பாடல் 896 - அத்திக்கரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான |
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை சுற்றிக்கல னிட்டுக் கடிதரு சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே சுத்தத்தைய கற்றிப் பெரியவர் சொற்றப்பிய கத்தைப் புரிபுல சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல் முக்குற்றம கற்றிப் பலகலை கற்றுப்பிழை யற்றுத் தனையுணர் முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே முத்தித்தவ சுற்றுக் கதியுறு சத்தைத்தெரி சித்துக் கரையகல் முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே திக்கெட்டும டக்கிக் கடவுள ருக்குப்பணி கற்பித் தருளறு சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர் செச்சைப்புய மற்றுப் புகவொரு சத்திப்படை விட்டுச் சுரர்பதி சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே அக்கைப்புனை கொச்சைக் குறமகள் அச்சத்தையொ ழித்துக் கரிவரும் அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே அப்பைப்பிறை யைக்கட் டியசடை அத்தர்க்கரு மைப்புத் திரவிரி அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே. |
* புலி நால்வகைச் சாந்துகளில் ஒன்று (பீதம், கலவை, வட்டிகை, புலி).
** அத்திக்கரை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 896 - அத்திக்கரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீக்கி, தத்தத்தன, தனதன, தத்தத், கொண்டு, தேவர்கள், புலி, நான், என்னும், நிலையை, கற்றிப், அத்திக்கரை, பெருமாளே, பரிசுத்தமான, செய்யும்