சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 19
2 தம் திருத்தலத்தினின்று உனக்குத் துணை செய்வாராக: சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பாராக.
3 நீ ஒப்புக்கொடுக்கும் பலிகளை எல்லாம் நினைவு கூர்வாராக: நீ அர்ப்பணம் செய்யும் தகனப்பலி அவருக்கு உகந்ததாய் இருப்பதாக.
4 உன் இதயம் விரும்பியதை உனக்கு அருள்வாராக: உன் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5 உனக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக: நம் இறைவனின் பெயரால் வெற்றிக் கொடி நாட்டுவோம்@ ஆண்டவர் உன் விண்ணப்பங்கள் எல்லாம் நிறைவுறச்செய்வாராக.
6 தாம் அபிஷேகம் செய்தவருக்கு ஆண்டவர் வெற்றி கிடைக்கச் செய்தார்: வெற்றி தரும் தமது வலக்கரத்தின் வன்மையால் தம் புனித வானகத்தினின்று அரசரின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தார்@ இதை நான் அறிவேன்.
7 சிலர் தேர்ப்படையாலும், சிலர் குதிரைப் படையாலும் வலிமை பெறலாம்: நாமோ நம் ஆண்டவராகிய இறைவனின் திருப்பெயரால் வலிமை பெறுகிறோம்.
8 அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அழிவுற்றார்கள்: நாமோ இன்றும் நிலையாய் இருக்கிறோம், வீழ்ச்சியுறவில்லை.
9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியளித்தருளும்: உம்மைக் கூவி அழைக்கும்போது எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், ஆண்டவர், வெற்றி, சிலர், வலிமை, நாமோ, இறைவனின், எல்லாம், ஆன்மிகம், திருவிவிலியம், மன்றாட்டுக்குச், புனித