1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 13
2 மக்கள் பயந்து நடுக்கமுற்றிருப்பதைக் கண்டு அவர் யெருசலேம் சென்று மக்களை ஒன்றாகச் சேர்த்து,
3 அவர்களுக்கு அவர் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார்: நானும் என் சகோதரரும் என் குடும்பத்தாரும் நம் கட்டளைகளுக்காகவும் கடவுள் ஆலயத்துக்காகவும் எத்தனை போர்கள் புரிந்தோமென்றும், எவ்வகைத் தொல்லைகளில் அகப்பட்டிருந்தோமென்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
4 இவற்றை முன்னிட்டன்றோ இஸ்ராயேலுக்காக என் சகோதரரெல்லாரும் மாண்டார்கள்@ நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன்.
5 துன்ப காலத்தில் நான் என் உயிரை ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை. என் சகோதரரை விட நான் மேம்பட்டவன் அல்ல.
6 ஆதலால், என் இனத்தாரும், கடவுளின் ஆலயமும், நம் பிள்ளைகளும், மனைவியரும் (பட்ட துன்பங்களுக்காகப்) பழிவாங்குவேன். ஏனென்றால், புறவினத்தார் எல்லாரும் நம்மீதுள்ள பகையினால் நம்மை அழித்தொழிக்கக் கூடியிருக்கிறார்கள்.
7 இவற்றைக் கேட்டதும் மக்களுக்குத் துணிவு உண்டாயிற்று.
8 எல்லாரும் உரத்த குரலில்: உம் சகோதரராகிய யூதாசுக்கும் யோனத்தாசுக்கும் பதிலாக நீரே எங்கள் படைத் தலைவராய் இருக்கிறீர்.
9 நீர் எங்கள் போர்களை நடத்தும்@ நீர் கட்டளையிடுவதையெல்லாம் நாங்கள் செய்வோம் என்றார்கள்.
10 அப்போது அவர் எல்லாச் சேனைகளையும் ஒன்று சேர்த்து, யெருசலேம் சுற்று மதில்களை விரைவிலே கட்டினார்.
11 அப்சலோம் புதல்வன் யோனத்தாசையும், அவனுடன் புதிய சேனைகளையும் யோப்பாவுக்கு அனுப்பினார். அவன் அதிலிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டு அவ்விடத்தில் தங்கியிருந்தான்.
12 திரிபோன் தோலெமாயிதை விட்டு, காவலில் இருந்த யோனத்தாசையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, திரளான சேனைகளோடு யூதேயா நாடு வரப் புறப்பட்டான்.
13 சீமோன் சமவெளிக்கு எதிரில் அத்துஸ் ஓரமாய்ப் பாளையம் இறங்கினார்.
14 சீமோன் தம் சகோதரர் யோனத்தாசுக்குப் பதிலாகப் படையெடுத்து வந்திருக்கிறாரென்றும், தன்னுடன் போர் செய்யப் போகிறாரென்றும் திரிபோன் அறிந்து, அவரிடம் தூதுவரை அனுப்பி:
15 உம் சகோதரர் யோனத்தாஸ் செய்து வந்த காரியங்களை முன்னிட்டு, அரசருக்குக் கொடுக்க வேண்டிய வரிக்காக அவரை நாங்கள் எங்களிடம் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
16 ஆதலால், இப்போது அவர் ஓடி விடாதபடிக்குப் பிணையாக நீர் நூறு வெள்ளிக் காசுகளையும், அவருடைய இரு புதல்வரையும் அனுப்பினால், அவரை விடுவிக்கிறோம் என்று சொன்னான்.
17 அவன் கபடமாய்ப் பேசுகிறானென்று சீமோன் அறிந்திருந்தும், இஸ்ராயேல் மக்களின் கோபத்துக்கும் பகைக்கும் தாம் ஆளாகாதபடி பணத்தையும் பிள்ளைகளையும் ஒப்புவிக்கும்படி கட்டளையிட்டார்.
18 அவர்கள்: பணத்தையும் பிள்ளைகளையும் அனுப்பாததால் தானே யோனத்தாஸ் மடிந்தார் என்று சொல்வார்களென்று எண்ணி,
19 பிள்ளைகளையும் நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினார். திரிபோனோ தான் சொல்லியதை மீறி, யோனத்தாசை அனுப்பவில்லை.
20 அதன் பிறகு, திரிபோன் நாட்டை அழிப்பதற்கு அதற்குள் புகுந்தான்@ அதோருக்குப் போகும் வழியாய்ச் சென்றான். அவன் சென்ற விடமெல்லாம் சீமோனும் தம் சேனைகளோடு சென்றார்.
21 கோட்டைக்குள் இருந்தவர்கள், திரிபோன் விரைவாய்ப் பாலைவனம் வழியாய் வந்து தங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும்படியாக அவனிடம் தூதுவர்களை அனுப்பினார்கள்.
22 அன்று இரவே போகும்படியாகத் திரிபோன் தன் குதிரை வீரரைத் தயாராக்கினான். ஆனால், பனி மிகுதியாக இருந்தபடியால் அவன் கலாத்துக்குப் போகவில்லை.
