சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 143
2 எனக்கு இரக்கம் காட்டுபவர், என் அடைக்கலக்கோட்டை அவரே: எனக்குப் பாதுகாப்பும் விடுதலையும் அளிப்பவர் அவரே. என் கேடயமும் புகலிடமும் அவரே: மக்கள் இனத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே.
3 ஆண்டவரே, நீர் மனிதனைப் பற்றிக் கவலைப்பட அவன் யார்? அவனைப் பற்றி நீர் நினைக்க அவன் யார்?
4 அவன் ஒரு மூச்சுக்கு ஒப்பானவன்: அவன் வாழ்நாள் மறைந்து போகும் நிழலை ஒத்தது.
5 ஆண்டவரே, உம் வானங்களைத் தாழ்த்தும், இறங்கிவாரும்: நீர் மலைகளைத் தொடும், அவைகள் புகையும்.
6 மின்னல் மின்னச் செய்யும், அவர்களைச் சிதறடியும்: உன் அம்புகளை எய்யும், அவர்களைக் கலங்கடியும்.
7 வானினின்று உமது கரத்தை நீட்டியருளும்: பெரு வெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்துக் காத்தருளும்.
8 அவர்கள் பேசுவது பொய்: அவர்கள் செய்யச் சபதமிடுவது வஞ்சகம்.
9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடலைப் பாடுவேன்: பத்து நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10 மன்னர்களுக்கு வெற்றியளிப்பவர் நீரே: உம் ஊழியன் தாவீதை விடுவித்தவர் நீரே.
11 தீயவரின் வாள்படையினின்று என்னை விடுவித்தருளும்: வேற்றினத்தார் கையினின்று என்கைக் காத்தருளும். அவர்கள் பேசுவது பொய்: அவர்கள் செய்யச் சபதமிடுவது வஞ்சகம்.
12 இளமையுடன் திகழும் எம் மக்கள் வளரும் செடிகள் போல் இருப்பார்களாக: எம் இளங்குமரிகள் செதுக்கப்பட்ட மூலைக்கற்கள் போலவும், ஆலயத் தூண்கள் போலவும் இருப்பார்களாக.
13 எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக: எல்லாவிதத் தானியங்களாலும் நிறைந்திருப்பனவாக. எங்கள் ஆடுகள் ஆயிரம் மடங்கு பலுகட்டும்: எங்கள் வயல்களில் அவைகள் பல்லாயிரமாகப் பெருகட்டும்.
14 எங்கள் மாடுகளும் பலுகட்டும்@ எங்கள் நகர மதில்களுக்குச் சேதமோ, எங்களுக்கு நாடு கடத்தப்பட்ட வாழ்வோ இல்லாதிருக்கட்டும்: எங்கள் ஊர்த் தெருக்களில் புலம்பல் இல்லாதிருக்கட்டும்.
15 இந்நலன்களை அடைந்த மக்கள் பேறுபெற்றோர்: ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, எங்கள், அவரே, ஏற்பாடு, பழைய, அவன், மக்கள், சங்கீதங்கள், நீர், பேறுபெற்றோர், உமக்குப், வஞ்சகம், சபதமிடுவது, பாடுவேன், நீரே, செய்யச், இல்லாதிருக்கட்டும், போலவும், இருப்பார்களாக, நிறைந்திருப்பனவாக, கையினின்று, ஆண்டவரே, யார், அளிப்பவர், ஆன்மிகம், திருவிவிலியம், அவைகள், போல், பேசுவது, காத்தருளும், என்னை, வேற்றினத்தார், பொய்