யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 13
2 எல்லாரும் மிஞ்சிய குடிபோதையில் இருந்தனர்.
3 யூதித் மட்டும் அறைக்குள் இருந்தாள்.
4 ஒலொபெர்னெஸ் குடிபோதையில் தன் படுக்கையின் மேல் தூங்கிக் கொண்டிருந்தான்.
5 அப்போது யூதித் தன் பணிப் பெண்ணை நோக்கி, நீ வெளியே போய்க் கதவண்டையில் நின்று யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொள் என்றாள்.
6 பின்னர் யூதித் படுக்கையின் முன் நின்று கொண்டு அரவமின்றி உதடுகள் மட்டும் அசையக் கண்ணீர் விட்டுப் பின்வருமாறு வேண்டிக் கொண்டாள்.
7 இஸ்ராயேலரின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு மனவுறுதியை அளித்தருளும். நீர் வாக்குறுதி வழங்கியபடி உமது நகராகிய யெருசலேம் பெருமை பெறும் பொருட்டு நான் இப்பொழுது செய்யப் போவதைக் கண்ணோக்கியருளும். உம்மால் கைகூடும் என்று நம்பி நான் செய்யத் துணிந்துள்ளதைச் செய்து முடிக்கும்படி எனக்கு அருள்தாரும்.
8 இவற்றைச் சொன்னவுடனே அவள் படைத்தலைவனுடைய படுக்கையின் தலைமாட்டில் இருந்த தூணை நெருங்கி, அங்கே தொங்கிக் கொண்டிருந்த அவனுடைய வாளை அவிழ்த்தெடுத்தாள்.
9 அதை உருவினதும் கையால் அவன் தலைமயிரைப் பிடித்துக் கொண்டு, கடவுளாகிய ஆண்டவரே, இப்பொழுது என்னைத் திடப்படுத்தியருளும் என்று வேண்டினாள்.
10 இரண்டு முறை அவன் கழுத்தை வெட்டித் தலையைக் கொய்தாள். பின்னர் ஒலொபெர்னெசின் உடலைக் கீழே தள்ளிவிட்டு, தூண்களில் தொங்கிக் கொண்டிருந்த பாலிகையை அவிழ்த்தெடுத்தாள்.
11 யூதித் சற்றுப் பொறுத்து வெளியே வந்து ஒலொபெர்னெசின் தலையைத் தன் பணிப் பெண்ணிடம் கொடுத்துத் தன் பையிலே அதை வைத்துக் கொள்ளச் சொன்னாள்.
12 பின்னர் அவ்விருவரும் தங்கள் வழக்கப்படி செபிக்கப் போகிறது போல வெளியே புறப்பட்டுப் போயினர். கூடாரத்தைக் கடந்து பள்ளத் தாக்கைச் சுற்றி நகர வாயிலை அடைந்தனர்.
13 யூதித் நகர வாயிற் காவலரைத் தூரத்திலிருந்தே பார்த்து, நகர வாயிலைத் திறந்து விடுங்கள். கடவுள் நம்மோடு இருக்கிறார்.அவர் தமது ஆற்றலை இஸ்ராயேலில் விளங்கச் செய்து விட்டார் என்று கூவினாள்.
14 அவளது குரலொலியைக் கேட்டவுடனே, அக்காவலர் நகரப் பெரியோர்களை அழைத்து வந்தனர்.
15 சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அவனிடம் ஓடிவந்தனர். ஏனெனில் அவள் திரும்பி வருவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.
16 மேலும் மக்கள் அனைவரும் விளக்குகளை ஏந்திக்கொண்டு அவளைச் சுற்றி வந்தனர். அவள் ஒரு மேடைமேல் ஏறி, "அமைதி! அமைதி!" என்றுச் சொல்லி, மக்களை நோக்கி, "நம் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.
17 ஏனெனில் அவர் தம்மை நம்பினவர்களைக் கைவிட்டவரல்லர்.
18 அவர் இஸ்ராயேலுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை தம் அடியாளாகிய என்னைக் கொண்டு நிறைவேற்றியருளினார். எப்படியென்றால், அவர் இன்றிரவே தம் மக்களின் பகைவனை என் கையால் கொன்றுவிட்டார். என்று சொன்னாள்.
19 பின் பையிலிருந்த ஒலொபெர்னெசின் தலையை எடுத்து மக்களுக்குக் காட்டி, "இதோ, அசீரிய படைத்தலைவனான ஒலொபெர்னெசின் தலை! இதோ, அவனது பாலிகை! இதன் கீழ் தான் அவன் குடிபோதையில் கிடந்தான். அங்கே தான் நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை ஒரு பெண்ணின் கையால் சாகடித்தார்.
