பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 ஆண்டவரே, இந்தக் கூக்குரலைக் கேட்டு இரக்கமாயிரும்@ ஏனெனில் நாங்கள் உம் முன்னிலையில் பாவம் செய்தோம்.
3 ஏனெனில் நீர் என்றென்றும் அரியணையில் வீற்றிருக்கிறீர்@ நாங்களோ எந்நாளும் அழிந்து போகிறோம்.
4 எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, இஸ்ராயேலில் இறந்தவர்களின் மன்றாட்டை இப்பொழுதே கேட்டருளும்@ தங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய சொல்லுக்குச் செவிகொடாமல் உமது முன்னிலையில் பாவம் செய்தவர்களுடைய மக்களின் மன்றாட்டையும் கேட்டருளும்@ அவர்களுடைய பாவத்தினால் தான் எங்களுக்குத் தீமைகள் வந்துற்றன.
5 எங்கள் தந்தையர்களின் அக்கிரமங்களை நினைவில் கொள்ளாதீர்@ ஆனால் இந்நாளில் உமது கைவன்மையையும், திருப்பெயரையும் நினைத்துக் கொள்ளும்.
6 ஏனெனில், நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்@ ஆண்டவரே, உம்மையே நாங்கள் வாழ்த்துவோம்.
7 ஏனெனில் உம் திருப்பெயரை நாங்கள் கூவியழைக்கவே, எங்கள் உள்ளங்களில் உம்மைப்பற்றிய அச்சத்தைத் தந்திருக்கிறீர்@ எங்கள் அடிமைத்தனத்தில் உம்மை வாழ்த்துகிறோம்@ ஏனெனில் உமது முன்னிலையில் பாவம் செய்த எங்கள் தந்தையர்களின் அக்கிரமத்தை நாங்கள் எங்கள் உள்ளங்களிலிருந்து அகற்றி விட்டோம்.
8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை விட்டு அகன்று போய், எங்கள் தந்தையர்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், இதோ நாங்கள் இன்று அடிமைத்தனத்தில் அல்லலுறுகிறோம்@ நீர் எங்களைச் சிதறடித்து நிந்தைக்கும் சாபனைக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கினீர்"
9 ஞானம்: இஸ்ராயேலின் தனியுரிமை: இஸ்ராயேலே, வாழ்வளிக்கும் முறைமைகளைக் கேளுங்கள்@ விவேகத்தைக் கற்றுக்கொள்ளக் காது கொடுத்துக் கேளுங்கள்.
10 இஸ்ராயேலரே, நீங்கள் பகைவர்களின் நாட்டில் இருப்பது ஏன்?
11 அந்நிய நாட்டில் தளர்ச்சியுற்றிருப்பது ஏன்? இறந்தவர்களோடு நீங்களும் தீட்டுப்பட்டவர்களாய்ப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு சேர்த்தெண்ணப்படுவது ஏன்?
12 ஞானத்தின் ஊற்றை நீங்கள் கைவிட்டீர்கள்.
13 ஆண்டவரின் வழியில் நீங்கள் நடந்திருந்தால், உண்மையில் முடிவில்லாத சமாதானத்தோடு வாழ்ந்திருப்பீர்கள்.
14 ஞானம் எங்கேயிருக்கிறது, ஆற்றல் எங்கே உள்ளது, அறிவுத் திறன் எங்கிருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்@ அதே சமயத்தில் வாழ்நாளின் நீடிப்பும் நல் வாழ்வும், கண்களின் ஒளியும் சமாதானமும் எங்கிருக்கின்றன என்று அறிந்து கொள்வீர்கள்.
15 ஞானத்தின் இருப்பிடத்தைக் கண்டவன் யார்? அதன் கருவூல அறைகளுள் நுழைந்தவன் எவன்?
16 மக்களினங்களின் தலைவர்கள் எங்கே? பூமியிலுள்ள மிருகங்களை அடக்கி ஆள்பவர்கள் எங்கே?
17 வானத்தின் பறவைகளைக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறவர்கள் எங்கே?
18 மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை வைக்கும் பொன்னையும் வெள்ளியையும் சேமிப்பவர்கள் எங்கே? அவர்களுடைய சேமிப்பு வேலைக்கு முடிவே இல்லை. பணம் சேர்ப்பதற்குத் திட்டங்கள் போட்டு, அதே கவலையாய் இருந்து அளவு கடந்து வேலைகளைச் செய்கிறவர்கள் எங்கே?
19 அவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள், பாதாளத்தில் இறங்கிப் போயினர். அவர்களுக்குப் பதிலாக வேறு மனிதர் கிளம்பியுள்ளனர்.
20 இளைஞர்கள் ஒளியைக் கண்டனர், பூமியில் குடியிருந்தனர்@ ஆனால் நல்லொழுக்க நெறியை அவர்கள் அறியவில்லை.
