்று என்னை விடுவித்தீர்: நாடுகளுக்கு என்னைத் தலைவனாய் ஆக்கினீர்.
44 நான் அறியாத மக்கள் எனக்கு ஊழியம் செய்தனர்: என்னைப்பற்றிக் கேட்டதும் அவர்கள் கீழ்ப்படிந்தனர்.
45 அந்நியர் வந்து எனக்கு இச்சகம் பேசினர். வேற்றினத்தார் வலிவிழந்தனர்: அச்சத்தோடு தங்கள் கோட்டைகளினின்று வெளியேறினர்.
46 ஆண்டவர் வாழ்க, என் கற்பாறையாகிய அவர் வாழ்த்தப்பெறுவாராக: என் மீட்பரான இறைவன் பெரிதும் புகழப்படுவாராக.
47 என் எதிரிகளை நான் பழிவாங்கச் செய்த இறைவன் அவரே: வேற்றினத்தாரை எனக்கு அடிமைப்படுத்தியவர் அவரே.
48 என் எதிரிகளினின்று நீரே என்னை விடுவித்தீர்: என்னைத் தாக்கியவர்கள் மீது என்னைத் தலைவனாக உயர்த்தினீர், கொடியவனிடமிருந்து என்னை விடுவித்தீர்.
49 ஆதலால் ஆண்டவரே, மக்களிடையே உம்மைப் புகழ்ந்தேத்துவேன்: உமது பெயருக்குப் புகழ்ச்சிப்பா இசைப்பேன்.
50 நீர் ஏற்படுத்திய அரசருக்குப் பெரிய வெற்றிகளை அளித்தவர் நீரே: உம்மால் அபிஷேகமான தாவீதுக்கும் அவர் தலைமுறைக்கும் என்றென்றும் இரக்கம் காட்டியவர் நீரே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, நான், நீர், அவர், அவரே, என்னை, எனக்கு, என்னைத், ஆண்டவர், ஏற்பாடு, ஆண்டவரே, உள்ளவரே, நீரே, பழைய, செய்தார், அவர்களை, விடுவித்தீர், அவருடைய, எனக்குக், விளங்குகிறீர், வந்தார், வழியை, சங்கீதங்கள், என்னைக், என்னைப், அடைக்கலம், ஆண்டவரை, ஏனெனில், யார், தரும், வேறு, ஆன்மிகம், துணையால், கச்சையாக, தவிர, செல்லும், அவர்களைத், திருவிவிலியம், இறைவன், எதிரிகளை, உமது, அன்பு, அளித்தீர், அளித்தவர், அகலவில்லை, காத்தார், என்னுடைய, வலிமைமிக்க, துன்ப, நோக்கி, இறைவனை, நீதி, எனக்குப், காட்டிய, விட்டு, கைம்மாறு, எதிரிகளினின்று, செயல்கள், மாசற்றவையாயிருப்பதால், கொண்டு