பாடல் 984 - இராமேசுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான |
வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர் மீதே பணிக்கும்வகை ...... யறியாதே மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி லூடே யணைத்துதவு ...... மதனாலே தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக ளேதோ வெனக்கலவி ...... பலகோடி தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி னூடே கிநிற்குமிரு ...... கழலோனே மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை வீரா குறச்சிறுமி ...... மணவாளா ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை நாணா துரைக்குமொரு ...... பெரியோனே நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு ராமே சுரத்திலுறை ...... பெருமாளே. |
தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல், மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால், தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ? மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே, மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே, திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 984 - இராமேசுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தனத்ததன, போரில், பெரியோனே, பெருமாளே