யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 12
2 யூதித் அவனை நோக்கி, "நீர் எனக்குக் கொடுக்கப் பணித்த பொருட்களை நான் உண்பது குற்றமாகும். எனவே நான் அவற்றை உண்ணாமல், நானே கொண்டு வந்துள்ளவற்றை உண்பேன்" என்றாள்.
3 அதற்கு ஒலொபெர்னெஸ், "நீ கொண்டு வந்தவை தீர்ந்து போனால் பின் நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டான்.
4 அதற்கு யூதித் அவனைப் பார்த்து, "என் தலைவ, உமது உயிர்மேல் ஆணை! நான் கொண்டு வந்துள்ளது தீருமுன்பே நான் எண்ணியுள்ளதைக் கடவுள் செய்து முடிப்பார்" என்று ஆணையிட்டாள். பிறகு படைத்தலைவனின் ஊழியர்கள் அவன் சொல்லியிருந்த கூடாரத்திற்குள் அவளை அழைத்துக் கொண்டு போயினர்.
5 அதனுள் நுழையும் போது யூதித் மீண்டும் படைத் தலைவனை நோக்கி, "நான் இரவிலும் பொழுது புலர்வதற்கு முன்னரும் கடவுளிடம் செபிப்பதற்காக வெளியே செல்ல அனுமதி கொடும்" என்று கேட்டாள்.
6 அதற்கு ஒலொபெர்னெஸ் தன் வாயிற்காவலரை நோக்கி, "மூன்று நாள் வரை இந்தப் பெண் தன் விருப்பம் போல் கடவுளை மன்றாடுவதற்குப் போகவர அனுமதி கொடுக்கிறேன்" என்றான்.
7 யூதித்தோ இரவு தோறும் வெளியே சென்று பெத்தூலியாவின் பள்ளத்தாக்கில் இருந்த நீருற்றில் குளிப்பாள்.
8 பிறகு எழுந்து இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளிக்குமாறு எனக்கு நீர் வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவாள்.
9 பின்னர் கூடாரத்திற்குத் திரும்பி வந்து, மாலை நேரத்தில் தான் உணவு கொள்ளும் வரையிலும் தூய்மையாக இருப்பாள்.
10 நான்காம் நாள் ஒலொபெர்னெஸ் தன் ஊழியர்களுக்கு இரவு விருந்து செய்தான். அப்பொழுது வாகாவோ என்னும் தன் அண்ணகனை நோக்கி, அந்த எபிரேய மாதை நீ போய்ப் பார். அவள் என்னோடு விரும்பி உணவு கொள்ள வேண்டும் என்று அவளுக்குப் புத்தி சொல்.
11 ஏனெனில் ஒரு பெண் ஆடவனோடு சேராததால் அவனைப் பரிகசிப்பது, அசீரியரிடையே இழிசெயலாகக் கருதப்படுகிறது அன்றோ?" என்றான்.
12 பிறகு வாகாவோ யூதித்திடம் சென்று அவளை நோக்கி, நல்ல பெண்மணியாகிய நீ என் தலைவரிடம் வந்து அவர் முன்னிலையில் மரியாதை பெறவும், அவரோடு உணவு கொள்ளவும், மது அருந்தி மகிழ்ந்திருக்கவும் அஞ்ச வேண்டாம் என்றான்.
13 யூதித் அவனுக்கு மறுமொழியாக. என் தலைவர் சொல்லைத் தட்ட நான் யார்?
14 அவருக்கு நல்லதும் மேன்மையானதுமாகத் தோன்றுவதை எல்லாம் நான் செய்யத் தயார்.அவருக்கு விருப்பமானதை எல்லாம் என் வாழ்நாள் முழுவதும் நான் மேன்மை வாய்ந்ததாகக் கருதுவேன் என்று சொன்னாள்.
15 பின் எழுந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு கூடாரத்தினுள் புகுந்து படைத்தலைவன் முன் நின்றாள்.
16 அவளைக் கண்டதும் ஒலொபெர்னெசின் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஏனெனில் அவள் மேல் அவன் மோகவெறி கொண்டிருந்தான்.
17 அவளை நோக்கி, என் அன்புக்கு உகந்த நீ உட்கார்ந்து மது அருந்திச் சிரித்து மகிழக் கடவாய் என்றான்.
18 இன்று போல் என் வாழ்நாளில் என்றுமே நான் மகிழ்வுற்றது கிடையாது@ எனவே குடிப்பேன் என் தலைவ! என்று சொல்லி,
19 யூதித் தன் பணிப் பெண் தனக்காகத் தயாரித்து வைத்திருந்தவற்றை எடுத்து அவன் முன்பாக உண்டு குடிக்கத் தொடங்கினாள்.
20 ஒலொபெர்னெசும் அவள் மட்டில் மிகவும் அக்களித்து மதுவை மிதமிஞ்சிக் குடித்தான். அன்று போல் அவன் என்றுமே குடித்ததில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், யூதித், நோக்கி, ", ஏற்பாடு, கொண்டு, என்றான், அவன், பிறகு, ஒலொபெர்னெஸ், பழைய, அதற்கு, அவள், அவளை, போல், ஆகமம், உணவு, பெண், எழுந்து, வந்து, வேண்டும், வாகாவோ, என்றுமே, எல்லாம், அவருக்கு, ஏனெனில், சென்று, நாள், திருவிவிலியம், ஆன்மிகம், நீர், செய்தான், பின், அவனைப், அவளுக்குப், அனுமதி, வெளியே, தலைவ, இரவு