23 பாஸ்காமா அருகே வந்தபோது, அவன் யோனத்தாசையும் அவருடைய பிள்ளைகளையும் அவ்விடத்தில் கொன்றான்.
24 பிறகு திரிபோன் தன் சொந்த நாடு சேர்ந்தான்.
25 சீமோன் ஆட்களை அனுப்பித் தம் சகோதரர் யோனத்தாசின் எலும்புகளை எடுத்து வரச் செய்து, அவற்றைத் தம் முன்னோரின் நகரமாகிய மோதினில் அடக்கம் செய்தார்.
26 இஸ்ராயேலர் எல்லாரும் பெருந்துக்கம் கொண்டாடினார்கள்@ அவருக்காகப் பலநாள் புலம்பினார்கள்.
27 சீமோன் தம் தந்தையினுடையவும் சகோதரருடையவும் கல்லறையின் மேல் கட்டடம் ஒன்று எழுப்பி, முன்னும் பின்னும் சலவைக் கற்கள் பதித்தார்.
28 தந்தைக்கும் தாய்க்கும் நான்கு சகோதரர்களுக்கும் ஒன்றுக்கு முன் ஒன்றாக ஏழு கோபுரங்களை எழுப்பினார்.
29 இவைகளைச் சுற்றிலும் உயர்ந்த தூண்களை எழுப்பி, அத்தூண்களின் மேல் அவர்கள் நினைவாக போர்க் கருவிகளையும் வைத்தார். கடற்பயணம் செய்யும் யாவரும் காணும்படி போர்க்கருவிகளுக்கு அருகே கற்களில் வெட்டப்பட்ட கப்பல்களையும் அமைத்தார்.
30 மோதின் நகரில் இந்நாள் வரை இருக்கும் கல்லறை அதுவே.
31 திரிபோன் இளம் வயதினனான அரசன் அந்தியோக்கஸ் என்பவனோடு பயணம் செய்யும்போது கபடமாய் அவனைக் கொன்று,
32 அவனுக்குப் பதிலாய் அரசாண்டு, ஆசியாவில் முடிபுனைந்து, நாடுகளில் தொல்லைகள் பல விளைவித்தான்.
33 சீமோன் யூதேயாவில் கோட்டைகளைக் கட்டி, உயர்ந்த கோபுரங்களாலும் அகன்ற சுவர்களாலும் கதவுகளாலும் பூட்டுகளாலும் வலுப்படுத்தினார்@ கோட்டைக்குள் உணவு வகைகளையும் சேர்த்து வைத்தார்.
34 திறை செலுத்துவதினின்று தம் நாட்டை விடுவிக்கும்படி கேட்க வேண்டி, சீமோன் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தெமெத்திரியுசிடம் அனுப்பினார். ஏனென்றால், திரிபோன் செய்வதெல்லாம் கொள்ளையடிக்கும் செயலேயாகும்.
35 தெமெத்திரியுஸ் மன்னன் அவர்களுக்கு மறுமொழியாக:
36 தெமெத்திரியுஸ் மன்னர் தலைமைக்குருவும், மன்னர்கள் நண்பருமான சீமோனுக்கும், மூத்தோருக்கும், யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறுகிறோம்.
37 நீங்கள் அனுப்பிய பொன்முடியும், குருத்தோலையும் பெற்றுக் கொண்டோம். உங்களுடன் உறுதியான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளவும், உங்களுக்கு நாம் அனுப்பிய நன் கொடைகளைக் கொடுக்க மன்னரால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு எழுதவும் ஆயத்தமாயிருக்கிறோம்.
38 உங்களைப் பொறுத்த மட்டில், நாம் செய்துள்ள ஏற்பாடுகள் யாவும் உறுதியாய் இருக்கட்டும், நீங்கள் கட்டிய கோட்டைகளை உங்களுக்குச் சொற்தமாக விட்டு விடுகிறோம்.
39 இந்நாள் வரை நீங்கள் செய்துள்ள குற்றங்களையும் தீமைகளையும் மன்னிக்கிறோம். நீங்கள் கொடுக்க வேண்டிய முடியையும் கேட்காமல் விட்டு விடுகிறோம். இன்னும் யெருசலேமினின்று நமக்குச் சேர வேண்டிய வரி ஏதேனும் உண்டானால், அதையும் மன்னிக்கிறோம்.
40 உங்களில் யாரேனும் நம்முடைய படைகளில் சேர்வதற்குத் தகுதியுடையவராயிருந்தால், அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். நம்மிடையே சமாதானம் நிலவட்டும் என்று எழுதினான்.
41 நூற்றெழுபதாம் ஆண்டு இஸ்ராயேல் மக்கள் புறவினத்தாரின் அடிமைத் தளையினின்று நீங்கினார்கள்.
42 அது முதல் இஸ்ராயேல் மக்கள் பலகைகளிலும் பொதுப்புத்தகங்களிலும், தலைமைக்குருவும் சிறந்த படைத்தலைவரும் யூத பிரபுவுமான சீமோன் ஆட்சி செலுத்தின முதல் ஆண்டு என்று எழுதத் தொடங்கினார்கள்.
