பாடல் 861 - திருவிடைமருதூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதனதன தான தானன தனதனதன தான தானன தனதனதன தான தானன ...... தந்ததான |
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின் விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே. |
* முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானை வாகனமும் உண்டு.
** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 861 - திருவிடைமருதூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனதன, மாயை, சேனைகள், தானன, அலைகள், என்னும், யானை, ஓடவும், மீதும், உள்ள, மீது, தம்பிரானே, கொண்ட, நின்று, வரும்