சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 128
2 இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர்: ஆனால் என் மீது வெற்றிக் கொள்ளவில்லை.
3 உழவர் என் முதுகின் மீது உழுதார்கள்: நெடியானவாய் அமைந்தன அந்தப் படைச்சால்கள்,
4 ஆண்டவரோ நீதியுள்ளவர்: தீயோர் சுமத்திய நுகத்தைத் தகர்த்தெறிந்தார்.
5 சீயோனைப் பகைப்பவர்கள் எல்லாரும் சிதறுண்டு பின்னடைவார்களாக!
6 கூரை வேயும் புல் போல் அவர்கள் ஆவார்களாக: பிடுங்குவதற்கு முன்பே உலர்ந்து விடுகிறதன்றோ!
7 அவற்றை அறுவடை செய்வதால் கை நிரம்புமா? அவ்வரிகளைக் கட்டுவதால் மடி நிரம்புமா?
8 அவ்வழியே செல்பவர்கள் அவர்களைப் பார்த்து ~ஆண்டவரின் ஆசி உங்கள் மீது தங்குவதாக~ என்றோ, ~ஆண்டவருடைய பெயரால் நாங்கள் உங்களுக்கு ஆசி கூறுகிறோம் ~ என்றோ கூற மாட்டார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, மீது, சங்கீதங்கள், என்றோ, போராடினர், நிரம்புமா, இளமையிலிருந்தே, திருவிவிலியம், ஆன்மிகம், என்னை, எதிர்த்துப்