பாடல் 999 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான |
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென் ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின் காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 999 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, அடைந்து, தாத்தன, தந்தன, உன்னை, புகழ், பெருமாளே, னும்படி, நீங்காத, வகையில்