20 இங்கிருந்து நான் போன போதும், அவ்விடத்தில் இருந்த காலத்திலும், அவ்விடமிருந்து இங்குத் திரும்பிவந்த வழியிலும் கடவுளின் தூதுவரே என்னைக் காத்து வந்தார் என்று உயிர் உள்ள கடவுளின் திருப்பெயரால் ஆணையிட்டுச் சொல்கிறேன். ஆண்டவருடைய அடிகளாகிய என்னை அவர் மாசுபடாது காத்ததுமன்றி, யாதொரு பாவ மாசுமின்றி என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார், அவர் வெற்றி கொண்டதையும், என்னைக் காப்பாற்றியதையும், உங்களை விடுதலை செய்ததையும் பற்றியே நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
21 ஆண்டவரைப் போற்றுங்கள்@ ஏனெனில் அவர் நல்லவர்@ அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே" என்றாள்.
22 அதைக் கேட்டு அனைவரும் ஆண்டவரைத் தொழுதனர். அவளை நோக்கி, "ஆண்டவர் தமது ஆற்றலால் உன்னை ஆசீர்வதித்தார். ஏனென்றால் அவர் உன்னைக் கொண்டு எங்கள் பகைவரை அழித்தொழித்தார்" என்றனர்.
23 அதற்குப்பின் இஸ்ராயேலரின் அரசனான ஓசியாஸ் அவளை நோக்கி, "மகளே, மண்ணுலகப் பெண்களுக்குள் நம் ஆண்டவரால் ஆசி பெற்றவள் நீயே!
24 விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவர் வாழ்க! எங்கள் பகைவரின் படைத்தலைவனுடைய தலையைக் கொய்யும்படி அவரன்றோ உனக்குத் துணையாக இருந்தார்.
25 உன் இனத்தார் பட்ட அவதியையும் துன்பத்தையும் கண்டு நீ அவர்கள் பொருட்டு உன் உயிரைத் துரும்பாக எண்ணி, ஆண்டவர் திருமுன் அவர்களை அழிவினின்று காப்பாற்றினாய். அதன் பொருட்டு ஆண்டவரே உன் பெயரை எவ்வளவு சிறக்கச் செய்துள்ளார் என்றால், எல்லா மனிதரும் ஆண்டவருடைய பேராற்றலை என்றென்றும் நினைவு கூர்வது போல் இனி உன்னையும் என்றென்றும் புகழ்வர்" என்றான்.
26 இதைக் கேட்டு மக்கள் அனைவரும், "அப்படியே ஆகுக, ஆகுக!" என்றனர்.
27 அதற்குப்பின் அவர்கள் ஆக்கியோரை அழைத்து வந்தனர். யூதித் அவனை நோக்கி, "இஸ்ராயேலரின் கடவுள் தம் பகைவரைப் பழிவாங்குவார் என்று நீர் கடவுளாகிய ஆண்டவருக்குச் சான்று பகன்றீர், இல்லையா? அதே போல் அவர் இன்றிரவே விசுவாசமற்றவர் அனைவரின் தலைகளையும் என் கையால் வெட்டி வீழ்த்தினார்.
28 இதற்குச் சான்றாக இதோ, ஒலொபெர்னெசின் தலை! அவன் அகந்தை பிடித்தவனாய் இஸ்ராயேலின் கடவுளை இகழ்ந்ததுமன்றி, உம்மை நோக்கி, ~இஸ்ராயேலர் பிடிப்பட்ட பின் உன்னை வாளுக்கு இரையாக்குவேன்~ என்று சொல்லி மிரட்டினானன்றோ?" என்றாள்.
29 ஆக்கியோரோ ஒலொபெர்னெசின் தலையைக் கண்டவுடனே, அச்ச மிகுதியால் மயங்கித் தரையில் முகங்குப்புற விழுந்தான்.
30 மூர்ச்சை தெளிந்த பின் அவன் யூதித்தின் கால்களில் விழுந்து அவளை வணங்கினான்,
31 யாக்கோபின் உறைவிடமெங்கும் உம் கடவுளால் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். ஏனென்றால், உம் பெயர் விளங்கும் இடம் எல்லாம் இஸ்ராயேலின் கடவுளும் உம் பொருட்டு மகிமை பெறுவார்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", அவர், யூதித், ஒலொபெர்னெசின், நோக்கி, கடவுளாகிய, கொண்டு, அவன், ஏற்பாடு, ஆண்டவர், அனைவரும், பொருட்டு, பழைய, வெளியே, கையால், பின், நான், அவள், என்றென்றும், தலையைக், அவளை, நீர், என்னைக், என்றாள், ஆகமம், படுக்கையின், குடிபோதையில், ஏனெனில், பின்னர், வந்தனர், இஸ்ராயேலரின், ஆண்டவரே, ஆண்டவரைப், இன்றிரவே, தான், கடவுளின், அவனை, உன்னை, போல், அதற்குப்பின், என்றான், ஆகுக, இஸ்ராயேலின், என்றனர், எங்கள், என்னை, கேட்டு, சொல்லி, ஏனென்றால், ஆண்டவருடைய, சுற்றி, எனக்கு, இப்பொழுது, செய்து, படைத்தலைவனுடைய, திருவிவிலியம், ஆன்மிகம், மட்டும், பணிப், நின்று, இருந்த, அங்கே, கடவுள், தமது, அழைத்து, மக்கள், சொன்னாள், வந்து, தொங்கிக், கொண்டிருந்த, அவிழ்த்தெடுத்தாள், அமைதி