1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 14
2 தெமெத்திரியுஸ் தன் எல்லைகளுக்குள் நுழைந்தானென்று பாரசீகம், மேதியா நாடுகளின் அரசனான ஆர்சாசெஸ் கேள்விப்பட்டு, அவனை உயிரோடு பிடித்துத் தன்னிடம் கொண்டுவருவதற்காகத் தன் படைத்தலைவரில் ஒருவனை அனுப்பினான்.
3 அவன் தெமெத்திரியுசின் படையை நோக்கிச் சென்று, அதை முறியடித்து, அவனைப் பிடித்து, ஆர்சாசெஸ் அரசனிடம் கூட்டிச் சென்று சிறைப்படுத்தினான்.
4 சீமோனுடைய ஆட்சியில் யூதேயா நாடு அமைதியாய் இருந்தது. அவர் தம் இனத்தாருக்கு நன்மை செய்துவந்தார். அவர்கள் எந்நாளும் அவரது ஆட்சித்திறனிலும் புகழிலும் மகிழ்ந்திருந்தனர்.
5 யோப்பாவைத் துறைமுகப் பட்டினமாகக் கொண்டு, அதனின்று தீவுகளுக்குச் சென்றது, அவர் செய்த புகழுக்குரிய செயல்களில் ஒன்று.
6 தம் நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, நாடு முழுவதையும் அவர் கீழ்ப்படுத்தினார்.
7 பலரைச் சிறைப்படுத்தி, காசாராவையும் பெத்சூராவையும் கோட்டையையும் தம் வயப்படுத்தினார். அவைகளிலிருந்த ஒழுக்கக் கேடுகளை நீக்கினார். அவரை எதிர்த்தவர்கள் ஒருவரும் இல்லை.
8 ஒவ்வொருவனும் சமாதானத்தில் தன் தன் நிலத்தைப் பயிரிட்டு வந்தான். யூதேயா நாட்டில் நல்ல விளைச்சல் உண்டாயிற்று. நாட்டிலுள்ள மரங்களும் கனிகளைக் கொடுத்தன.
9 முதியோர் எல்லாரும் பொதுவிடங்களில் அமர்ந்து, நிலத்தின் செழுமையைப் பற்றிப் பேசினார்கள். இளைஞரோ போருடைகளையும் போர் அணிகளையும் அணிந்தார்கள்.
10 நகரங்களில் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்து, அவற்றை (நகரங்களை) அவர் ஆயுதக் கிடங்குகளாகவும் ஏற்படுத்தினார். பாரெங்கும் அவர் புகழ் பரவியது.
11 அவர் நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
12 இஸ்ராயேல் பெரிதும் மகிழ்ந்திருந்தது. எல்லாரும் தத்தம் கொடிமுந்திரித் தோட்டங்களிலும் அத்திமரத் தோப்புகளிலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அச்சம் வருவிப்பவர் எவரும் இல்லை.
13 அப்பொழுது அரசர்கள் அவர்களுக்கு அஞ்சி இருந்தனர்.
14 அவர் ஏழைகளைப் பாதுகாத்து, கட்டளைகளை அனுசரிக்கும்படி செய்து, எல்லா அக்கிரமங்களையும் தீமைகளையும் அகற்றினார்.
15 புனித இடத்தை அலங்கரித்து ஆலயத்தின் பாத்திரங்களை அதிகமாய்ச் சேகரித்து வைத்தார்.
16 யோனத்தாஸ் இறந்து போனாரென்று உரோமையிலும் ஸ்பார்த்தாவிலும் கேள்வியுற்று, அவர்கள் மிக்க துயரம் அடைந்தார்கள்.
