பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 4
2 யாக்கோபே, மனந்திரும்பு@ அதைக் கைப்பற்றிக்கொள்@ அதன் ஒளிச் சுடரையும், வீசும் வெளிச்சத்தையும் நோக்கி நட.
3 உன்னுடைய மகிமையைப் பிறனுக்கு விட்டுவிடாதே, உனது பெருமையை அந்நிய நாட்டானுக்கு விட்டுக் கொடுக்காதே.
4 இஸ்ராயேலே, உண்மையாகவே நாம் பேறு பெற்றவர்கள்@ கடவுளுக்கு உகந்தவை நமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
5 யெருசலேமின் முறையீடுகளும் நம்பிக்கைகளும்: இஸ்ராயேலின் நினைவுச் சின்னமாய் இருக்கிற இனமே, என் குடிமக்களே, தைரியமாயிருங்கள்.
6 அழிந்து போவதற்காகப் புறவினத்தாரிடம் நீங்கள் விற்கப்படவில்லை@ ஆனால் நீங்கள் கடவுளின் கோபத்தை மூட்டியதால் தான் எதிரிகளுக்குக் ககையளிக்கப்பட்டீர்கள்.
7 ஏனெனில் கடவுளுக்குப் பலியிடாமல் பேய்களுக்குப் பலியிட்டு, உங்களை உண்டாக்கிய கடவுளுக்கு எரிச்சல் உண்டு பண்ணினீர்கள்.
8 உங்களை உண்பித்து வந்த நித்திய கடவுளை மறந்தீர்கள், உங்களை வளர்த்து வந்த யெருசலேமைத் துயரப்படுத்தினீர்கள்.
9 கடவுளுடைய கோபம் உங்கள் மேல் வருவதைக் கண்டு, யெருசலேம் சொன்னது: "சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள்@ கடவுள் எனக்குப் பெருந்துயரத்தைத் தந்திருக்கிறார்.
10 ஏனெனில் என் மக்களையும், புதல்வர், புதல்வியரையும் நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கினதைக் காண்கிறேன்.
11 அவர்களை நான் மகிழ்ச்சியோடு வளர்த்து வந்தேன், இப்பொழுது, அழுகையோடும் கண்ணீரோடும் போக விட்டிருக்கிறேன்.
12 நான் கைம்பெண்ணாகித் துன்புறுவதைக் கண்டு எவனும் மகிழாதிருக்கட்டும்@ என் பிள்ளைகளின் பாவங்களை முன்னிட்டுப் பலராலும் நான் கைவிடப்பட்டேன்@ ஏனெனில் என் மக்கள் கடவுளின் கட்டளையை மீறினார்கள்.
13 கடவுளின் நீதி முறைமைகளை அவர்கள் கண்டறியவில்லை@ அவருடைய கற்பனைகளின்படி நடக்கவுமில்லை@ அவருடைய உண்மையான வழிகளில் நேர்மையோடு நடக்கவுமில்லை.
14 சீயோனின் சுற்றுப்புறத்தார் இப்பொழுது வரட்டும், நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கிய என் புதல்வர், புதல்வியரை நினைத்துக் கொள்ளட்டும்.
15 ஏனெனில் அவர்களுக்கு எதிராகத் தொலை நாட்டினரையும், கொடிய மக்களையும் வேற்று மொழியினரையும் கடவுள் கொண்டு வந்தார்.
16 இவர்களோ கல்நெஞ்சம் கொண்டவர்கள், முதியோரை மதிக்காதவர்கள், இளஞ் சிறுவர்களுக்கு இரங்காதவர்கள், கைம்பெண்ணின் அன்பு மக்களை நடத்திச் சென்றார்கள், மக்களைப் பிரித்து அவளைத் தனியள் ஆக்கினார்கள்.
17 ஆனால் நான் உங்களுக்கு எவ்வகையில் உதவக்கூடும்?
18 ஏனெனில் உங்கள் மேல் இத்தீமைகளை வரச்செய்தவர் யாரோ, அவரே உங்கள் பகவைர் கையினின்று உங்களை மீட்பார்@
19 போங்கள், என் மக்களே, நடந்து செல்லுங்கள்@ நானோ கைவிடப்பட்டவள்@ தனியளாய் இருக்கிறேன்.
20 அமைதியின் ஆடையைக் களைந்து விட்டேன், தவத்துக்குரிய மயிராடையை உடுத்துக் கொண்டேன், என் வாணாளெல்லாம் உன்னதரை நோக்கி ஒலமிடுவேன்.
21 என் மக்களே, தைரியமாயிருங்கள். ஆண்டவரைப் பார்த்துக் கூக்குரலிடுங்கள்@ பகை மன்னர்களின் வல்லமையினின்றும் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.
22 நித்தியர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது@ பரிசுத்தரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிட்டியது, ஏனெனில் நித்திய மீட்பர் உங்கள் மேல் இரங்குவார்.