21 அதனுடைய வழிகளை அவர்கள் கண்டு உணரவில்லை@ அவர்களுடைய மக்களும் அதைப் பின்பற்றவில்லை, முழுதும் விலகி நடந்தார்கள்.
22 கானான் நாட்டில் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தேமான் நாட்டிலும் அதைக் கண்டதில்லை@
23 உலகத்துக்கடுத்த விவேகத்தைத் தேடின ஆகாரின் மக்களும், மேராவின் வணிகர்களும், தேமானின் வியாபாரிகளும், கட்டுக் கதைகளைப் பிதற்றுகிறவர்களும், உலகியல் விவேகத்தையும் அறிவையும் ஆராய்கிறவர்களும் மெய்ஞ்ஞானத்தை அறியவுமில்லை. மெய்வழியைக் கண்டுபிடிக்கவுமில்லை.
24 இஸ்ராயேலே, கடவுளின் கோயில் எவ்வளவு பெரியது! அவருடை சொத்துரிமையாகிய இடம் எவ்வளவு பரந்தது!
25 அது மிகப் பெரிது, எல்லையில்லாதது@ உயரமானது, அளவிறந்தது.
26 அதிலே தான் பண்டைக் காலத்திலிருந்து இராட்சதர்கள் இருந்தனர், மிகவும் உயரமானவர்கள், போரில் வல்லவர்கள்.
27 எனினும் அவர்களை ஆண்டவர் தேர்ந்தெடுக்கவில்லை, அவர்களும் மெய்ஞ்ஞான வழியைக் காணவில்லை, ஆகவே அவர்கள் அழிந்து போனார்கள்.
28 அவர்களிடம் மெய்ஞ்ஞானம் இல்லாததால், தங்கள் அறிவின்மையால் கெட்டார்கள்.
29 வான் வெளிக்கு ஏறிப்போய் ஞானத்தைப் பெற்றுக்கொண்டவன் யார்? கார்மேகங்களினின்று அதை வெளிக் கொணர்ந்தவன் எவன்?
30 கடலைக் கடந்து போய் அதைக் கண்டுபிடித்தவன் யார்? பசும்பொன் கொடுத்து அதனை வாங்கினவன் யார்?
31 அதற்குச் செல்லும் வழியை அறிந்தவனுமில்லை, அந்த வழியைப் பற்றிக் கவலைப்படுபவனுமில்லை.
32 ஆனால் எல்லாம் தெரிந்தவர் அதை அறிந்திருக்கிறார், தம் மெய்ஞ்ஞானத்தினால் அதைக் கண்டடைந்தார், அவரே முடிவில்லாக் காலத்திற்கும் பூமியை நிலைநாட்டினார், பல்வகை மிருகங்களாலும் உயிர்களாலும் நிரப்பினார்.
33 அவர் ஒளியை அனுப்புகிறார், அது புறப்படுகின்றது@ அதைத் திரும்ப அழைக்கிறார், அச்சத்தோடு கீழ்ப்படிகிறது.
34 தத்தம் சாமத்தில் விண்மீன்கள் ஒளிவீசின, மகிழ்ச்சியாய் இருந்தன.
35 அவற்றை அவர் அழைத்தார், அவை, "இதோ இருக்கிறோம்" என்றன@ தங்களை உண்டாக்கியவருக்காக இன்பத்தோடு ஒளி வீசின.
36 அவரே நம்முடைய கடவுள், அவருக்கு இணையானவர் ஒருவருமில்லை!
37 உண்மையறிவின் வழியனைத்தும் கண்டவர் அவரே, தம் ஊழியனாகிய யாக்கோபுக்கு அதைக் கையளித்தார், தம் அன்புக்குரிய இஸ்ராயேலுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
38 அதன்பிறகு அந்த ஞானம் பூமியின் மேல் தோன்றிற்று, மனிதர்கள் நடுவில் குடிகொண்டிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு, எங்கள், எங்கே, நாங்கள், ஏனெனில், ஏற்பாடு, ஆண்டவரே, யார், அதைக், பழைய, பாரூக், உமது, அவர்களுடைய, ஞானம், நாட்டில், நீங்கள், ஆகமம், தங்கள், கடவுளாகிய, அவரே, உம்மை, எல்லாம், முன்னிலையில், பாவம், அழிந்து, இஸ்ராயேலின், அறிந்து, எவ்வளவு, எவன், போனார்கள், அந்த, அவர், மக்களும், கடந்து, மனிதர்கள், தான், கடவுளே, நீர், வல்ல, ஆன்மிகம், திருவிவிலியம், கேட்டருளும்@, தந்தையர்களின், இஸ்ராயேலே, பாதாளத்தில், போய், செய்த, அடிமைத்தனத்தில், ஞானத்தின்