யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 11
2 உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு விரோதமாய்ப் போராட எண்ணியிருந்திருக்கவே மாட்டேன்.
3 அது இருக்கட்டும், நீ அவர்களை விட்டு என்னிடம் வரக் காரணம் என்ன? சொல்" என்றான்.
4 அதற்கு யூதித், "நீர் உம் அடியாளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். ஏனென்றால் உம் அடியாளின் வார்த்தையின் படி நீர் செய்வீராயின் ஆண்டவர் உம் வழியாக உத்தமமான காரியத்தை நிறைவேற்றுவார்.
5 உலகத்தின் அரசராகிய நபுக்கோதனசார் வாழ்க! தவறிப்போன மனிதர்களைச் சீர்திருத்தும் பொருட்டு உம்மிடம் சிறந்து விளங்குகின்ற அவருடைய வலிமையும் வாழ்க! நான் உமக்குக் கூறுவதாவது: உம்மாலே மனிதர்கள் உம்முடைய தலைவருக்குப் பணிந்து வருவதுடன் மிருகவுயிர்களுமே அவர் சொற்படி கேட்கும்.
6 உம்முடைய சிறந்த விவேகத்தை மக்கள் அனைவரும் மெச்சுகின்றனர். நபுக்கோதனசாரின் நாடெங்கணும் நீர் ஒருவரே நல்லவர், வல்லவர் என்று உலக மாந்தர் பேசிக்கொள்கின்றனர். உமது கட்டுப்பாடு மாநிலம் எங்கும் போற்றப்படுகிறது.
7 மேலும் ஆக்கியோர் உமக்குச் சொன்னது யாவருக்கும் தெரியுமே. அவனுக்குச் செய்யுமாறு நீர் கட்டளையிட்டிருப்பதும் தெரிந்த காரியம் தான்.
8 ஏனெனில் எபிரேயர் செய்த பாவங்களின் பொருட்டு எங்கள் கடவுளுக்கு எவ்வளவு கோபம் மூண்டுள்ளது என்றால், அவர் தம் மக்களுக்கு இறைவாக்கினரை அனுப்பி, "உங்கள் பாவங்களை முன்னிட்டு உங்களைப் பகைவர் கையில் ஒப்படைப்போம், என்று அறிவித்துள்ளார்.
9 இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் தங்கள் கடவுளை மனம் நோகச் செய்திருக்கிறார்கள் என்பதைத் தாங்களே தெளிவாய் அறிந்திருப்பதனால், உமக்கு மிகவும் அஞ்சுகின்றனர்.
10 அதுவுமின்றி அவர்களிடையே பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. குடிக்கத் தண்ணீர் இல்லாமையால் அவர்கள் சாகிறார்கள்.
11 அவர்கள் இப்பொழுது தங்கள் மிருகங்களையே வெட்டி, அவற்றின் இரத்தத்தைக் குடிக்கத் தீர்மானித்திருக்கின்றனர்.
12 தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைத் தொடக்கூடாது என்று கடவுளே விலக்கியிருக்க, அவர்கள் அவற்றையும் உண்ண எண்ணியுள்ளனர். கையால் தொடக் கூடாதவற்றைச் சாப்பிடவும் மனம் கொண்டிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் அதன் பொருட்டு அழிவது திண்ணம்.
13 உம் அடியாளாகிய நான் இதை எல்லாம் அறிந்து தான் அவர்களை விட்டு ஓடி வந்திருக்கிறேன். இதை எல்லாம் உமக்குக் தெரிவிக்க வேண்டுமென்றே ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்.
14 ஏனென்றால் உம் அடியாளாகிய நான் உம்முன் நிற்கும் இந்நேரத்திலும் கடவுளைக் தொழுது கொண்டு தான் இருக்கிறேன். உம்மிடம் விடைப்பெற்று நான் வெளியே போன பின்னரும் அவரை வேண்டிக் கொள்வேன்.
15 எபிரேயர் செய்த பாவத்தின் பொருட்டு, தாம் எப்போது பழிவாங்குவார் என்று என் கடவுள் எனக்கு அறிவிப்பார். அறிவித்தவுடனே நான் திரும்பி இவ்விடம் வந்து உமக்குச் சொல்வேன். அதுமட்டுமன்று, யெருசலேம் நடுவில் நானே உம்மை அழைத்துப் போவேன். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல உம்மைப் பின் தொடர்வர். உம்மைக் கண்டு ஒரு நாய்க் கூடக் குரைக்காது.
16 கடவுள் எனக்கு இவற்றை எல்லாம் முன்னறிவித்துள்ளார்.
17 என் இனத்தார் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விட்டமையால் தான் நான் அவை யாவற்றையும் உமக்கு வெளிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்" என்றாள்.
18 யூதித் சொன்னதைக் கேட்டு ஒலொபெர்னெசும் அவன் ஊழியர்களும் அகமகிழ்ந்தனர். அவளது நுண்ணறிவைக் கண்டு வியந்து அவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்து.
19 இவளைப்போல தோற்றத்திலும் அழகிலும் சொல் வளத்திலும் சிறந்த பெண்மணி உலகில் வேறு எங்கணும் இல்லை" என்று புகழ்ந்து கூறினர்.
20 ஒலொபெர்னெஸ் அவளை நோக்கி, "இந்த மக்களை என் கையில் ஒப்புவிக்கும்படி கடவுள் உன்னை முன்னரே என்னிடம் அனுப்பி வைத்தது மிகவும் சிறந்த செயல்.
21 உனது வாக்குறுதியும் நல்லதே. ஆகையால் உன் கடவுள் இதை எனக்குச் செய்வாராயின் அவர் எனக்கும் கடவுளாய் இருப்பார். நபுக்கோதனசார் அரண்மனையில் நீ உயர்நிலையில் இருப்பதுமன்றி, உன் பெயர் உலகமெங்கும் புகழவும் படும்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், யூதித், ஏற்பாடு, கடவுள், நீர், தான், ", பொருட்டு, பழைய, மக்கள், சிறந்த, தங்கள், ஆகமம், எல்லாம், உம்மிடம், அவர், மனம், நபுக்கோதனசார், கையில், இஸ்ராயேல், அனுப்பி, எபிரேயர், செய்த, உமக்கு, குடிக்கத், எனக்கு, கண்டு, அவளை, அடியாளாகிய, ஒலொபெர்னெஸ், ஆகையால், மிகவும், உமக்குச், ஆண்டவர், வாழ்க, ஏனென்றால், அடியாளின், என்றான், ஆன்மிகம், திருவிவிலியம், விட்டு, இனத்தார், அனைவரும், அவர்களை, நோக்கி, உமக்குக், உம்முடைய, என்னிடம்