பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச। அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே॥ 15.9 ॥ |
காது, கண், உடம்பு, நாக்கு, மூக்கு, மனம் இவற்றை பற்றிக்கொண்டு ஜீவன் விஷயங்களை அனுபவிக்கிறான்.
உத்க்ராமந்தம் ஸ்திதம் வா அபி பும்ஜாநம் வா குணாந்விதம்। விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ:॥ 15.10 ॥ |
உடலை விட்டு செல்லும் போதும், உடலுடன் இருக்கும் போதும், இன்பதுன்பங்களை அனுபவிக்கும் போதும், குணங்களுடன் கூடியவனாக இருக்கும் போதும் எந்த நிலையிலும் ஜீவனை மூடர்கள் காண்பதில்லை. புத்தி விழித்தெழ பெற்றவர்கள் காண்கிறார்கள்.
யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்। யதந்தோ அப்யக்ருதாத்மாநோ நைநம் பஷ்யம்த்யசேதஸ:॥ 15.11 ॥ |
முயற்சி செய்கின்ற யோகிகள் இந்த ஜீவனை தங்களுள் இருப்பதாக காண்கிறார்கள். மனத்தூய்மை பெறாதவர்களும் தன்னறிவற்றவர்களும் முயற்சி செய்தாலும் இதனை காண்பதில்லை.
யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதே அகிலம்। யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்॥ 15.12 ॥ |
சூரியனில் உள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த ஒளி சந்திரனிலும் அக்னியிலும் திகழ்கிறதோ, அந்த ஒளி என்னுடையது என்று அறிவாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, போதும், பகவத்கீதை, பதினைந்தாவது, ஸ்ரீமத், எந்த, அத்தியாயம், புருஷோத்தம, யோகம், காண்கிறார்கள், யதந்தோ, முயற்சி, காண்பதில்லை, இந்து, bhagavad, gita, இருக்கும், ஜீவனை