1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 12
2 அவ்வாறே ஸ்பார்த்தியருக்கும் மற்ற இடங்களுக்கும் கடிதங்கள் அனுப்பினார்.
3 அவர்கள் உரோமைக்குச் சென்று, சங்கத்தில் நுழைந்து: "தலைமைக்குரு யோனத்தாசும் யூத குலத்தாரும் உங்களோடு முன்போல நட்பும் சமாதான உடன்படிக்கையும் செய்யும்படியாக எங்களை அனுப்பினார்" என்று சொன்னார்கள்.
4 யூதர்கள் சமாதானமாய்த் தங்கள் நாடுசேர உதவும்படியாக அந்ததந்த இடங்களுக்கு எழுதப்பட்டிருந்த கடிதங்களை உரோமையர் அவர்களிடம் கொடுத்தார்கள்.
5 ஸ்பாத்தியருக்கு யோனத்தாஸ் எழுதின கடிதமாவது:
6 தலைமைக்குருவான யோனத்தாசும், மூத்தோரும் குருக்களும், யூத குலத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சகோதரரான ஸ்பார்த்தியருக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.
7 முன் உங்கள் நாட்டை ஆண்டு வந்த ஆரியுஸ் என்பவரால், நீங்கள் எங்கள் சகோதரர்களென்று எங்கள் தலைமைக்குருவான ஓனியாசுக்கு எழுதியனுப்பப்பட்டிருந்தது. இத்துடன் அனுப்பியிருக்கும் கடிதத்தைக் கொண்டு இதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
8 உங்களால் அனுப்பப்பட்ட மனிதனை ஓனியாஸ் மரியாதையோடு ஏற்றுக்கொண்டார்@ நட்பையும் உடன்படிக்கைகையும் பற்றி எழுதியிருந்த கடிதத்தையும் ஒப்புக்கொண்டார்.
9 எங்கள் கைகளிலிருக்கும் மறைநூல்களினின்று நாங்கள் ஆறுதலடைவதனால் எங்களுக்கு இவையொன்றும் தேவையில்லாதிருப்பினும்,
10 உங்களிடமிருந்து பிரிந்து போகாதபடிக்கு உங்கள் உறவையும் நட்பையும் புதுப்பிக்க வேண்டி உங்களிடம் அனுப்பினோம். ஏனென்றால், உங்களிடமிருந்து செய்தி கேள்விப்பட்டுப் பலநாளாயிற்று.
11 நாங்களோ எங்கள் திருநாட்களிலும், மற்ற நல்ல நாட்களிலும் செலுத்தும் பலிகளில் இடைவிடாமல் உங்களை நினைப்பதுமல்லாமல், மற்றச் சடங்குகளிலும் சகோதரரை நினைவு கூர்கிறோம்.
12 உங்கள் புகழ் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
13 எங்களைப் பற்பல துன்பங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன@ பல போர்கள் நடந்தன. எங்களைச் சுற்றிலுமிருக்கும் மன்னவர்கள் எங்களை எதிர்த்துச் சண்டை செய்தார்கள்.
14 இந்தப் போர்களில் உங்களுக்காவது, இன்னும் பிற தோழர்கள், நண்பர்களுக்காவது தொந்தரவு கொடுக்க எங்களுக்கு விருப்பம் இருந்ததில்லை.
15 கடவுளுடைய உதவி எங்களுக்கு இருந்தமையால், அவர் எங்களைக் காப்பாற்றினார். எங்கள் பகைவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்.
16 ஆதலால், அந்தியோக்கஸ் புதல்வன் நுமேனியுசையும், யாசோன் புதல்வன் அந்திப்பாத்தரையும் உரோமையரோடு முன்னிருந்த நட்பையும் சமாதானத்தையும் புதுப்பிக்க அவர்களிடம் அனுப்பியிருக்கிறோம்.
17 நமது ஒற்றுமையைப் புதுப்பிக்கும்படியான கடிதத்தையும் அவர்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.
18 நாங்கள் எழுதியதற்குப் பதில் எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம்.
19 ஓனியாசுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதமாவது:
20 ஸ்பார்த்தியர் மன்னர் ஆரியுஸ், தலைமைக்குரு ஓனியாசுக்கு வாழ்த்துகள் அனுப்புகிறோம்..
21 ஸ்பார்த்தியரும் யூதரும் சகோதரரென்றும், ஆபிரகாமின் மக்கள் என்றும் நூல்களில் காணப்படுகிறது.
22 நாம் அதனை அறிந்திருப்பதை முன்னிட்டு, நீங்கள் சமாதானத்தைப் பற்றி எழுதினால் நலமாயிருக்கும்.
23 நாம் உங்களுக்கு எழுதுவது என்னவென்றால், நம் மந்தைகளும், நமக்குச் சொந்தமான யாவும் உங்களுடையனவாகவும், உங்களுக்குச் சொந்தமான யாவும் நம்முடையனவாகவும் இருக்கட்டும். இதை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்பதாம்.