17 அவருக்குப் பதிலாக அவர் சகோதரர் சீமோன் தலைமைக்குருவாகத் தெரிந்துகொள்ளப்பட்டாரென்றும், நாடு முழுமையும், நகரங்கள் யாவையும் தம் ஆட்சிக்கு உட்படுத்தினார் என்றும் கேள்விப்பட்ட போது,
18 அவருடைய சகோதரர்காளகிய யூதாசோடும் யோனத்தாசோடும் தாங்கள் செய்திருந்த சமாதான உடன்படிக்கையையும் நட்பையும் புதுபிக்கும்படி பித்தளைத்தகடுகளில் அவருக்கு எழுதினார்கள்.
19 யெருசலேம் ஆலயத்துக்கு முன்பாக அவை வாசிக்கப்பட்டன.
20 ஸ்பார்த்தியர் எழுதியது@ ஸ்பார்த்திய பிரபுக்களும் நகரங்களும் தலைமைக்குரு சீமோனுக்கும் மூத்தோருக்கும் குருக்களுக்கும், மற்ற யூத மக்களுமாகிய சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்.
21 எங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் உங்கள் மகிமை, பெருமை, மகிழ்ச்சிகளைப் பற்றி எங்களுக்கு அறிவித்தார்கள். நாங்களும் அவர்கள் வருகையினால் மகிழ்ச்சி அடைந்தோம்.
22 அவர்கள் எங்கள் மக்கள் சபையில் சொல்லிய யாவையும் நாங்கள் எழுதிக் கொண்டோம். அதாவது: அந்தியோக்கஸ் புதல்வன் நுமேனியுசும், யாசோன் புதல்வன் அந்திப்பாத்தரும் யூதருடைய தூதர்களாக முன்செய்திருந்த உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்காக வந்தார்கள்.
23 அவர்களை மரியாதையாய் ஏற்றுக்கொள்வதற்கும், ஸ்பார்த்தியருடைய நினைவாக மக்கள் சபையின் நூற்களில் எழுதி வைப்பதற்கும் மக்கள் விருப்பம் கொண்டார்கள். இதன் நகல் ஒன்றைத் தலைமைக் குருவாகிய சீமோனுக்கு அனுப்பி இருக்கிறோம்.
24 இதன் பிறகு சீமோன் உரோமையரோடு உடன்படிக்கை செய்ய நுமேனியுசை ஆயிரம் காசு நிறையுள்ள ஒரு பெரிய பொற் கேடயத்தோடு உரோமைக்கு அனுப்பினார்.
25 உரோமை மக்கள் இதைக் கேள்விப்பட்ட போது: சீமோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் நாங்கள் எவ்விதம் நன்றி செலுத்தப் போகிறோம்?
26 ஏனென்றால், அவர் தம் சகோதரரை முன்னிருந்த நிலையில் உறுதிப்படுத்தினார்@ இஸ்ராயேலின் பகைவர்களை முறியடித்தார்@ அதன் சுதந்திரத்தை நிலைநாட்டினார் என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அதனைப் பித்தளைத் தகடுகளில் எழுதி, சீயோன் மலையில் காணக்கூடிய இடத்தில் வைத்தார்கள்.
27 எழுதப்பட்டிருந்தது என்னவென்றால்: நூற்றெழுபத்திரண்டாம் ஆண்டு எலுல் மாதம் பதினெட்டாம் நாள்- சீமோன் தலைமைக்குருவான மூன்றாம் ஆண்டு- அசராமெலில்,
28 குருக்களும் மக்களும், குல பிரபுக்களும், நாட்டின் மூத்தோரும் கூடிய பெரிய சபையில் அறிவிக்கப்பட்டது என்னவென்றால்: நமது நாட்டில் பற்பல போர்கள் நடந்தன.
29 யாரிப் கோத்திரத்தில் மத்தத்தியாஸ் புதல்வர் சீமோனும், அவர் சகோதரரும் தாங்களே ஆபத்துக்குத் துணிந்து, தங்கள் கடவுள் ஆலயத்தையும் கட்டளையையும் காப்பதற்குத் தங்கள் பகைவரை எதிர்த்து, தங்கள் இனத்தாரைப் பெரிதும் மாட்சிப்படுத்தினார்கள்.
