பாடல் 779 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ்

ராகம் -
வாசஸ்பதி
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தனத்தன தானத் ...... தனதான |
உரத்துறை போதத் ...... தனியான உனைச்சிறி தோதத் ...... தெரியாது மரத்துறை போலுற் ...... றடியேனும் மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே வரத்துறை நீதர்க் ...... கொருசேயே வயித்திய நாதப் ...... பெருமாளே. |
உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போன்று இருந்து அடியேனும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ? மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே, உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே, வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே, வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 779 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே