பாடல் 736 - தேவனூர் - திருப்புகழ்

ராகம் - மாண்ட்
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன ...... தந்ததான |
காணொ ணாதது உருவோ டருவது பேசொ ணாதது உரையே தருவது காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது மாய மாயுட லறியா வகையது காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் பேணொ ணாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் பேரு மாய்கலை யறிவாய் துரியவ தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே வீணொ ணாதென அமையா தசுரரை நூறி யேயுயிர் நமனீ கொளுவென வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே வேத நான்முக மறையோ னொடும்விளை யாடி யேகுடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ் ஞான யோகிக ளுளமே யுறைதரு தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே. |
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 736 - தேவனூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இருப்பதும், முடியாததும், ணாதது, தனதன, தனனா, தகதிமி, தானன, அறியமுடியாத, திருவருள், உள்ள, வெளியிலே, வகையில், தம்பிரானே, வகையது, வெளியே, நான்முக, நிற்பதும்