30 யோனத்தாஸ் தம் இனத்தாரைக் கூட்டி, தாம் தலைமைக்குருவாகி, அவர்கள் மீது ஆட்சி செலுத்தி வந்தார்.
31 பகைவர்கள் அவர்களைக் கீழ்ப்படுத்தவும், அவர்கள் ஆலயத்தைக் கைக்கொள்ளவும் முயன்றார்கள்.
32 அப்போது சீமோன் அவர்களை எதிர்த்துத் தம் இனத்தாருக்காகச் சண்டை செய்து ஏராளமான பணம் செலவழித்து, தம் இனத்தாரில் வீரமுள்ளவர்களுக்குப் போர்க்கருவிகளைச் சேகரித்துக் கொடுத்து, அவர்களுக்குச் சம்பளமும் வழங்கினார்.
33 யூதேயா நகரங்களையும், முன் பகைவர்களின் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்த யூதேயா நாட்டின் எல்லையிலுள்ள பெத்சூரா நகரத்தையும் வலுப்படுத்தி, அவ்விடத்தில் யூத வீரரைக் காவலாக வைத்தார்.
34 கடலோரத்தில் இருந்த யோப்பாவையும், முன் பகைவர்கள் வாழ்ந்து வந்த அசோத்துஸ் எல்லைகளிலுள்ள காசாராவையும் வலுப்படுத்தி, அவ்விடங்களிலும் யூதரைக் காவல் வைத்தார். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் கொடுத்தார்.
35 மக்கள் சீமோன் செய்தவைகளையும், தம் இனத்தாருக்கு அவர் செய்ய எண்ணியிருந்த மகிமையையும், கண்டு, இவையெல்லாம் அவரால் உண்டானதைப் பற்றியும், அவருக்குத் தம் இனத்தார் மீதுள்ள நீதி, விசுவாசத்தைப் பற்றியும், அவர் எல்லா வகையிலும் தம் மக்களை மேன்மைப்படுத்தத் தேடியதைப் பற்றியும் குறித்து அவரைத் தங்கள் தலைவராகவும், குருக்கள் தலைவராகவும் ஏற்படுத்தினார்கள்.
36 அந்நாட்களில் அவர் ஆட்சியின் கீழ் எல்லாம் கைகூடியது. ஏனைய மக்கள் அந்நாட்டினின்று துரத்தப்பட்டார்கள். யெருசலேமில் தாவீதின் நகரிலும் கோட்டையிலும் இருந்து கொண்டு, கடவுள் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தவைகளைத் தீட்டுப்படுத்திக் களங்கம் உண்டாகியவர்களும் துரத்தப்பட்டார்கள்.
37 நாட்டினுடையவும் நகரினுடையவும் காவலுக்கு யூத வீரரை ஏற்படுத்தி, யெருசலேமின் மதில்களை அவர் உயர்த்தினார்.
38 தெமெத்திரியுஸ் மன்னன் அவரைத் தலைமைக்குருவாக நியமித்தான்.
39 அதே சமயத்தில் அவரைத் தன் நண்பனாகவும் கொண்டு, அவரை மிக்க மகிமை, பெருமைகளால் விளங்கச் செய்தான்.
40 ஏனென்றால், உரோமையரால் நண்பர்கள், தோழர்கள், சகோதரர்களென்று யூதர்கள் அழைக்கப்படுவதையும், சீமோனுடைய பிரதிநிதிகளை அவர்கள் மரியாதையாய் ஏற்றுக் கொண்டதையும் கேள்விப்பட்டிருந்தான்.
