பாடல் 960 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான |
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ் சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச் சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை பாவ மானபிற விக்கடலு ழப்பவனை தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ வாத வூரனைம தித்தொருகு ருக்களென ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ் மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு ராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின் மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே. |
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கி கடலுள் மறைந்தான். திருமால் மச்சாவதாரம் எடுத்து சோமுகனைக் கொன்று வேத நூல்களை மீட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 960 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, பாதம், விளங்கும், மார்க்கம், தானதன, ஆகிய, உள்ள, தொழில், இடுதல், கொண்டு, ஞானம், உடல், துன்பம், மாது, தேமல், மீது, மாலை, என்னும்படி, அறிவு