சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 142
2 நீதி விசாரணைக்கு அடியேன் என்னை அழைக்காதேயும்@ ஏனெனில், வாழ்வோருள் எவனும் உமது திருமுன் நீதிமான் என்று சொல்வதற்கில்லை.
3 எதிரியானவன் என்னைத் துன்புறுத்துகிறவன், என்னை நிலைகுலையச் செய்தான்: என்றோ இறந்தொழிந்தவர்களைப் போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
4 எனவே, என் உயிர் என்னகத்துள் ஒடுங்கிப் போயிற்று: என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
5 கடந்த காலத்தை நினைத்துக் கொள்கிறேன், உம் செயல்கள் அனைத்தையும் குறித்து தியானம் செய்கிறேன்: உம் கைவேலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
6 உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகிறேன்: வறண்ட நிலம் நீரைத் தேடுவதுபோல், என் ஆன்மா உம்மைத் தேடுகிறது.
7 ஆண்டவரே, விரைவாக என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்@ ஏனெனில் என் உள்ளம் சோர்ந்துபோகின்றது: என்னிடமிருந்து உம் பார்வையைத் திருப்பிக்கொள்ளாதேயும்@ கீழுலகில் செல்வோர்க்கு இணையாய் விடுவேன்.
8 உமதருளை நான் விரைவாய்க் கண்டடையச் செய்யும்: ஏனெனில் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எவ்வழியில் நடப்பதென எனக்கு அறிவித்தருளும்: ஏனெனில் உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
9 ஆண்டவரே, என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்: உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
10 உம் திருவுளப்படி நடக்க எனக்குக் கற்பித்தருளும்@ ஏனெனில் நீரே என் இறைவன்: நல்லது உமது ஆவி, அது என்னைச் செய்மையான நிலத்தில் நடத்துவதாக.
11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு, எனக்கு வாழ்வளித்தருளும்: உமது கருணையை முன்னிட்டு நெருக்கிடையினின்று என் ஆன்மாவை விடுவித்தருளும்.
12 உமது அருளுக்கேற்ப என் எதிரிகளை அழித்து விடும்: என்னைத் துன்பத்துக்குள்ளாக்குவோர் அனைவரையும் ஒழித்து விடும்@ நான் உம் ஊழியன் அன்றோ!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, உமது, ஏனெனில், ஏற்பாடு, பழைய, என்னை, ஆண்டவரே, சங்கீதங்கள், நோக்கி, உயர்த்துகிறேன், நான், உம்மை, விடுவித்தருளும், எனக்கு, நம்பிக்கை, உம்மீது, என்னைத், ஆன்மிகம், திருவிவிலியம், கேட்டருளும், நீதி, போயிற்று, செய்தான், உள்ளம்