யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 தன் பணிப் பெண்னை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று மயிராடையையும் கைம்பெண்ணுக்குரிய தன் ஆடையையும் களைந்தாள்.
3 நீராடிய பின், விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, சீவி முடித்து, தலைப்பட்டை அணிந்து கொண்டாள். மகிழ்ச்சிக்குரிய ஆடைகளை உடுத்திக் காலணியோடு கடகம், அட்டிகை, குண்டலம், மோதிரம் முதலிய தன் எல்லா அணிகலன்களாலும் தன்னை அழகுப்படுத்திக் கொண்டாள்.
4 ஆண்டவர் அவளுக்கு இன்னும் அதிக அழகைக் கொடுத்தார். ஏனென்றால், இவ்வலங்காரமெல்லாம் சிற்றின்பத்தின் பொருட்டு அன்று, நல்லதொரு காரியத்தின் பொருட்டே. எனவே. அவள் நிகரற்ற வடிவழகு பூண்டவளாய் யாவர் கண்ணுக்கும் தோன்றும்படி ஆண்டவர் அவளை இத்தகைய அழகுடன் விளங்கச் செய்தார்.
5 யூதித் இரசக் குப்பி, எண்ணெய்ச் சிமிழ், வறுத்த தானியம், அத்திப்பழ வற்றல், அப்பம், பாற்கட்டி, , முதலியவற்றைத் தன் பணிப் பெண் கையில் கொடுத்தாள். பின் அவளோடு வெளியே புறப்பட்டுச் சென்றாள்.
6 அவ்விருவரும் நகர வாயிலை அடைந்தனர். அங்கே ஓசியாசும் நகரப் பெரியோர்களும் தங்களை எதிர்ப்பார்த்து நிற்கக் கண்டனர். அவர்கள் யூதித்தைக் கண்டு, அவளது பேரழகை நோக்கிப் பெரு வியப்புற்றனர்.
7 ஆயினும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
8 யெருசலேம் உன்னால் மகிமை பெறும் பொருட்டும், உன் பெயர் நீதிமான்கள், புனிதர்கள் முதலியோரின் வரிசையில் இடம் பெறும் பொருட்டும், நம் முன்னோரின் கடவுள் உனக்கு அருள் புரிந்து, உன் இதயச் சிந்தனைகளைத் தமது வலிமையால் உறுதிப்படுத்துவாராக" என்று கூறி விடை கொடுத்தனர்.
9 அங்கு இருந்தோர் அனைவரும், "அங்ஙனமே ஆகுக, ஆகுக!" என ஒருவாய்ப்பட மொழிந்தனர்.
10 யூதித்தோ ஆண்டவரை நோக்கி வேண்டுதல் புரிந்த வண்ணமாய்த் தன் பணிப் பெண்ணோடு நகர வாயிலைத் தாண்டிச் சென்றாள்.
11 பொழுது புலரும் வேளையில் அவள் மலையினின்று இறங்கி வந்தாள். அப்பொழுது அசீரியரினின் ஒற்றர்கள் அவளுக்கு எதிரே ஓடிவந்து, அவளைப் பிடித்து, "நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கேப் போகிறாய்? என வினவினர்.
12 அவள் மறுமொழியாக, "நான் எபிரேயப் பெண். நான் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டேன். காரணம், அவர்கள் உங்களை இழிவாக எண்ணி உங்கள் இரக்கத்தை அடையும் பொருட்டு உங்களிடம் சரணடையத் தாமே முன் வராததால் அவர்கள் உங்களுக்கு இரையாவர் என்று எனக்குத் தெரியும்.
13 ஆதலால், நான் எனக்குள்ளே சிந்தித்து, படைத்தலைவர் ஒலொபெர்னெஸ் முன்பாக நானே போய் எபிரேயருடைய இரகசியங்களை அவருக்கு வெளிப்படுத்தி, தம் படைவீரர்களுக்கு யாதொரு சேதமுமின்றி நகரைப் பிடித்துக் கொள்வதற்கான வழியைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க வந்துள்ளேன்" என்றாள்.
14 அந்த மனிதர்கள் அவள் சொன்னதைக் கேட்டு, அவள் முகத்தை உற்று நோக்கினர். அப்பொழுது யூதித்தின் ஒப்பில்லா வடிவழகைக் காண அவர்களுக்குக் கண் கூச்சமும் பெருவியப்பும் உண்டாயின.
15 பிறகு அவர்கள் யூதித்தை நோக்கி, "எங்கள் தலைவரிடம் வந்து பேசுமாறு நீ முடிவு செய்தது நல்ல காரியமே. அதனால் உன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாய்.
16 நீ அவர் முன் நிற்கும் போது அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவர் உனக்கு நன்மை செய்வார்@ உன் மேல் மிக அன்பாய் இருப்பார் என்பது உறுதி" என்று சொல்லினர். ஒலொபெர்னெசிடம் அவளைப் பற்றி அறிவித்த பின் அவளை அவனுடைய பாசறைக்கு அழைத்துச் சென்றனர்.
17 தன் முன் வந்து நின்ற அவளைக் கண்டவுடனே ஒலொபெர்னெசின் கண்கள் மயக்கம் கொண்டன.
18 அவனுடைய அலுவலர் அவனை நோக்கி, "இவ்வளவு அழகிய பெண்கள் எபிரேயருக்குள் இருக்க, அவர்களை இழிவாய் எண்ணுவதைக் காட்டிலும், அவர்களுடைய பெண்களின் பொருட்டேனும் அவர்களோடு போர் புரிவதே நலம் என்றனர்.
19 அப்பொழுது கருஞ்சிவப்புப் பட்டால் அமைக்கப்பட்டுப் பொன், மரகதம் முதலிய விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பாலிகையின் கீழ் ஒலொபெர்னெஸ் அமர்ந்திருந்தான்.
20 அவனைக் கண்ட யூதித் தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து அவனை வணங்கிளாள். ஒலொபெர்னெஸ் தன் அண்டையில் நின்ற பணியாளர்களுக்கு உத்தரவிட, அவர்கள் யூதித்தைத் தூக்கி நிறுத்தினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவள், ", ஏற்பாடு, யூதித், பின், பழைய, ஆகமம், ஒலொபெர்னெஸ், முன், நோக்கி, பணிப், அப்பொழுது, நான், அவளைப், ஓடிவந்து, ஆகுக, வந்து, நின்ற, அவனை, அவனுடைய, அவர், பற்றி, அவர்களை, சென்றாள், விலையுயர்ந்த, கொண்டாள், முன்பாக, ஆண்டவரை, திருவிவிலியம், ஆன்மிகம், முதலிய, ஆண்டவர், பெறும், பொருட்டும், பெண், அவளை, அவளுக்கு, பொருட்டு, உனக்கு