சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 129
2 ஆண்டவரே, என் கூக்குரலுக்குச் செவி சாய்த்தருளும்: என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
3 ஆண்டவரே, யான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்?
4 வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.
5 ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்: அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
6 என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,
7 இஸ்ராயேலர் ஆண்டவரை எதிர்ப்பார்ப்பார்களாக: ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது@ அவருடைய மீட்புத் துணை பொங்கி வழிகின்றது.
8 இஸ்ராயேலரை அவர் மீட்பார்: அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, ஆண்டவரே, சங்கீதங்கள், ஆண்டவரை, காவலர், உதயத்தை, எதிர், ஆன்மா, பாவங்களை, திருவிவிலியம், ஆன்மிகம், செய்த, உமக்கு, நம்பிக்கை