யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 9
2 என் தந்தை சிமையோனின் கடவுளான ஆண்டவரே, கெட்ட ஆசையால் உந்தப்பட்டு ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்த புறவினத்தாரைப் பழி வாங்கும் பொருட்டு, சிமையோனுக்கு நீர் ஒரு வாளைக் கொடுத்தீர்.
3 அத்தோடு ஆர்வத்துடன் உம் பக்கம் நின்ற உம் ஊழியர்களுக்கு அப்புறவினத்தாரின் மனைவியரைக் கொள்ளைப் பொருளாகவும், அவர்கள் புதல்வியரை அடிமைகளாகவும், அவர்களது சொத்தையெல்லாம் சொந்தமாகவும் தந்தருளினீர். அதுபோல கைம்பெண்ணான எனக்கும் நீர் உதவிசெய்ய வர வேண்டும் என்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.
4 முந்தினவற்றைச் செய்து முடித்தவர் நீரே. ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் திட்டமிட்டவரும் நீரே. உம் திட்டங்களே நிறைவேறி வந்துள்ளன.
5 ஏனெனில் உம் வழிகளை எல்லாம் நீர் முன்னேற்பாடு செய்து, முன்னறிவுடன் உம் தீர்ப்புகளை அளித்து வருகின்றீர்.
6 எகிப்தியரின் படைகளை நீர் முறியடித்தது போல் அசீரியரின் படைகளையும் முறியடித்தருளும். அக்காலத்தில் எகிப்தியர் தம் தேர்களிலும் குதிரைகளிலும் கணக்கற்ற தங்கள் வீரர்களிலும் நம்பிக்கை வைத்து ஆயுதம் தாங்கியவர்களாய் உம் ஊழியர்களைப் பின்தொடர்ந்து செல்லுகையில், உமது பார்வை அவர்கள் மேல் விழுந்தது.
7 உடனே அவர்கள் இருளில் அகப்பட்டு வருந்தினார்கள்.
8 பாதாளத்தில் அவர்கள் கால் செல்ல, தண்ணீரில் அவர்கள் மூழ்கினார்கள்.
9 ஆண்டவரே, இவர்களுக்கும் அவ்வாறே நேரிடுவதாக! இவர்களும் தம் திரளான வீரர்களையும் தேர்களையும் வேல்களையும் கேடயங்களையும் அம்புகளையும் நம்பி, ஈட்டியைக் கையாளுவதில் திறமை வாய்ந்தவர்கள் என்று பெருமை பாராட்டுகிறார்கள்.
10 நீர் எம் கடவுள் என்றும், நீர் தொன்றுதொட்டே படைகளை அழிக்க வல்லர் என்றும், உமது பெயர் ஆண்டவர் என்றும் அவர்கள் அறியார்கள்.
11 தொடக்கத்திலிருந்து நீர் செய்து வருவது போல், உமது கைவன்மையால் அவர்களது ஆற்றலைத் தகர்த்தெறியும்@ உமது திருத்தலத்தை மாசுபடுத்துவோம் என்றும், உமது திருப்பெயர் விளங்கும் ஆலயத்தைத்தீட்டுப்படுத்துவோம் என்றும், தங்கள் வாளால் உமது பலிபீடத்தைத் தரை மட்டமாக்குவோம் என்றும் சபதம் கூறியுள்ள இவர்களின் ஆற்றல் உமது கடுங் கோபத்தின்முன் அற்றுப் போவதாக!.
12 (என் எதிரியின்) அகந்தை அவனது சொந்த வாளுக்கே இரையாகும்படி செய்வீராக!
13 அவன் என் கண் என்ற கண்ணியிலே சிக்கிக் கொள்ளட்டும். என் நயமான மொழிகளால் அவனை வீழ்த்தியருளும், ஆண்டவரே!
14 நான் அவனைத் துரும்பாக எண்ணும்படி வேண்டிய திடனையும், நான் அவனை வெல்லத் தக்க ஆற்றலையும் எனக்குத் தாரும்.
15 ஏனெனில் ஒரு பெண்ணே அவனை வீழ்த்துவாளாயின், அது உமது திருப்பயெரின் மகிமைக்குச் சான்றாய்த் திகழும் அன்றோ!
16 ஏனெனில், ஆண்டவரே உமது ஆற்றல் சேனையின் பலத்தில் அன்று@ உமது திருவுளத்தை நிறைவேற்ற நீர் குதிரைப்படைப் பலத்தை எதிர் நோக்கியிருப்பதுமில்லை. செருக்குற்றோரை நீர் என்றும் விரும்பியதில்லை. ஆனால் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ளோரின் மன்றாட்டை நீர் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
17 விண்ணகக் கடவுளே, தண்ணீரைப் படைத்தவரே, எல்லாப் படைப்புக்கும் ஆண்டவரே, உமது இரக்கத்தில் முழு நம்பிக்கை கொண்டு உம்மை மன்றாடும் பாவி எனக்குச் செவிக்கொடுத்தருளும்.
18 உமது உடன் படிக்கையை நினைவுகூர்ந்தருளும். ஆண்டவரே, உமது ஆலயம் என்றும் உமக்கு உரிய முறையில் புனிதத் தன்மையில் நிலைத்திருக்கும்படி எனக்கு நாவாற்றலைக் கொடுத்தருளும்@ நான் எண்ணியதை நிறைவேற்ற எனக்கு மனத்திடனை அளித்தருளும்.
19 இதனால் எல்லா இனத்தவரும் நீரே கடவுள் என்றும், உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் அறிந்துகொள்ளட்டும்" என்று மன்றாடினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, உமது, என்றும், நீர், ஆண்டவரே, ஏற்பாடு, யூதித், பழைய, கடவுள், அவனை, நான், ஏனெனில், நீரே, செய்து, ஆகமம், எனக்கு, நிறைவேற்ற, திருவிவிலியம், ஆற்றல், அவர்களது, படைகளை, போல், தங்கள், நம்பிக்கை, ஆன்மிகம்