24 அப்பொழுது தெமெத்திரியுசின் படைத்தலைவர்கள் முன்னிருந்த சேனைகளை விட அதிகமான சேனைகளோடு தன்னை எதிர்த்துச் சண்டை போட வந்திருப்பதாக யோனத்தாஸ் கேள்விப்பட்டார்.
25 யெருசலேமை விட்டுப் புறப்பட்டு, அமாதீத்தர் நாட்டில் அவர்களை எதிர்த்துச் சென்றார். ஏனென்றால், தம்முடைய நாட்டிற்குள் நுழையும்படி அவர் காத்திருக்கவில்லை.
26 அவர்கள் பாளையத்துக்கு ஒற்றர்களை அனுப்பினார். இரவில் அவரைத் தாக்க எண்ணியிருக்கிறார்களென்று அவர்கள் அவருக்கு அறிவித்தார்கள்.
27 பொழுது இறங்கிய போது, தம்முடையவர்கள் விழித்து இரவு முழுவதும் படைக்கருவிகளோடு தயாராய் இருக்கும்படி கட்டளையிட்டு, தம் பாளையத்தைச் சுற்றிலும் காவலரை நியமித்தார்.
28 யோனத்தாஸ் தம் சேனைகளோடு சண்டைக்கு ஆயத்தமாய் இருக்கிறாரென்று பகைவர் கேள்விப்பட்டுப் பயந்து, மனக்கலக்கமுற்று, தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்தில் நெருப்பு மூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
29 யோனத்தாசும் அவர் படைகளும் பொழுது விடியுமட்டும் அதை அறிந்தார்களில்லை. அப்போது தான் நெருப்பு வெளிச்சத்தைக் கண்டார்கள்.
30 யோனத்தாஸ் அவர்களைப் பின்தொடர்ந்தும், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் எலேயுத்தேருஸ் நதியை ஏற்கனவே கடந்து விட்டார்கள்.
31 சபாதேயர் என்னப்பட்ட அராபியரிடம் யோனத்தாஸ் சென்று, அவர்களை வென்று, அவர்கள் பொருட்களைக் கொள்ளையடித்தார்.
32 பின் அவ்விடம் விட்டுத் தமஸ்கு வந்து, அந்நாடெங்கும் சென்றார்.
33 சீமோன் புறப்பட்டு அஸ்காலோனுக்கும் அதையடுத்த கோட்டைகளுக்கும் வந்தான்@ யோப்பாவைத் தாக்கி, அதைக் கைப்பற்றினான்.
34 ஏனென்றால், தெமெத்திரியுஸ் படைகளுக்கு உதவிசெய்ய அவர்கள் மனம் கொண்டிருந்தார்களென்று கேள்விப்பட்டிருந்தான்@ அதைக் காப்பதற்குக் காவலரை ஏற்படுத்தினான்.
35 யோனத்தாஸ் திரும்பி வந்து, மக்களின் மூத்தோரைக் கூட்டி, யூதேயாவில் கோட்டைகள் கட்டும்படியும்,
36 யெருசலேமில் மதில்கள் அமைக்கும்படியும், கோட்டைக்கும் நகரத்துக்கும் மத்தியில் உயர்ந்த மதில் எழுப்பி, அதை நகரத்தினின்று பிரித்துத் தனியாக்கி, யாதொன்றும் வாங்கவும் விற்கவும் கூடாத நிலையில் வைக்கும்படியும் தீர்மானித்தார்.
37 நகரத்தைக் கட்டும்படியாக எல்லாரும் கூடினர். கிழக்கில் ஆற்றோரமாய் இருந்த சுவர் விழுந்து போயிருந்தமையால், அவர் அதைக் கட்டி எழுப்பினார். அது காப்தேத்தா என்று அழைக்கப்பட்டது.
38 சீமோன் செப்பேலாவில், அதியதா நகரைக் கட்டி, வலுப்படுத்திக் கதவுகளும் பூட்டுகளும் போட்டான்.
39 திரிபோன் என்பவன் ஆசியாவை ஆளவும் முடிபுனையவும், மன்னன் அந்தியோக்கஸ் என்பவனைக் கொல்லவும் எண்ணம் கொண்டிருந்த போது,
40 யோனத்தாஸ் தன்னைத் தடுத்துத் தன்னுடன் எதிர்த்துச் சண்டை செய்வாரென்று பயந்து, அவரைப் பிடித்துக் கொல்லும்படி தேடினான்@ ஆதலால், பெத்சானுக்குப் புறப்பட்டுச் சென்றான்.
41 யோனத்தாஸ் நாற்பதினாயிரம் படை வீரரோடு அவனை எதிர்த்து கொண்டு போய் பெத்சான் சேர்ந்தார்.
42 தன்னை எதிர்ப்பதற்குப் பெரும்படையோடு யோனத்தாஸ் வந்திருப்பதைத் திரிபோன் கண்டு பயந்து,
43 அவரை மிகுந்த மரியாதையோடு வரவேற்று, தன் நண்பரிடத்தில் அவரைப் புகழ்ந்து பேசி, அவருக்குப் பரிசளித்தான்@ தனக்குக் கீழ்ப்படிவது போலவே அவருக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்று தன் படைகளுக்கு உத்தரவிட்டான்.
