பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா। புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥ 15.13 ॥ |
நான் என் சக்தியால் பூமியில் புகுந்து உயிர்களை தாங்குகிறேன். உயிர் சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி மூலிகைகளை எல்லாம் வளர்கிறேன்.
அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித:। ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்॥ 15.14 ॥ |
நான் உயிர்களின் உடம்பில் வைசுவாணர அக்னியாக இருந்துகொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்ச। வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்॥ 15.15 ॥ |
நான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை தோற்றுவித்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே.
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச। க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே॥ 15.16 ॥ |
நிலையற்றது என்றும் நிலையானது என்றும் உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தோன்றிய அனைத்தும் நிலையற்றவை என்ற பிரிவில் வருகின்றன. தோன்றிய அனைத்தின் உள்ளே இருப்பவன் நிலையானவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினைந்தாவது, நான், ஸ்ரீமத், அத்தியாயம், யோகம், புருஷோத்தம, எல்லாம், நானே, என்றும், தோன்றிய, பூதாநி, gita, இந்து, bhagavad, பூத்வா