பாடல் 961 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான |
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உருவச் செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே பருகித் தின்றிட லஞ்சுக மெனமன துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே பலருக் குங்கடை யென்றெனை யிகழவு மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு திரமிற் றங்கிய கும்பக னொருபது தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே வடவெற் பங்கய லன்றணி குசசர வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே. |
* சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.
** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 961 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தருகின்ற, என்னும், தனனத், வாய்ந்த, தனதன, கரன், தனது, வளர்ந்த, உள்ள, நல்ல, அழகிய, இரண்டு, றங்கிய, தந்தரு, சங்கரி, முருகோனே, பங்கய, பெருமாளே