44 மேலும், யோனத்தாசை நோக்கி: நமக்குள் சண்டை இல்லாதபோது மக்களைத் தொல்லைப்படுத்துவானேன்?
45 ஆதலால், அவர்களை அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி விட்டு, உன்னுடன் இருக்கச் சிலபேரை மட்டும் தேர்ந்து கொண்டு என்னோடு தோலெமாயிது நகரம் வா. அதையும், மற்றக் கோட்டைகளையும், படைகளையும், அலுவல் ஆற்றும் தலைவர்கள் அனைவரையும் உன்னிடம் ஒப்புவித்து விட்டு நான் திரும்பிப் போவேன்@ அதற்காகவே நான் வந்தேன் என்று கூறினான்.
46 யோனத்தாஸ் அவனை நம்பி, அவன் சொற்படி செய்து படைகளை அனுப்பி விட்டார். அவர்களோ யூதேயா நாடு சென்றார்கள்.
47 அவர் தம்மோடு மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டு, இவர்களில் ஈராயிரம் வீரர்களைக் கலிலேயாவுக்குத் திரும்பிப் போகச் சொன்னார்@ எஞ்சியிருந்த ஆயிரம் வீரர்களோ அவருடன் சென்றார்கள்.
48 யோனத்தாஸ் தோலெமாயிது நகருக்குள் நுழைந்த போது அந்நகரத்தார் கதவுகளை அடைத்து விட்டார்கள்@ அவரைப் பிடித்துக் கொண்டார்கள்@ அவருடன் வந்தவர்கள் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கினார்கள்.
49 அதுவுமின்றி, யோனத்தாசுடைய நண்பரெல்லாரையும் கொல்வதற்குப் படைகளையும் குதிரை வீரரையும் கலிலேயாவுக்கும் பெரிய சமவெளிக்கும் திரிபோன் அனுப்பினான்.
50 யோனத்தாசும் அவருடன் இருந்தவர்களும் பிடிபட்டு மாண்டார்களென்று அவர்கள் அறிந்து, தங்களுக்குத் தாங்களே துணிவு ஊட்டிக் கொண்டு, சண்டைக்குத் தயாராய் வந்தார்கள்.
51 தொடர்ந்து வந்தவர்களோ இவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கத் துணிந்திருப்பதைக் கண்டு, திரும்பிப் போய் விட்டார்கள்.
52 பிறகு இவர்கள் அமைதியாய் யூதேயா நாடு திரும்பிச் சென்றார்கள்@ யோனத்தாசுக்காகவும் அவருடன் மாண்டவர்களுக்காகவும் பெரிதும் துக்கம் கொண்டாடினார்கள். இஸ்ராயேலும் அழுது புலம்பியது.
53 இவர்களைச் சுற்றிலுமுள்ள இனத்தார் இவர்களை அழித்தொழிக்கத் தேடினார்கள்.
54 ஏனென்றால், இவர்களை நடத்துகிறவனும் இவர்களுக்கு உதவி செய்கிறவனும் இல்லை. ஆதலால், இப்போது இவர்களுடன் நாம் சண்டை செய்து, இவர்களை ஒழித்து, மனித வரலாற்றில் இவர்கள் பெயரே அற்றுப் போகும்படி செய்தால் நலம் என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, யோனத்தாஸ், கொண்டு, ஏனென்றால், எங்கள், சண்டை, அவர், ஏற்பாடு, அவருடன், யோனத்தாசும், எதிர்த்துச், ஆதலால், அவர்களை, பழைய, நட்பையும், அனுப்பினார், அதைக், ஓனியாசுக்கு, நாம், அவரைப், மக்கபே, எங்களுக்கு, நாங்கள், நீங்கள், உங்கள், ஆகமம், இவர்கள், இவர்களை, போது, கண்டு, திரும்பிப், பயந்து, திரிபோன், சீமோன், அவர்களைப், தயாராய், காவலரை, நெருப்பு, விட்டார்கள், வந்து, போய், நான், படைகளையும், செய்து, யூதேயா, சென்றார்கள், நாடு, தோலெமாயிது, விட்டு, பிடித்துக், கட்டி, அவனை, பொழுது, அனுப்பி, படைகளுக்கு, உங்களுக்கு, உரோமையரோடு, ஆரியுஸ், மரியாதையோடு, பற்றி, உங்களிடமிருந்து, கடிதத்தையும், தலைமைக்குருவான, கடிதமாவது, சென்று, மற்ற, தலைமைக்குரு, எங்களை, அவர்களிடம், தங்கள், புதுப்பிக்க, உங்களிடம், சொந்தமான, முன்னிருந்த, யாவும், சேனைகளோடு, புறப்பட்டு, தன்னை, புதல்வன், அந்தியோக்கஸ், கேள்விப்பட்டுப், தேர்ந்து, ஆன்மிகம், திருவிவிலியம், உதவி, சென்றார்