பாடல் 886 - சப்த.தானம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன ...... தனதான |
மருவு லாவிடு மோதி குலைப்பவர் சமர வேலெனு நீடு விழிச்சியர் மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் மதன னோடுறழ் பூச லிடைச்சியர் இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே சருவி யாரையும் வாவெ னழைப்பவர் பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே சலச மேவிய பாத நினைத்துமுன் அருணை நாடதி லோது திருப்புகழ் தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே அரிய கானக மேவு குறத்திதன் இதணி லேசில நாளு மனத்துடன் அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட உழவர் சாகர மோடி யொளித்திட அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே திருவின் மாமர மார்ப ழனப்பதி அயிலு சோறவை யாளு துறைப்பதி திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச் சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே. |
* இடைக்கு மன்மதனை உவமித்த காரணம், மன்மதன் சிவசாபம் காரணமாக அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியான், பெண்களின் இடை மெலிந்து அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது.
** இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் - தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 886 - சப்த.தானம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பெரிய, தானன, உடையவர்கள், தனத்தன, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, கண்ணுக்குத், திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருவையாறு, இருப்பதால், திருநெய்த்தானம், அருவமாக, தோறும், போருக்கு, பெருமாளே, தேடி, யாரையும், அருமையான, வாழ்கின்ற, திருப்பழனம், மனம், நான், என்னும்