யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 14
2 மேலும் சூரியன் உதிக்கும் நேரத்தில் நீங்கள்அனைவரும் ஆயுதம் தாங்கியவர்களாய் சும்மா போகிறவர்களைப் போலல்ல போருக்குப் புறப்பட்டு வேகமாய் ஓடும் வீரர்களைப் போலப் புறப்படுங்கள்.
3 அதைக் கண்ட உடனே காவலர் ஓடிப்போய்த் தங்கள் தலைவனைப் போருக்கு அழைக்க நேரிடும்.
4 அப்போது படை அதிகாரிகள் ஒலொபெர்னெசின் பாசறைக்கு ஓடி, அவன் தலையில்லா உடல் தன் இரத்ததில் தோய்ந்து கிடக்கக் கண்டு பெரும் திகில் அடைவர்.
5 நீங்களோ அசீரியர் தப்பியோடுவதைக் கண்டவுடனே, சிறிதேனும் அஞ்சாமல் அவர்களைப் பின் தொடருங்கள். ஏனென்றால், ஆண்டவர் அவர்களை உங்கள் காலடியில் அழித்துப் போடுவார்" என்றாள்,
6 அப்போது ஆக்கியோர் இஸ்ராயேலின் கடவுள் புரிந்துள்ள அரும் பெரும் செயல்களைக் கண்டு வியப்புற்றான்@ அஞ்ஞான நெறியைக் கைவிட்டு, அந்நேரமே அவரை மெய்யான கடவுளாக ஏற்றுக்கொண்டான். பின், விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்டான். இந்நாள் வரை அவன் வழிவந்தோர் யூதரோடு சேர்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.
7 சூரியன் உதித்தவுடனே அவர்கள் ஒலொபெர்னெசின் தலையை மதிலின் மேல் கட்டித் தொங்க விட்டனர். வீரர் யாவரும் ஆயுதம் தாங்கியோராய்ப் பேரொலியிட்டுக் கொண்டு ஓடினர்.
8 காவலர் அதைக்கண்டு ஒலொபெர்னெசின் கூடாரத்தில் விரைந்து சென்றனர்.
9 அங்கிருந்தவரோ கூடாரத்தண்டை வந்தனர். அவனைத் தாங்களே எழுப்பத் துணியாமல் மற்றவர்களைக் கூச்சலிட்டு அமளி செய்யும்படி ஏவி விட்டு தங்களாலன்று, கூச்சலிட்ட வேறு யாராலோ ஒலொபெர்னெஸ் எழுப்பட்டான் என்று தோன்றும்படி உபாயம் செய்தனர்.
10 ஏனென்றால் அசீரியப் படைத்தலைவனின் அறைக் கதவைத் தட்டவோ, திறந்து உள்ளே செல்லவோ எவனும் துணியவில்லை.
11 ஆனால் நூற்றுவர் தலைவர், ஆயிரவர் தலைவர் முதலிய படை அதிகாரிகள் வந்து, வாயிற் காவலரை நோக்கி, "நீங்கள் உள்ளே போய் அவரை எழுப்புங்கள்.
12 ஏனென்றால், அதோ அந்த (எபிரேய) எலிகள் தம் பொந்துகளிலிருந்து வெளியேறி நம்மைப் போருக்கு அழைக்கத் துணிந்துவிட்டன" என்றனர்.
13 அப்போது வாகவோ படைத்தலைவனின் கூடாரத்தினுள் புகுந்து, உள் திரைக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டினான். ஏனெனில் ஒலொபெர்னெஸ் யூதித்தோடு படுத்துத் தூங்குகிறான் என்று அவன் நினைத்திருந்தான்.
14 அவன் காதுகொடுத்துக் கேட்டான்@ மூச்சு வாங்கும் ஓசை முதலாய் இல்லை என்று கண்டு, திரையை அணுகி, அதைத் தூக்கிப் பார்த்தான். அங்கே ஒலொபெர்னெசின் உடல் இரத்தத்தில் தோய்ந்து தரையில் கிடக்கக் கண்டான். உடனே ஓலமிட்டு அழுதான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, யூதித்தின் கூடாரத்துள் நுழைந்து பார்த்தான்.
15 அவள் அங்கே இல்லை.ஆதலால் வாகாவோ வெளியே வந்து மக்களை நோக்கி,.
16 அந்த எபிரேயப் பெண் நபுக்கோதனசாருடைய வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாள்! அதோ, ஒலொபெர்னெஸ் தலையில்லா முண்டமாய்க் கிடக்கிறார்!" என்றான்.
17 அசீரியப்படை அதிகாரிகள் அதைக் கேட்டுத் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். அவர்கள் அச்ச மிகுதியால் கதி கலங்கி நின்றனர்.
18 கூடாரத்திலோ என்றும் இல்லாப் பேரிரைச்சல் எழுந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, யூதித், அவன், ஒலொபெர்னெசின், பழைய, கொண்டு, ஆகமம், ஒலொபெர்னெஸ், அதிகாரிகள், ஏனென்றால், அப்போது, பின், நோக்கி, ", கண்டு, அவரை, பெரும், தலைவர், அங்கே, ஆடைகளைக், கிழித்துக், பார்த்தான், இல்லை, உள்ளே, வந்து, அந்த, படைத்தலைவனின், தலையில்லா, சூரியன், ஆயுதம், தொங்க, கட்டித், ஆன்மிகம், மதிலின், அதைக், உடனே, உடல், தோய்ந்து, திருவிவிலியம், போருக்கு, காவலர், தங்கள், கிடக்கக்