23 அழுகையோடும் புலம்பலோடும் உங்களை அனுப்பினேன், ஆனால் மகிழ்ச்சியோடும் முடிவில்லா அக்களிப்போடும் உங்களை ஆண்டவர் மீண்டும் என்னிடம் கூட்டி வருவார்.
24 ஏனெனில் சீயோனின் சுற்றுப்புறத்தார், கடவுள் உங்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கியதைக் கண்டது போலவே, மிகுந்த மகிமையோடும் முடிவில்லா ஒளியோடும் கடவுளிடமிருந்து விரைவில் உங்களுக்குக் கிடைக்கப் போகிற மீட்பையும் காண்பார்கள்.
25 மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மேல் வந்துள்ள, கோபத்தின் தண்டனையைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளுங்கள்@ உங்கள் பகைவன் உங்களைத் துன்புறுத்தியுள்ளான்@ ஆனால் விரைவில் அவன் அழிவதைக் காண்பீர்கள், அவன் தலைகளை உங்கள் காலால் மிதிப்பீர்கள்.
26 மென்மையான என் மக்கள் கரடு முரடான வழிகளில் நடந்தனர், பகைவர் பறித்துச் செல்லும் மந்தை போலச் கடத்திச் செல்லப் பட்டார்கள்.
27 மக்களே, தைரியமாயிருங்கள், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள்@ ஏனெனில் உங்களுக்கு இத்துயரம் அனுப்பியவர் உங்களை மறக்க மாட்டார்.
28 கடவுளை விட்டு அகன்று போவதே முன்பு உங்கள் கருத்தாய் இருந்தது போல் இப்பொழுது மீண்டும் அவரிடம் திரும்பிய பிறகு, பத்து மடங்கு ஆர்வத்தோடு அவரைத் தேடுங்கள்.
29 ஏனெனில் இந்தத் தீமைகளை உங்கள் மேல் வரச் செய்தவரே முடிவில்லாத மகிழ்ச்சியையும் மீட்பையும் உங்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்."
30 யெருசலேமே, தைரியமாயிரு@ ஏனெனில் உனக்கு இப்பெயரை இட்டவரே உனக்கு ஆறுதல் கொடுப்பார்.
31 உன்னைக் கொடுமைப் படுத்தி உன் அழிவைக் கண்டு மகிழ்ந்தவர்களுக்கு ஐயோ கேடு!
32 உன் மக்கள் அடிமை ஊழியம் செய்யும் பட்டணங்களுக்கு ஐயோ கேடு! உன் புதல்வர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரத்துக்கு ஐயோ கேடு!
33 ஏனெனில் உன் அழிவைக் கண்டு அது மகிழ்ந்தது போல், உன் வீழ்ச்சியைப் பார்த்து அக்களித்தது போலத் தனக்கு வரும் கேடுகளைப் பார்த்துத் துயரமடையும்.
34 அதன் குடிகளின் மகிழ்ச்சி ஆரவாரமெல்லாம், முற்றிலும் அடங்கிவிடும்@ அதன் செருக்கு அழுகையாய் மாறி விடும்.
35 நித்தியமானவரிடமிருந்தது பல நாட்களுக்கு அதன் மேல் நெருப்பு பொழியப்படும்@ பன்னெடுங் காலத்திற்கு அது பேய்களின் இருப்பிடமாயிருக்கும்.
36 யெருசலேமே, கீழ்த்திசைப் பக்கம் நோக்கு@ கடவுள் உனக்கு அனுப்பும் அகமகிழ்ச்சியைப் பார்.
37 உன்னை விட்டுப் பிரிந்து போன உன் மக்கள் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்@ கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடி கடவுளின் மகிமைக்காக மகிழ்ச்சியோடு வருகிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனெனில், உங்களை, உங்கள், மேல், ஏற்பாடு, கண்டு, கடவுள், நான், மக்கள், கடவுளின், பழைய, மக்களே, அடிமைத்தனத்திற்கு, பாரூக், தைரியமாயிருங்கள், கேடு, சீயோனின், இப்பொழுது, உனக்கு, ஆகமம், மகிழ்ச்சி, கூக்குரலிடுங்கள்@, உங்களுக்கு, எனக்கு, கடவுளிடமிருந்து, போல், கொடுப்பார், யெருசலேமே, அழிவைக், அவன், மீட்பையும், மீண்டும், சுற்றுப்புறத்தார், விரைவில், முடிவில்லா, புதல்வர், கடவுளுக்கு, நீங்கள், வந்த, நோக்கி, இதைக், திருவிவிலியம், ஆன்மிகம், கடவுளுடைய, நித்திய, கடவுளை, மகிழ்ச்சியோடு, அழுகையோடும், அவருடைய, நித்தியமானவர், மக்களையும், வளர்த்து, ", வழிகளில்