சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 136
2 அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3 எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்@ எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: ~சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்~ என்றார்கள்.
4 ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5 யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.
6 உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.
7 ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: ~தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்~ என்று அவர்கள் சொன்னார்களே!
8 பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.
9 உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், பேறு, பெற்றவன், நான், ஆன்மிகம், திருவிவிலியம், நாங்கள்