சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 135
2 தேவர்களுக்கெல்லாம் தேவனைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
3 ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
4 அரும்பெரும் செயல்கள் புரிந்தவர் அவர் ஒருவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
5 ஞானமுடன் வானங்களை அமைத்தவர் அவரே: அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
6 நீர்த்திரள்மீது நிலத்தை அமைத்தவர் அவரே@ அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
7 பேரொளி விளக்குகளை ஏற்படுத்தியவர் அவரே@ அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
8 பகலை ஆள்வதற்குப் பகலவனைப் படைத்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
9 இரவை ஆள்வதற்கு நிலவையும் விண்மீன்களையும் ஏற்படுத்தியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
10 எகிப்தியரின் தலைப்பேறுகளை வீழ்த்தியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
11 எகிப்தியரிடையிலிருந்து இஸ்ராயேலரை வெளியேற்றியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
12 வலிமையுள்ள கரத்தையும், தம் தோளின் பலத்தையும் காட்டியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
14 அக்கடல் நடுவே இஸ்ராயேலை வழிநடத்தியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
15 பாரவோனையும் அவன் படைகளையும் செங்கடலில் அமிழ்த்தியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
16 பாலைவனத்தின் வழியே தம் மக்களை அழைத்துச் சென்றவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
17 பெரிய அரசர்களை வதைத்து வீழ்த்தியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
18 வல்லமை மிக்க அரசர்களைக் கொன்று குவித்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
19 அமோறைய மன்னன் செகோனைக் கொன்றவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
20 பாசான் நாட்டு மன்னன் ஓக் என்பானை வதைத்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
21 அவர்கள் நாட்டை தம் மக்களுக்கு உரிமையாக்கியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
22 தம் ஊழியரான இஸ்ராயேலுக்கு உரிமையாக்கியவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
23 தாழ்வுற்ற நிலையில் நம்மை நினைவுகூர்ந்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
24 நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்தவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
25 உயிரினம் அனைத்திற்கும் உணவூட்டுபவர் அவரே@ அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
26 விண்ணக இறைவனைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, என்றென்றும், அவர், ஏனெனில், நிலைத்துள்ளது, இரக்கம், அவரைப், போற்றுங்கள், அவரே@, ஏற்பாடு, பழைய, புகழுங்கள், சங்கீதங்கள், மன்னன், உரிமையாக்கியவர், நம்மை, வீழ்த்தியவர், அமைத்தவர், திருவிவிலியம், ஆன்மிகம், ஏற்படுத்தியவர்