43 அந்நாட்களில் சீமோன் காசா நகரத்தை முற்றுகையிட்டு, படைகளால் அதைச் சூழ்ந்துகொண்டு, போர்ப்பொறிகளைச் செய்வித்து, நகரைச் சுற்றிவளைத்து, கோபுரமொன்றைத் தாக்கி நகரைப் பிடித்துக் கொண்டார்.
44 போர்ப்பொறியினுள் இருந்தவர்கள் திடீரென்று நகரினுள் நுழைய நகரில் பெரிய பரபரப்பு உண்டாயிற்று.
45 நகரில் இருந்தவர்கள் தங்கள் மனைவி மக்களோடு மதில் மேல் ஏறி, தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தங்களோடு சமாதானம் செய்யும்படி சீமோனைக் கேட்டுக்கொண்டார்கள்:
46 நாங்கள் செய்த தீமைகளுக்கு எங்களைத் தண்டியாமல், எங்கள் மீது இரக்கம் வையும் என்று மன்றாடினார்கள்.
47 சீமோனும் மனம் இரங்கி, அவர்களோடு நகருக்கு வெளியே துரத்தி விட்டு, சிலைகள் வைத்திருந்த வீடுகளைத் தூய்மைப்படுத்தி முடிந்த பின்பு, ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக இன்னிசைகள் பாடிக் கொண்டு நகருக்குள் புகுந்தார்.
48 அதனின்று எல்லாத் தீட்டுகளையும் நீக்கி, மறைக்கட்டளை ஒழுங்குகளை அனுசரிக்கச் செய்ய சிலரை ஏற்படுத்தினார். நகரத்திற்கு அரண் அமைத்து அதைத் தம் உறைவிடமாக்கிக் கொண்டார்.
49 யெருசலேம் கோட்டைக்குள் இருந்தவர்கள் வெளியே வரவும், நாட்டுக்குள் புகவும், வாங்கவும் விற்கவும் தடைசெய்யப் பட்டிருந்தனர். ஆதலால்,அவர்கள் பசியினால் வருந்தினார்கள். அவர்களில் பலர் பஞ்சத்தால் மாண்டார்கள்.
50 தங்களை விட்டு விடும்படி அவர்கள் சீமோனை மன்றாடினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்@ அவர்களை அவ்விடத்தினின்று துரத்தி விட்டு, கோட்டையைத் தீட்டுகளினின்றும் தூய்மைப்படுத்தினார்.
51 நூற்றெழுபத்தோராம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இஸ்ராயேலின் பெரும் பகைவன் ஒழிந்தமையால், நன்றிப் புகழ்ச்சியாகக் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, வீணை முதலிய இசைக்கருவிகள் முழங்க, இன்னிசை வாழ்த்துகள் பாடிக்கொண்டு கோட்டைக்குள் புகுந்தார்கள்.
52 இந்நாள் ஆண்டு தோறும் மகிழ்ச்சியாய்க் கொண்டாடப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார்.
53 கோட்டைக்கு அருகில் இருந்த ஆலயத்தின் மலையை வலுப்படுத்தி, அதில் அவரும் அவருடன் இருந்தவர்களும் வாழலாயினர்.
54 தம் புதல்வன் அருளப்பன் போரில் வீரம் நிறைந்தவனென்று சீமோன் கண்டு, அவனைப் படைகளுக்கெல்லாம் தலைவனாக நியமித்தார். அவன் காசாவில் வாழ்ந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, சீமோன், திரிபோன், விட்டு, அவன், ஏற்பாடு, நீங்கள், அவர், ஆண்டு, இருந்தவர்கள், பழைய, கொண்டு, கோட்டைக்குள், பிள்ளைகளையும், வெளியே, நாங்கள், வேண்டிய, அனுப்பினார், யோனத்தாசையும், செய்து, மக்கபே, சகோதரர், இந்நாள், நீர், கொடுக்க, துரத்தி, ஆதலால், யெருசலேம், சேர்த்து, மக்கள், இஸ்ராயேல், ஆகமம், நாடு, எங்கள், நான், மேல், எல்லாரும், நகரில், உயர்ந்த, சீமோனும், எழுப்பி, அருகே, வைத்தார், செய்துள்ள, கொண்டார், பிடித்துக், தங்கள், மன்றாடினார்கள், அவரும், சமாதானம், மன்னிக்கிறோம், அனுப்பிய, தலைமைக்குருவும், நாம், நாட்டை, விடுகிறோம், தெமெத்திரியுஸ், சேனைகளோடு, ஏனென்றால், அவர்களுக்கு, உண்டாயிற்று, சேனைகளையும், ஒன்று, கண்டு, திரளான, திருவிவிலியம், ஆன்மிகம், யூதேயா, வந்து, புதல்வன், அவ்விடத்தில், காசுகளையும், அவருடைய, பணத்தையும், கட்டளையிட்டார், வெள்ளிக், நூறு, இருந்த, தன்னுடன், யோனத்தாஸ், அவரை, பிறகு