யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 எனவே, பேசவும் துணியாது, தலைக்குணிந்து நின்றனர். எபிரேயர் ஆயுதம் தாங்கியவர்களாய்த் தங்கள் மீது படையெடுத்து வருகிறார்கள் என்று கேள்விப் பட்டு, எல்லாவற்றையும் விட்டு விட்டு வயல் வெளிகள், மலைப் பாதைகள் மூலம் தப்பி ஓடினர்.
3 அவர்கள் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்ட இஸ்ராயேலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர், எக்காளம் ஊதியும் பெரும் கூச்சலிட்டுக் கொண்டும் மலையினின்று இறங்கி வந்தனர்.
4 அசீரியர் ஒற்றுமை இன்றிச் சிதறி ஓடினர். இஸ்ராயேலரோ ஒன்றாகச் சேர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து, கண்ணில் பட்ட அசீரியர்கள் அனைவரையும் அழித்தொழித்தனர்.
5 மேலும் ஓசியாஸ் இஸ்ராயேல் நாட்டின் நகரங்கள், மாநிலங்கள் தோறும் ஆளனுப்பினான்.
6 ஆகையால் அந்நாட்டு மக்கள் அனைவரும் இளைஞரைத் தேர்ந்தெடுத்து, ஆயுதம் தாங்கியோராய் அவர்கள் அசீரியர்களைப் பின் தொடருமாறு அனுப்பி வைத்தனர். இவர்கள் தங்கள் நாட்டின் கடைசி எல்லை வரை அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களை வாளுக்கு இரையாக்கினர்.
7 பெத்தூலியா நகரில் எஞ்சியிருந்தோர் அசீரியருடைய கூடாரங்களில் புகுந்து, அவர்கள் விட்டுச் சென்றிருந்த பொருட்களை எல்லாம் ஏராளமாகக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
8 வெற்றி கொண்ட வீரர்கள் பெத்தூலியாவுக்குத் திரும்பின போது அசீரியருடைய பொருட்களைக் கொள்ளையிட்டுக் கொணர்ந்தனர். ஆகையால் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும் மற்றப் பொருட்களுக்கும் கணக்கே இல்லை. இதனால் சிறியோர் பெரியோர் அனைவருமே செல்வர்களாயினர்.
9 யோவாக்கீம் என்னும் தலைமைக் குரு தம் எல்லாக் குருக்களோடும் யெருசலேமிருந்து பெத்தூலியா நகரத்திற்கு யூதித்தைச் சந்திக்க வந்தார்.
10 அவள் அவருக்கு எதிர்கொண்டு வரக்கண்டு மக்கள் எல்லாரும் ஒரே குரலாய் அவளை வாழ்த்தி, "யெருசலேமின் மகிமை நீ! இஸ்ராயேலின் மகிழ்ச்சி நீ! நம் மக்களின் பெருமையும் நீயே! ஏனென்றால் நீ செய்தது தீரச்செயல்.
11 நீ கற்புடையவளாய் உன் கணவனுக்குப் பின் மற்றெந்த ஆடவனையும் அறியாத மாபத்தினியாய் இருந்தமையால் தான் நீ வலிமை பெற்றாய். ஆண்டவரே உனக்கு ஆற்றல் அளித்தவர். ஆதலால் என்றென்றும் நீ புகழப்படுவாய்" என்றனர்.
12 இதைக் கேட்டு மக்கள் அனைவரும், "அப்படியே ஆகுக, ஆகுக!" என்று ஆர்ப்பரித்தனர்.
13 அசீரியருடைய சொத்துகளையெல்லாம் திரட்டிச் சேர்க்க இஸ்ராயேலருக்குக் குறைந்தது முப்பது நாள் தேவைப்பட்டது,
14 ஒலொபெர்னெசுக்குச் சொந்தமான பொன், வெள்ளி, ஆடை, மாணிக்கக் கற்கள், தட்டுமுட்டுகள் முதலியவற்றையெல்லாம் அவர்கள் யூதித்துக்குக் கொடுத்தனர்.
15 மகளிர், கன்னியர், இளைஞர் ஆகியோர் இன்னிசைக் கருவிகளை இசைக்க, மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சி கொண்டாடினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, மக்கள், பின், பழைய, அனைவரும், அசீரியருடைய, யூதித், ", அவர்களைப், ஆகமம், பெத்தூலியா, ஆன்மிகம், திருவிவிலியம், எல்லாரும், மகிழ்ச்சி, ஆகுக, ஆகையால், தங்கள், ஓடினர், ஆயுதம், சேர்ந்து, நாட்டின், விட்டு