1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 அவர்கள் கலாசியாவைக் கைப்பற்றி அதைத் தங்களுக்குத் திறைகட்டும்படி செய்ததையும், அதற்காக அவர்கள் செய்த போர்களையும், அதற்கு அவர்கள் செய்த நன்மைகளையும் அவர் கேள்விப்பட்டார்.
3 அவர்கள் இஸ்பானியாவில் எவ்வளவு செய்தார்களென்றும், அந்நாட்டிலிருந்த பொன், வெள்ளிச் சுரங்கங்களை எவ்விதம் தங்கள் வயப்படுத்தினார்களென்றும், தங்கள் புத்திக் கூர்மையினாலும் பொறுமையினாலும் எல்லா இடங்களையும் கைப்பற்றினார்களென்றும்,
4 தங்களுக்கு அதிகத் தொலைவிலிருந்த நாடுகளைப் பிடித்து, பூமியின் எல்லைகளினின்று அந்நாடுகளைக் கீழ்ப்படுத்தவந்த அரசர்களை வென்று பெரிதும் சேதப்படுத்தினார்களென்றும், மற்ற அரசர்கள் ஆண்டு தோறும் அவர்களுக்குத் திறை செலுத்தி வருகிறார்களென்றும்,
5 தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த பிலிப்புவையும், சேத்தையர் அரசனான பெர்சனையும், தங்களுக்கு எதிராய் ஆயுதம் தாங்கி வந்த மற்றவர்களையும் முறியடித்துக் கீழ்ப்படுத்தினார்களென்றும்,
6 ஆசியாவின் அரசனான பெரிய அந்தியோக்கஸ் நூற்றிருபது யானைகளோடும் குதிரை வீரரோடும் தேர்களோடும் பெரும்படையோடும் அவர்களை எதிர்த்து வந்த போது தோற்கடிக்கப்பட்டானென்றும்,
7 அவனை உயிரோடு பிடித்து, அவனும், அவனுக்குப் பிறகு அரசாள்பவர்களும் தங்களுக்குத் திறை செலுத்தும்படியாகவும், பிணைகள் கொடுக்கும்படியாகவும் ஏற்பாடு செய்தார்களென்றும்,
8 அவர்கள் நாடுகளில் மிகவும் செழிப்பான இந்தியா, மேதியா, லிதோஸ் நாடுகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி எயுமேன் அரசனுக்குக் கொடுத்தார்களென்றும்,
9 கிரேசியா நாட்டார் அவர்களை கீழ்ப்படுத்த எண்ணியிருந்த போது அவர்கள் அதை அறிந்து,
10 படைத்தலைவன் ஒருவனை அவர்களுக்கு எதிராய் அனுப்பி, அவர்களோடு போர் செய்து அவர்களில் பலரைக் கொன்று, அவர்கள் மனைவி மக்களைச் சிறைப் படுத்தி, பொருட்களையும் பறித்து, நாட்டையும் கைப்பற்றி, சுவர்களைத் தகர்த்துடைத்து, அவர்களை அந்நாள் வரை அடிமைத்தனத்தில் அடக்கி வைத்தார்களென்றும்,
11 தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகளையும் தீவுகளையும் அழித்துத் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினார்களென்றும்,
12 ஆனால், தங்களோடு சமாதானமாயிருந்த தங்கள் நண்பரோடு நட்பைக் காப்பாற்றினார்களென்றும், அண்மையிலும் தொலைவிலுமிருந்த நாடுகளைத் தங்கள் கைவசப்படுத்தினார்களென்றும், அவர்கள் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்களென்றும்,
13 யார் யார் அரசாள வேண்டுமென்று மனம் வைத்து உதவி செய்தார்களோ அவர்களை அரசாளச் செய்தும், யார் யாரை நீக்க வேண்டுமென்று எண்ணினார்களோ அவர்களை நீக்கியும் வந்தார்களென்றும், மிகவும் வலிமை வாய்ந்தவர்களென்றும்,
14 இத்தகைய புகழிலும் அவர்களுக்குள் மற்றவர்களை விடப் பெரியவன் என்று காண்பிக்க முடிதரித்தவனும் அரசவுடை அணிந்தவனும் யாரும் இல்லையென்றும்,
15 தங்கள் தகைமைக்கு ஏற்ற காரியங்களை ஆய்ந்து நடத்த ஒரு சங்கம் ஏற்பாடு செய்து, சங்கத்தாராகிய முந்நூற்றிருபது பேருடைய கருத்துகளை நாள்தோறும் கேட்டார்களென்றும்,
16 தங்கள் நாடெங்கும் ஆட்சி செய்ய ஆண்டுதோறும் ஒரே மனிதனுக்கு அதிகாரமனைத்தும் கொடுத்தார்களென்றும், தங்களுக்குள் பொறாமையில்லாமலும் கறுவில்லாமலும் ஒருவனுக்கே கீழ்ப்படிந்து வந்தார்களென்றும் கேள்விப்பட்டார்.