41 மேலும் உண்மையான இறைவாக்கினர் ஒருவர் உதிக்கும் வரையில், யூதர்களும் அவர்கள் குருக்களும்: காலமெல்லாம் அவரே தங்கள் தலைவரும் தலைமைக்குருவுமாய் இரக்க இசைந்ததுமன்றி,
42 தங்களுக்குத் தலைவராகவும், தங்கள் மறைபற்றிய காரியங்களைக் கவனிக்கவும், தங்கள் வேலைகளையும் நாட்டையும் படையையும் காவலரையும் நடத்தும் பெரியோரை நியமிக்கவும்,
43 கடவுள் ஆலயத்தைப் பாதுகாக்கவும் அவரை நியமித்தார்களென்றும், அனைவரும் அவருக்குக் கீழ்ப்படிவதென்றும், அவர் பெயராலேயே எல்லா ஒப்பந்தங்களையும் எழுதுவதென்றும், அவர் கருஞ்சிவப்பு மேலாடையும் பொன்னாடையும் அணிந்து கொள்வதென்றும்,
44 இப்போது தீர்மானிக்கப்பட்டவைகளில் எதையேனும் மக்கள், குருக்கள் இவர்களில் எவரும் மறுக்கக் கூடாதென்றும், அவர் வார்த்தைகளுக்கு எவரும் எதிர்த்துப் பேசக் கூடாதென்றும், அவர் அனுமதி இல்லாமல் நாட்டில் சபை கூடுவதில்லையென்றும், கருஞ்சிவப்பு மேலாடையும் பொன் கொக்கியும் அணிவதில்லையென்றும்,
45 இவைகளுக்கு எதிராகச் செய்பவன் அல்லது இவைகளை மறுப்பவன் எவனும் குற்றவாளியாவான் என்றும் தீர்மானித்தார்கள்.
46 இவைகளையெல்லாம் மக்கள் ஒத்துக் கொண்டு சீமோனை ஏற்றுக் கொண்டார்கள்.
47 சீமோனும் இசைந்து தலைமைக்குரு பதவியை நிறைவேற்றவும், யூத குலத்தாருக்கும் குருக்களுக்கும் தலைவராகவும் அதிகாரியாகவும் இருக்கவும், அனைத்தையும் முன்னின்று நடத்தவும் ஒப்புக்கொண்டார்.
48 இவைகளைப் பித்தளைத் தகடுகளில் எழுதி, காணக்கூடிய இடத்தில் கடவுள் ஆலயத்தின் முன்வாயிலில் வைப்பதென்று அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
49 சீமோனுடையவும், அவர் புதல்வருடையவும் உபயோகத்துக்காக நகல் ஒன்று கடவுள் ஆலயத்தின் கருவூலப் பெட்டியில் வைக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், மக்கள், தங்கள், ஏற்பாடு, சீமோன், கடவுள், தலைவராகவும், கொண்டு, பழைய, நாட்டில், நாடு, யூதேயா, நாட்டின், ஆலயத்தின், எவரும், அவரை, வைத்தார், ஆகமம், ஆண்டு, அவரைத், தெமெத்திரியுஸ், எல்லா, பற்றியும், எழுதி, மக்கபே, ஏனென்றால், பித்தளைத், இதன், மரியாதையாய், அவர்களை, கொண்டார்கள், தகடுகளில், செய்ய, நகல், பெரிய, சீமோனும், வலுப்படுத்தி, முன், மேலாடையும், குருக்கள், ஏற்றுக், துரத்தப்பட்டார்கள், பகைவர்கள், புதல்வன், என்னவென்றால், இடத்தில், குருக்களும், கருஞ்சிவப்பு, கூடாதென்றும், காணக்கூடிய, கேள்விப்பட்ட, இனத்தாருக்கு, சீமோனுடைய, ஒன்று, காசாராவையும், எல்லாரும், இல்லை, சென்று, ஆர்சாசெஸ், புனித, திருவிவிலியம், ஆன்மிகம், சண்டை, மேதியா, நூற்றெழுபத்திரண்டாம், சேகரித்து, நிலைநாட்டினார், தலைமைக்குரு, பிரபுக்களும், சீமோனுக்கும், குருக்களுக்கும், சபையில், மகிமை, போது, என்றும், செய்து, அவர்களுக்கு, யோனத்தாஸ், மிக்க, யாவையும், நாங்கள்