சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 137
2 உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்@ உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்@ ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3 நான் உம்மைக் கூவியழைத்த நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: என் ஆன்மாவுக்கு மேன் மேலும் வலிமை தந்தருளினீர்.
4 ஆண்டவரே, நீர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளை உலகின் அரசர் அனைவரும் கேட்டு, உம்மைப் போற்றுவார்கள்.
5 ஆண்டவருடைய மகிமை உண்மையில் உன்னதமானது~ என்று அவர்கள் ஆண்டவருடைய வழிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்கள்.
6 ஆண்டவர் உண்மையாகவே உன்னதமானவர் எனினும், எளியவரைக் கண்நோக்குகின்றார்: செருக்குற்றோரையோ வெகு தொலைவிலிருந்து காண்கிறார்.
7 நான் துன்பத்திடையே நடந்தாலும் என் உயிரைக் காப்பீர்: என் எதிரிகளின் சினத்துக்கு விரோதமாக உமது கரத்தை நீட்டினீர்@ உமது வலக்கரம் என்னைக் காப்பாற்றும்.
8 ஆண்டவர் தாம் தொடங்கிய வேலையை எனக்கெனச் செய்து முடிப்பார்: ஆண்டவரே, உமது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது@ உம் படைப்புகளைக் கைவிடாதேயும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, உமது, ஏற்பாடு, பழைய, நான், சங்கீதங்கள், ஆண்டவரே, ஆண்டவருடைய, ஆண்டவர், திருவிவிலியம், புனித, உம்மைப், ஏனெனில், ஆன்மிகம்