17 ஆதலால், யூதாஸ், யாக்கோபு மகன் அருளப்பனின் புதல்வன் எயுபோலமுசையும், எலேயாசார் புதல்வன் யாசோனையும் தேர்ந்தெடுத்து, உரோமையரோடு சமாதானமும் நட்பும் செய்து கொள்வதற்காகவும்,
18 இஸ்ராயேல் நாட்டை அடிமைப்படுத்திய கிரேக்கருடைய கொடுமையினின்று தங்களை விடுவிக்கக் கேட்கும்படியாகவும் உரோமைக்கு அவர்களை அனுப்பினார்.
19 அவர்கள் வெகுதூரம் கடந்து உரோமைக்குச் சென்று, சங்கத்தில் நுழைந்து:
20 யூதாஸ் மக்கபேயுசும் அவர் சகோதரரும் யூத மக்களும் உங்களோடு நட்பும் சமாதானமும் செய்து கொள்வதற்கும், எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் எங்களை அனுப்பினார்கள் என்றார்கள்.
21 அவர்கள் சொல்லியது அனைவருக்கும் பிடித்திருந்தது.
22 சமாதானத்தினுடையவும் உடன்படிக்கையினுடையவும் நினைவாக அவர்கள் எழுதி, திரும்பவும் அவற்றைச் செப்புத் தகடுகளில் எழுதி யெருசலேமுக்கு அனுப்பினார்கள்.
23 அதாவது: என்றென்றும் கடலிலும் தரையிலும் உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும் நன்மை உண்டாவதாக, வாளும், பகைவரும் அவர்களை விட்டு விலகி இருக்கட்டும்.
24 உரோமையருக்கு எதிராக, அல்லது அவர்கள் நாடுகளில் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பகைவர் சண்டை செய்தால்,
25 யூத இனத்தார் காலத்துக்குத் தகுந்தபடி முழுமனத்தோடு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
26 உரோமையருடைய ஏற்பாட்டின்படி, சண்டை செய்கிறவர்களுக்குத் தானியமோ படைக்கருவிகளோ பணமோ கப்பல்களோ கொடுத்தல் கூடாது. ஆனால், அவர்களிடத்தில் ஒன்றும் வாங்காமலே அவர்களுக்கு உதவவேண்டும்.
27 இவ்விதமே யூத இனத்தாருக்கு எதிராகச் சண்டை நடக்குமாயின், காலத்துக்குத் தகுந்தபடி உரோமையர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
28 உரோமையர் ஏற்பாட்டின்படி, சண்டை செய்கிறவர்களுக்குத் தானியமோ படைக்கருவிகளோ பணமோ கப்பல்களோ கொடுத்தல் கூடாது. ஆனால், கபடில்லாமல் அவர்கள் கட்டளைகளை அனுசரிக்க வேண்டும்.
29 இதுதான் உரோமையர் யூத மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை.
30 இதில் எழுதப்பட்டிருப்பதைப் பிற்காலத்தில் அவர்களேனும் இவர்களேனும் ஏதாகிலும் கூட்டவோ குறைக்கவோ வேண்டுமாயின், இரு திறத்தாரின் சம்மதத்தின் மேல் செய்யலாம். குறைக்கப்படுவதும் சேர்க்கப்படுவதும் எதுவோ அதனை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
31 தெமெத்திரியுஸ் அரசன் யூத இனத்தாருக்குச் செய்த கொடுமைகளைப் பற்றியோவென்றால், நாங்கள் அவனுக்கு: எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூதரை நீ ஏன் கொடுமைப் படுத்தினாய்?
32 திரும்பவும் அவர்கள் எங்களிடம் முறையிடுவார்களாயின், உனக்கு எதிராய் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்து, கடலிலும் தரையிலும் உன்னை எதிர்த்துச் சண்டை செய்வோம் என்று எழுதியிருக்கிறோம் என்றார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர்களை, ஏற்பாடு, தங்கள், அவர்களுக்கு, சண்டை, செய்து, பழைய, உரோமையர், வேண்டும், வந்த, செய்ய, மக்கபே, யார், உதவி, எதிராய், தங்களுக்கு, ஆகமம், கைப்பற்றி, யூதாஸ், செய்த, கப்பல்களோ, பணமோ, எங்களை, படைக்கருவிகளோ, நட்பும், புதல்வன், கூடாது, சமாதானமும், கொடுத்தல், அனுப்பினார்கள், என்றார்கள், தானியமோ, தகுந்தபடி, காலத்துக்குத், தரையிலும், கடலிலும், எழுதி, ஏற்பாட்டின்படி, திரும்பவும், செய்கிறவர்களுக்குத், மிகவும், தங்களுக்குத், அவர், கேள்விப்பட்டார், செய்தார்களென்றும், அவர்களோடு, வாய்ந்தவர்களென்றும், திருவிவிலியம், ஆன்மிகம், மிக்க, வலிமை, எல்லா, பிடித்து, நாடுகளில், கொடுத்தார்களென்றும், தங்களை, வேண்டுமென்று, போது, எதிர்த்து, மற்ற, திறை, அரசனான, வந்தார்களென்றும்