பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி - திருப்புகழ்

ராகம்
- ஸிந்துபைரவி
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன ...... தனதான |
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல் சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே சிங்கார ரூபமயில் வாகனந மோநமென கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென கங்காள வேணிகுரு வானவந மோநமென திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே. |
* சங்கோதை நாதம் - யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம் ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும், குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது - பெரிய புராணம்.
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, தானதன, மோநமென, மிக்க, சிவபிரான், தந்தான, போல், மயில், புராணம், காதில், நிறைந்த, சங்கோதை, சிங்கார, பெருமாளே, அசைய, தாளம், அணிந்த