பாடல் 800 - தான் தோன்றி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன ...... தனதான |
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல் வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய் வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு ...... மடிபேண மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித் தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே. |
* தான்தோன்றி இப்போது 'ஆக்கூர்' என வழங்கப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 800 - தான் தோன்றி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நல்ல, தாந்தாந்த, தான்தோன்றி, தத்ததன, ஆய்ந்து, பெருமாளே