பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல் - திருப்புகழ்

ராகம் - சுத்த தன்யாசி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனாத் தானத் ...... தனதான |
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே தொண்டராற் காணப் ...... பெறுவோனே துங்கவேற் கானத் ...... துறைவோனே மிண்டராற் காணக் ...... கிடையானே வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே. |
* திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எவ்வாறு, நான், அவ்வாறு, தேடிக், காணக், பெருமாளே