சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 127
2 ஏனெனில், உன் கையால் உழைத்து உன் உணவைக் கொள்வாய்: பேறு பெற்றவனாவாய், எல்லாம் உனக்கு நலமாகும்.
3 கனி தரும் கொடி முந்திரி போல் உன் மனைவி உன் வீட்டின் உட்புறத்தில இருப்பாள்: ஒலிவச் செடிகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழ்ந்திருப்பர்.
4 ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்குக் கிடைக்கும் ஆசி இதுவே..
5 சீயோனிலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி பொழிவாராக: உன் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் செழுமையை நீ காணும்படி உனக்கு ஆசி கூறுவராக.
6 உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக: இஸ்ராயேல் மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, பேறு, சங்கீதங்கள், உனக்கு, அஞ்சும், ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவருக்கு